Category: Daily Manna

நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் ஆண்டவரிடமே உள்ளது

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! வாழ்வு தரும் உணவாக வந்த நம் ஆண்டவர் அவரையே தியாகப்பழியாக நமக்கு கொடுத்து நம்மை இந்த உலகத்தில் வாழும் நிலையில்லாத வாழ்விலிருந்து மீட்டு என்றென்றும் அவரோடு கூடவே வாழும் நிலையான வாழ்வை நாம் பெற்றிட இந்த பூமிக்கு இறங்கி வந்து நம்முடைய கவலைகள்,கஷ்டங்கள் யாவையும் நாம் மறந்து அவரோடு சந்தோஷமாக இருக்கும்படி தம் உடலாகிய மன்னாவை நற்கருணை வாயிலாக நமக்கு அளித்து,அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற்றுக்கொள்ள வேண்டுமாய் தமது பிதாவின் திருவுளத்தை அப்படியே நிறைவேற்றி இன்றுவரை நம்மை வழிநடத்தி வந்திருக்கிறார். இனிமேலும் வழிநடத்துவார். நற்கருணை என்பதை ஒரே வரியில் சொல்வோமானால் அது ஆண்டவரின் உயிருள்ள பிரசன்னம் என்று சொல்லலாம். அதை வாழ்வுதரும் உணவாக புசிக்கும் நாம் எல்லாவற்றிலும் அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து நம்முடைய செயல்கள் யாவும் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்கும்படி நடந்துக்கொள்ள வேண்டும். கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல் ஆகும். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு இயேசுவே! இந்த உணவை எவராவது...

கடவுள் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தை அறிந்தவர்.

அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த சகோதர, சகோதரிகளுக்கு, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாளிலும் நம்முடைய ஆண்டவராகிய தேவன் நம் ஒவ்வொருவரின் இருதயத்திலும் வாசம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்று வேதம் சொல்கிறது. நாம் இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாய் வாழ்ந்தோமானால் ஆண்டவர் நம் இதயத்தில் வந்து தங்குவார். நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கு அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாங்களையும் கைக்கொண்டு நம்முடைய இதயத்தை அவரிடத்தில் சமர்ப்பிப்போம். ஆண்டவரே கடவுள்: வேறு எவரும் இல்லை என்று உலகில் வாழும் எல்லா மக்களும் அறிந்து கொள்ள வேண்டுமாய் மனிதனின் இதயத்தில் வாழ விரும்புகிறார். ஆனால் நாம் அவரை கண்டு கொள்ளாமல் நமது விருப்பப்படி நடந்தால் அவரும் நம்மை கண்டு கொள்ளாமல் இருப்பார். சிலவேளைகளில் கண்டித்து உணர்த்துவார். அப்பொழுதும் நம் இதயத்தை கடினப்படுத்துவோமானால்  அவர் நம்மை விட்டு விலகிடுவார். நமக்கு கிடைத்த பொக்கிஷத்தை நழுவ விடாமல் காத்துக்கொள்வோம். ஏனெனில் நமது இதயத்தில் எண்ணங்களும்,...

தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறிய நமக்கு அருளப்பட்டது.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்தநாளிலும் ஆண்டவர் நமக்கு அருளிய அவருடைய மகிமையின் ராஜ்யத்தை நாம் அலட்சியம் செய்யாமல் அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து, பயந்து நடந்து அந்த ராஜ்யத்தில் பங்குபெறும் பேற்றை அடைவோமாக. ஆண்டவரைப்பற்றி அறிந்தும் அவரை ஏதோ கோடி தெய்வத்தில் அவரும் ஒருவர் என்று இல்லாமல், அவர் ஒருவரே தெய்வம் என்று உணர்ந்தவர்களாய் செயல்படுவோம். எவ்வளவோ பேர்கள் அறிந்தும் அலட்சியம் செய்வதுபோல் நாம் இல்லாமல் அவர் காட்டும் வழியில் நடந்து அவருக்கே மகிமை உண்டு பண்ணுவோம். கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துக கொள்ளாமலும் இருக்காதபடிக்கு நம்முடைய இருதயத்தில்உணர்ந்து மனந்திருந்துவோம். ஏனெனில் அநேக மக்கள் கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள். எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கிறார்கள். நானும் அவர்களை குணமாக்காமல் இருக்கிறேன். உங்கள் கண்களோ பேறுபெற்றவை. ஏனெனில்...

பாசம்

ஒரு ஊரில் மிகவும் சந்தோஷமாக டேவிட்டின் குடும்பம் வாழ்ந்து வந்தனர்.ஒருநாள் டேவிட்டின் பிள்ளைகள் இரண்டு பேரும்,அக்காவும், தம்பியுமாக சேர்ந்து அவர்கள் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது தம்பி தனது அக்காவிடம் அக்கா வா அருகில் ஒரு ஆறு ஓடுகிறது. நாம் அதை பார்த்து விட்டு வரலாம்,என்று கூப்பிட்டான். அக்கா தனது தம்பியிடம் வேண்டாம் என்று சொல்லியும் தம்பி பிடிவாதமாக கூப்பிட்டதால் அக்காவும் மனமிரங்கி சரி தம்பியின் ஆசையை நிறைவேற்றலாம் என்று நினைத்து போகலாம் என்று சொன்னாள். இருவரும் சேர்ந்து ஒரு ஒத்தையடி பாதை வழியாக நடந்து பக்கத்தில் உள்ள எல்லா இயற்கை காட்சிகளையும் கண்டு களித்தவாறு போய் கொண்டு இருந்தனர். அவர்கள் தங்களை மறந்த நிலையில் சந்தோஷமாக இருந்ததால் வெகு தொலைவில் வந்துவிட்டனர். பிறகுதான் தெரிந்தது, தாங்கள் வெகு தொலைவில் வந்துவிட்டோமே என்று, திடீரென்று அச்சமயத்தில் பனிமழை பொழிய ஆரம்பித்தது. தாங்கள் வந்த பாதை தெரியாமல் இருவரும் தடுமாறினார். நேரம் ஆக, ஆக இருட்ட ஆரம்பித்தது.இருட்டில் பாதை தெரியாமல் எப்படியாவது வீடு போய் சேர வேண்டும்...

அன்பின் ஆழத்தை உணர்ந்து செயல்படுவோம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் அன்பை நம் இதயத்தில் உணர்ந்து செயலில் காட்டி நன்றியுள்ளவர்களாய் இருப்போம். அன்பைக் குறித்து தீவிரமாக யோசித்துப் பார்ப்போமானால் அதின் செயல்பாடு யாவும் இனிமையாகவே இருக்கும். ஆனால் நாம்தான் அப்பேற்பட்ட  அன்பின் ஆழத்தை உணராமல் கோபம், பொறாமை, சண்டை, வாக்குவாதம் என்று நம்மை கெடுத்துக்கொள்கிறோம். நாம் ஒருவர்மேல் உண்மையான அன்பு வைத்தோமானால் அவர்களை எந்த சூழ்நிலையிலும் வெறுக்கவே மாட்டோம். நம் மனது அவர்களையே சுற்றி சுற்றி வரும். அவர்கள் சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? எப்படி இருக்கிறார்கள்? என்று நம் மனது நினைத்துக்கொண்டே இருக்கும். ஒரு தாய் தன் குழந்தையை இப்படித்தான் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகையால்தான் ஆண்டவரும் ஒரு தாய் தேற்றுவதுப்போல் நான் உங்களை தேற்றுவேன் என்று சொல்கிறார். தாய், பிள்ளை அன்பு மட்டும் அல்ல. அண்ணன், தங்கை, அக்கா, தம்பி நண்பர்களிடம் வைக்கும் அன்பு என்று உறவில் வித்தியாசம் வருமே தவிர அன்பில் எந்த வித்தியாசமும் கிடையாது. கடவுள் நம்மேல்...