Category: Daily Manna

உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்

ரகு முதன் முதலாக வீட்டை விட்டு பிரிந்து ஹாஸ்டல் செல்ல அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான். + 2 வரைக்கும் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த ரகு காலேஜில் சேர்வதற்காக, அங்கு ஹாஸ்டலில் தங்கி படிப்பதற்காக கிளம்பினான். ரகு மிகவும் பொறுமையான, அன்பான மாணவன். ஏனெனில் அவனின் பெற்றோர் அவனை நல்ல முறையில் கடவுளுக்கு பயந்து நடக்கும் வழியில் வளர்த்து இருந்தார்கள். சிறிது பயத்தோடு முதல்நாள் வகுப்புக்கு சென்றான். அங்கு இவனோடு படித்த இரண்டு மாணவர்களும் இருந்தார்கள். அதனால் ரகுவிற்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது. இவர்கள் மூவரும் ஒரே அறையில் தங்கிக்கொண்டனர். அதனால் எங்கு போனாலும் மூவரும் சேர்ந்தே போவார்கள், வருவார்கள். இரண்டு மாதம் கழித்து லீவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு விடுமுறை முடிந்ததும் மறுபடியும் காலேஜிக்கு சென்றான். ஏதோ காரணத்தால் மற்ற இரண்டு பேரும் வரவில்லை. ரகு அலைபேசியில் அழைத்து கேட்டதற்கு இரண்டுநாள் கழித்து வருகிறோம் என்று சொன்னார்கள். அதனால் அன்று ரகு தனியாக ஹாஸ்டலில் இருந்து தன் வகுப்புக்கு போனான். மூன்றாம்...

DECIDE

“He took bread, blessed and broke it, and gave it to them. ‘Take this,’ He said, ‘this is My body.’ ” –Mark 14:22 At the Passover meal, Jesus took bread and said: “This is My body.” Then He took a cup of wine and said: “This is My blood, the blood of the covenant” (Mk 14:24). Jesus means this literally. Despite losing many of His disciples because of this (Jn 6:60, 66), Jesus insisted that His flesh was real food and His blood real drink (Jn 6:55). Do you believe that Jesus gives us His body and blood in Holy...

Prayer Is Boundless

At Gibeon the Lord appeared to Solomon during the night in a dream, and God said, “Ask for whatever you want Me to give you”.  1 King 3:5 Many people get irritated with long-winded people who obscure the real issue behind a flood of words instead of asking something outright. A similar situation can arise in your prayer life. The Old Testament prayer warriors were completely open and honest when they spoke with the Lord. They did not hide or hold anything back. Their confessions were complete and revealing, their requests were real and humble. When presenting you requests to...

கடவுள் தமது பேரன்பால் நம்மை எதிர்கொள்ள வருவார்.தி.பா 59 : 10

துன்ப வேளைகளில் என்னை நோக்கி கூப்பிடுங்கள்: உங்களைத் காத்திடுவேன். நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள். தி.பா 50 : 15. கடவுள் நம்மேல் வைத்த பேரன்பினால் நாம் எப்பொழுது கூப்பிட்டாலும் நம் முன் வந்து நிற்பார். நம்மூடைய உள்ளார்ந்த மனக்கண்களால் காண முடியும். அதற்காகவே இந்த உலகில் வந்து ஒரு மனிதனாக பிறந்து நம்மைப்போல் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து சென்றுள்ளார். அதனால் நம்முடைய எல்லா கஷ்டங்களையும், துன்பங்களையும், அவர் அறிந்து வைத்திருக்கிறார். அவருக்கேற்ற பலி நொறுங்குண்ட நெஞ்சமே: நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை அவமதிக்கமாட்டார். ஏனெனில் அவரே சோதனைக்குட்பட்டு துன்பப்பட்டதால் சோதிக்கப் படுவோருக்கு உதவிச் செய்ய அவர் வல்லவரும், நல்லவருமாயிருக்கிறார். எபிரெயர் 2:18. ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியும்:நீர் என்னை அறிவீர்: என்னை நினைவுகூரும்: எனக்கு உதவியருளும்: என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டு பழிவாங்கும்: நீர் பொறுமையுள்ளவர்: என்னைத் தள்ளிவிடாதேயும்: உம் பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்று எரேமியா 15 :15 ல் வாசிப்பதுபோல நாமும் ஆண்டவரை நோக்கி மன்றாடினால் நம் ஜெபத்தைக் கேட்டு எல்லா இக்கட்டுக்கும் விலக்கி...

ஆண்டவரின்மேல் உன் கவலையை போட்டுவிடு.தி.பாடல்கள்.55:22

கடவுள் நம்முடைய மன்றாட்டுக்கு செவிசாய்த்து,நாம் முறையிடும் வேளையில் நம்மை மறைத்துக்கொள்கிறார். நம் விண்ணப்பத்தைக்கேட்டு நம்முடைய கவலைகளை, பாரங்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். கடுந்துயரம் நம் உள்ளத்தை பிளந்தாலும் சாவின் திகில் நம்மை கவ்விக் கொண்டாலும், அச்சமும், நடுக்கமும் நம்மை பற்றிக்கொண்டாலும் நாம் மனம் கலங்க தேவையில்லை. பிசாசு நம் உள்ளத்தை வஞ்சித்து நம்மை ஏமாற்றி நாம் சோர்ந்து போகும் வண்ணமாக சில முயற்சிகளை கையாளப்பார்ப்பான். நாம் அவனுக்கு எதிர்த்து நின்றால் அவன் நம்மைவிட்டு ஓடிடுவான். நாம் சோர்ந்து போனால் இதுதான் சமயம் என்று நம்மை ஒழிக்கப்பார்ப்பான். ஆகையால் நம் கவலைகளை ஆண்டவரின்மேல் போட்டுவிட்டால் அவர் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்துக்கொள்வார். அதற்காகத்தான் நாம் தினந்தோறும் ஆண்டவரின் வார்த்தைகளை வாசித்து தியானிக்கும்பொழுது அவ்வார்த்தை நம்மை ஒவ்வொருநாளும் மெருகேற்றி நாம் வழிதப்பி போகாதபடிக்கு நமக்கு போதித்து அறிவுரை வழங்கும். யாரையும் தெடிசெல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆண்டவரின் வார்த்தை நமக்கு நல்ல வழிக்காட்டியாய் இருக்கும்.அதனால் தான் இயேசுவும் வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்று யோவான் 14 : 6 ல்...