Category: Daily Manna

இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். 2 திமொத்தேயு 3 : 12

உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிக்கொண்டுவிட்டேன்” என்றார்.என்று இயேசுவே யோவான் 16:33 ல் சொல்கிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகை வென்றதால் அவருடைய பிள்ளைகளாகிய நம்மையும் அவரின் துணையோடு  வெற்றிக்கானும்படி செய்வார். அவர் வழியாய் நாம் அமைதியை பெற்றுக் கொள்ளலாம். கிறிஸ்துவ வாழ்க்கை என்பது பஞ்சு மெத்தை வாழ்க்கை இல்லை. நிறைய துன்பங்களும், தொல்லைகளும் நம்மை சூழ்ந்துக்கொண்டு பயமுறுத்தும். ஆனால் அவற்றைக் கண்டு மனம் சோர்ந்து போகாமல் உண்மையாய் விசுவாசத்துடன் நடந்துக்கொண்டால் ஆண்டவர் நமக்கு உதவிச்செய்வார். மன உறுதியையும்,ஊக்கத்தையும் தரும் கடவுள் நமக்கு அருள்புரிவாராக! நமக்கு ஏற்படும் துன்பங்களை கடவுளுக்கு ஏற்புடைய முறையில் தாங்கிக் கொண்டால் அதினால் நமக்கு எத்தனை அதிகமான ஊக்கம் உண்டானது என்று உணரலாம். அதற்கு உதாரணமாக யோபுவின் புத்தகத்தை வாசித்துப்பார்த்தால் நன்கு விளங்கும். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் தன் உடல் முழுதும் நோயினால் தாக்கப்பட்டப்போதும் ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொண்டு அவர் என்னைக்கொன்று போட்டாலும் அவர் மேல் பிரியமாய் இருப்பேன் என்று சொன்ன அவரை...

நம்மைக் காண்கிற தேவன் உறங்குவதுமில்லை,தூங்குவதுமில்லை

விண்ணையும்,மண்ணையும்,உண்டாக்கிய ஆண்டவரிடத்தில் இருந்தே நமக்கு உதவி கிடைக்கும். ஏனெனில் அவரே நம்முடைய கால்கள் இடறாதபடிக்கு பார்த்துக்கொள்வார். அவரே எப்பொழுதும் நம்முடைய வலப்பக்கத்தில் இருந்து, நமக்கு நிழலைப்போல் நம்மோடு கூடவே இருந்து நம்மைக்காத்துக்கொள்வார். நல்ல ஆயனாக,ஒரு தாயாக இருந்து நேற்றும்,இன்றும், நாளையும் காப்பவர் அவரே. முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்ப்போல், அவரின் தலையில் முள்முடியை நமக்காக ஏற்றுக்கொண்டார். எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி பூங்கொத்தின் வாசனைப்போல் மணம் வீசி தமது இரத்தத்தால் நம்முடைய பாவத்தின் அழுக்கை நீங்கச்செய்து நறுமண தைலத்தால் நம்மை அலங்கரித்து நம் இதயத்தில் வாசம் செய்து சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தருபவர் அவரே. வானத்தின் நட்சத்திரங்களை ஒளிரச் செய்கிற தேவன் தூங்காமல், உறங்காமல், நம்மையும் நமது வாழ்க்கையும் ஒளிரச் செய்கிறார். அவரிடம் அன்புக் கொள்ளுகிறவர்களுக்கென்று அவர் ஏற்பாடு செய்து வைத்திருக்கிற காரியங்கள் இதுவரை நம் கண்ணுக்கு புலப்படவில்லை. நமது செவிக்கு எட்டவுமில்லை. மனிதனின் உள்ளமும் அதை அறிந்துக்கொள்ளவில்லை. இவைகளை தூய ஆவியானவர் மூலமாகவெ நமக்கு வெளிப்படுத்துவார். மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் இவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு...

கடவுள் நமக்கு விதித்த வழிகளில் நடப்போம்.இ.ச ; 5 – 33

இந்த நாளிலும் நம் ஆண்டவராகிய கடவுள் நமக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்தவும்,செப்புக்கதவுகளை,உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை தகர்த்து இருளில் மறைத்து வைத்த கருவூலங்களை யும்,புதையல்களையும்,தர காத்திருக்கிறார்.ஏனெனில் நம்மை பெயர் சொல்லி அழைத்த ஆண்டவர் அவரே என்று நாம் அறியும்படிக்கு இதை செய்கிறார். எசாயா 45:2,3. ஆகையால் நாம் அதை பெற்றுக்கொள்ள நம்மை தகுதிப்படுத்த வேண்டுமாய் விரும்புகிறார். நாம் அவர் விதித்த வழிகளில் நடந்தால் நிச்சயம் அவைகளை எல்லாம் பெற்றுக்கொள்வோம் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. ஒளியை உண்டாக்கி, இருளை படைத்து நல்வாழ்வை அமைத்து கொடுப்பவர் அவரே. உலகை உருவாக்கி அதின்மேல் மனிதரை படைத்து, வானத்தை விரித்தவரும் அவரே. அவரின்றி கடவுள இல்லை. நீதியுள்ளவரும்,மீட்பு அளிப்பவரும் அவரே, முழங்கால் அனைத்தும் அவர்முன் மண்டியிட செய்கிறவரும் அவரே. இத்தனை வல்லமை உள்ள தேவனின் திருவுளத்தை அறிந்து அவருக்கு பிரியமாய் நடந்து இந்த தவக்காலத்திலும் அவரின் பிள்ளைகள் என்ற நற்பெயரை பெற்றுக்கொள்வோம்.அப்பொழுது நாம் நினைப்பதற்கு மேலான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம்....

பூமியெங்கும் உலாவும் தேவன்

விண்ணையும்,மண்ணையும்,படைத்த நம் இறைவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பவராக இருக்கிறார்.ஆனால் நாம் தான் அவரிடம் கேட்காமல் நமது விருப்பத்துக்கு செய்துவிட்டு பிறகு மனம் தவிக்கிறோம். அவருடைய கண்கள் நம்மேல் எப்பொழுதும் உலாவிக்கொண்டே இருக்கிறது. நம்மை பாதுகாக்க வேண்டி அவர் கண்ணயர்வதுமில்லை,உறங்குவதும் இல்லை. நமது வலப்பக்கத்தில் எப்பொழுதும் நிழலாய் இருக்கிறார்.திருப்பாடல்கள் 121 – 4,5. ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு,நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று வாக்கு அருளுகிறார்.அவர்மேலேயே நம் முழுநம்பிக்கையும் வைத்து காத்திருந்தால் நாம் ஆசீவாதத்தை பெற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை. ஏனெனில் உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றது. அவரை நம்புவோருக்கு ஆற்றல் அளிக்கிறார். 2 குறிப்பேடு 16 – 9. அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.அதனால் உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்கு புகழ்பாடுங்கள்.அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். மாட்சியை எடுத்துரையுங்கள்.அவரின் வியத்தகு செயல்களை போற்றுங்கள்.ஏனெனில் எல்லா தெய்வத்துக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே! 1 குறிப்பேடு 16 – 14,23,25. வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டோ?...

கல்வாரியின் அன்பு

இந்த உலகத்தில் உள்ள சுவாசமுள்ள யாவும் தம்மை படைத்த கடவுள் மேல் அன்பு கொண்டுள்ளது. அதிகாலையில் எழுந்து பாருங்கள். ஒவ்வொரு பறவை இனங்களும் என்ன அழகாக கூவி ஆண்டவரை போற்றுகிறது. தெருவில் திரியும் ஒரு நாய்க்கு என்றாவது ஒருநாள் சாப்பாடு போட்டால் அது நம்மை பார்க்கும்பொழுது அழகாக வாலை ஆட்டி தன் அன்பை வெளிப்படுத்தும். மனிதர்கள் முதல்கொண்டு எல்லா ஜீவராசிகளும் தம்மை படைத்த கடவுளுக்கு அன்பை வெளிப்படுத்தி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அதனால்தான் கடவுளும், தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு தன் சொந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16. நமக்கு தண்டனை, தீர்ப்பு அளிக்க அல்ல. தமது மகன்மூலம் நம்மை மீட்கவே கடவுள் தமது மகனை உலகிற்கு அனுப்பினார். நீங்கள் யாராயிருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒவ்வொருவருக்கும்தனது உயிரை கல்வாரியில் ஒப்புக்கொடுத்து அடிமையின் கோலம் எடுத்து அவரின் இரத்தத்தால்...