Category: Daily Manna

துணிவோடு இருப்போம்

பழங்காலத்தில் மக்கள் தீய ஆவிகள் காற்று மண்டலத்தில் இருப்பதாக நம்பினர். அவைகள் உணவு மற்றும் தண்ணீர் வழியாக மனிதர்களின் உடலுக்குள் புகுவதற்கு வாய்ப்பிருக்கிற என்பது அவர்களின் எண்ணம். எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி, நமது உடலில் 36 பாகங்கள் வழியாக தீய ஆவிகள் உடலுக்குள் ஊடுறுவமுடியும். ஒவ்வொரு பாகங்களையும் குறிப்பிட்ட தீய ஆவிகள் கட்டுப்படுத்துகிறது என்றொரு நம்பிக்கையும் மக்கள் மனதில் இருந்தது. இப்படிப்பட்ட தீய ஆவி ஒன்றைத்தான் இயேசு அந்த மனிதரிடமிருந்து ஓட்டுகிறார். பழங்காலத்தில் தீய ஆவிகளை ஓட்டுவதற்காக மந்திரவாதிகள் பல செய்முறைகளைப்பின்பற்றினர். உதாரணமாக, பேய்பிடித்தவரின் மூக்கில் வளையம் ஒன்றை மாட்டி, சில மந்திரச்சொற்களை உச்சரித்து பேய் ஓட்டுவர். அதேபோல் ஒரு வகையான செடியின் வேரை, பேய் பிடித்தவரின் அருகே கொண்டுபோக, பேய் ஓடிவிடுவதாகவும் நம்பினர். இப்படி சில செய்முறைகள் மூலமாக பேய்களை ஓட்டுகிறவர்கள் மத்தியில், “வாயை மூடு, இவரைவிட்டு வெளியே போ” என்கிற வெறும் வார்த்தைக்கு, தீய ஆவிகள் கட்டுப்பட்டு ஓடுவதைக்கண்டுதான், இயேசுவை...

மனிதரைப் பிடிப்பவரான அந்திரேயா !

திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர். மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார். இந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன. இயேசுவின் சீடர்கள் தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம். மன்றாடுவோம்: அழைத்தலின் நாயகனே இயேசுவே, அந்திரேயாவை உம் சீடராகப் பெயர் சொல்லி அழைத்ததுபோல, என்னையும் அழைத்ததற்காக நன்றி. அந்திரேயாவைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடரும்...

விழிப்பாயிருங்கள்

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ”விழிப்பாயிருங்கள்” என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ”விழிப்பு” என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ”விழிப்பாயிருத்தலோடு” நெருங்கிப் பிணைந்ததாகும். பயணம் செல்லவிருக்கின்ற வீட்டுத் தலைவர் தம் பணியாளர்களிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். அவர் எந்த நேரத்திலும் வீடு திரும்பக் கூடும். அவர் வருகின்ற வேளையில் பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நன்முறையில் ஆற்றுகின்றனரா எனப் பார்ப்பார். விழிப்பாயிருக்கின்ற பணியாளரே பொறுப்பானவராகவும் செயல்பட்டுத் தம் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவார். வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புத் தேவை. விழிப்பு என்பது வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு உதவும்; வருகின்ற சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளப் பயன்படும்; தடைகளைக் கண்டு தளர்ந்து போகாமல் அவற்றைத் தாண்டிச் செல்கின்ற வலிமையை நமக்குத் தரும். எனவே, விழித்திருப்போர் பொறுப்பான விதத்தில் செயல்படுகின்ற மனிதராக விளங்குவர். இயேசு...

செபத்தின் வல்லமை

சோதனைகளும், சோகங்களும் தவிர்க்க முடியாதவை. அந்த சோதனைகளையும், சோகங்களையும் எதிர்கொள்வது எளிதானதும் அல்ல. அதே வேளையில் அவற்றிற்கு நாம் பலியாகிவிடக்கூடாது என்று, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் இந்த மண்ணகத்தில் வாழ்ந்தபோது, சந்திக்காக சோதனைகளும், சோகங்களும் கிடையாது. ஆனால், அவற்றையெல்லாம், அவர் தவிடுபொடியாக்கினார். தன்னுடைய சோகங்களை, சோதனைகளை தவிடுபொடியாக்கிய தனது அனுபவத்தின் மூலமாக, நமக்கும் அவர் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாகக் கற்றுத்தருகிறார். இயேசு நமக்கு தருகிற ஆலோசனை: ”விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்”. செபம் தான், வாழ்வின் சோதனைகள் மற்றும் சோகங்களிலிருந்து நமக்கு விடுதலை தரவல்லவை. கண்ணியிலிருந்து சிக்க வைப்பதற்கு வல்லமை படைத்தவை. நமது வாழ்க்கை செபத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாம் சரியான முடிவுகள் எடுப்பதற்கும், நமது வாழ்வை சரியான பாதையில் நடத்துவதற்கும் செபம் தான் சிறந்த அருமருந்து. இயேசு பகல் முழுவதும் மக்களுக்குப் போதித்து வருகிறார். பல தூரங்களுக்கு கால்நடையாக நடந்து...

அருங்குறிகள் வெளிப்படுத்தும் செய்தி

காலத்தின் அருங்குறிகளைப்பார்த்து தங்களின் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாதவர்கள் வரப்போகின்ற அழிவிலிருந்து தங்களைக்காப்பாற்றிக் கொள்வது இயலாத காரியம் என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கை விடுக்கிறார். கிறிஸ்து பிறப்பின் தயாரிப்பு காலத்திற்கு முன்னதாக, உலக முடிவையும், இறுதி நாட்களின்போது நிகழும் காரியங்களையும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம். காரணம் நாம் ஒவ்வொரு மணித்துளியும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்தக்கருத்தின் அடிப்படையில் இன்றைய நற்செய்தியை வாசித்தால், இயேசு நமக்குச்சொல்ல வருகிற செய்தியை அறிந்துகொள்ளலாம். வரப்போகிற நிகழ்வு கண்டிப்பாக நிகழும். அது திடீரென்று நிகழும். வரப்போகிற நிகழ்விற்கு இப்போதே நாம் தயாராக இல்லையென்றால், அதை நம்மால் எதிர்கொள்ள முடியாது. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றால், அது நிச்சயமாக முடியாது. ஆனால், அதற்கான அருங்குறிகள் நமக்கு வெளிப்படுத்தப்படும். அந்த அருங்குறிகள் வரும்போதே நாம் நம்மை நன்றாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நோவாவின் வாழ்வு சிறந்த எடுத்துக்காட்டு. நோவாவிற்கு அழிவு வரப்போவதை நடந்த அருங்குறிகளால் கண்டுகொள்கிறார். அவருடைய உள்ளம் வரப்போகிற நிகழ்விலிருந்து,...