Category: Daily Manna

இறைவனின் அருள்

இறைவனுடைய அருளைப்பெறுவது என்பது மிகப்பெரிய பேறு. அதற்கு ஈடுஇணை இந்த உலகத்திலே எதுவும் கிடையாது. அதற்கு மேல் பெறக்கூடிய சிறப்பு இந்த உலகத்திலே இல்லை. மரியாளுக்கு கடவுளுடைய வார்த்தை அறிவிக்கப்பட்டபோது, இத்தகைய மகிழ்ச்சி அவளுள் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், வானதூதர் அவளைப்பார்த்து, ”அருள்மிகப்பெற்றவரே!வாழ்க!” என்று வாழ்த்துகிறார். கடவுளுடைய அருளை அன்னை மரியாள் பெற்றிருக்கிறாள் என்பதுதான் இதனுடைய பொருள். ஆக, அந்த வார்த்தைகள் அன்னை மரியாளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும். அதே வேளையில், கடவுளின் அருள் மற்றொரு அனுபவத்தையும் தாங்கியதாக இருக்கும். அதுதான் மரியாளின் இதயத்தை வாளாக ஊடுருவ இருப்பதாகும். கடவுளின் அருள் கொடுக்கப்படுவது பெற்றுக்கொண்டு வைத்திருப்பதற்கு மட்டும் அல்ல. அது வாரி வழங்கப்படுவதற்காக கொடுக்கப்படுகிறது. அதில், நாம் நமது வாழ்வை, தியாகம் செய்ய வேண்டியது வரலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். ஆனால், கடவுளின் அருளைப்பெறுவதற்கு, எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான், அன்னை மரியாளின் வாழ்வாக இருந்தது....

உறவின் நேரம் !

அன்னை மரியாவும், அவர் உறவினர் எலிசபெத்தும் சந்தித்துக்கொண்ட காட்சியை நற்செய்தியாளர் வர்ணிக்கும் விதமே அலாதிதான். அந்த உறவின் வேளையில் அங்கே நிகழ்ந்த நேர்நிலை நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் நாம் வியப்படையத்தான் செய்வோம்: (1) விரைவு (2) வாழ்த்து. (3) மகிழ்ச்சியின் துள்ளல் (4) தூய ஆவியின் ஆட்கொள்தல் (5) ஆசி வழங்கல். ஆம், அன்னை மரி நமக்கெல்லாம் உறவின் மாதிரியாகத் திகழ்கிறார். உண்மையான, ஆழமான உறவில் விரைவான அன்பின் செயல்பாடு நிகழவேண்டும். உறவில் வாழ்த்தும், ஆசியும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும். உண்மையான மகிழ்ச்சி நிலவ வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அங்கே தூய ஆவியின் துணை வேண்டும். நம்முடைய உறவுகளில் இந்த ஐந்து அம்சங்களும் இருக்கின்றனவா என்று நம்மை ஆய்வு செய்வோம். அத்துடன், இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, இந்த ஐந்து அம்சத் திட்டத்தைக் கடைப்பிடித்து, நமது உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வோம். எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனுப்பும்போது,வாழ்த்தும், ஆசியும், மகிழ்ச்சியும், தூய ஆவியின் செபமும் இணைத்து அனுப்புவோம்....

முன்னோடியின் பணிகள் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25) செக்கரியாவுக்குக் காட்சி தரும் வானதூதர் அவருக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையான திருமுழுக்கு யோவானைப் பற்றி முன்னுரைப்பதை வாசிக்கிறோம். இந்த அறிவிப்பில் இயேசுவின் முன்னோடியான யோவானின் பண்புகளை வானதுhதர் வரிசைப்படுத்துகிறார். (1) அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். (2) அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார். (3) மது அருந்த மாட்டார். (4) துhய ஆவியால் ஆட்கொள்ளப்படுவார். (5) மக்களை ஆண்டவரிடம் திரும்பி வரச்செய்வார். (6) துணிவும் ஆற்றலும் மிக்கவராய் இருப்பார். (7) மக்களிடையே ஒப்புரவை உருவாக்குவார். (8) நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச்செய்வார். (9) இவ்வாறு, ஆண்டவருக்கு ஏற்புடைய மக்களை ஆயத்தம் செய்வார். இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில், இந்த வருகையின் காலத்தில், நாமும் இயேசுவின் முன்னோடிகளாக, ஆண்டவரின் வருகைக்குப் பிறரை ஆயத்தம் செய்பவர்களாக மாற்ற வேண்டாமா? எனவே, நாமும் இந்த ஒன்பது வகையான வழிகளில் மக்களை ஆயத்தம்...

இயேசு என்னும் மீட்பர் !

அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பது வானதூதரின் செய்தி. இயேசு என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பவர் என்பதே அவரது பெயரின் பொருள். கிறிஸ்துமஸ் விழா தரும் செய்தியும் இதுவே. அவர் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பார், விடுவிப்பார். நமது பாவங்களிலிருந்து நாம் நமது சொந்த முயற்சியினால் விடுதலை பெற முடியாது. நமது இயல்பே பாவம் செய்வதற்கேற்ற இயல்பாக அமைந்திருப்பதால், நமது சொந்த ஆற்றலால் விடுதலை பெறவும் இயலாது. எனவே, இயேசுவின் அருளை நாடுகிறோம். அவரது மீட்புக்காக வேண்டுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, நமது வாழ்வில் அவரது மீட்பு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று சிறப்பாக மன்றாடுவோம். மன்றாடுவோம்: மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே, எங்களைப் பாவத்திலிருந்தும், தீமைகள் அனைத்திலிருந்தும் விடுவிக்க வந்தீரே, உம்மைப் Nபுhற்றுகிறோம். உமது மீட்பு இந்த அருளின் காலத்தில் எம்மீது நிறைவாய் இறங்குவதாக....

இயேசுவின் தலைமுறை அட்டவணை !

மத்தேயு நற்செய்தி இயேசுவின் தலைமுறை அட்டவணையோடுதான் தொடங்குகிறது. ஒரு மனிதரின் தலைமுறை வரிசையை எண்ணிப் பார்ப்பது, மத்தேயுவின் காலத்தில் எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அதுபோலவே இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டிலும் முக்கியமானதாகத்தான் இருக்கிறது. ஒரு மனிதரின் நற்பண்புகளும், நல்லியல்புகளும் பெற்றோர் மற்றும் முந்தைய தலைமுறையினரிடமிருந்தே அவருக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம். உள நலப் பண்புகள், படைப்பாற்றல், தலைமைப் பண்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல், அறிவுக் கூர்மை போன்றவை அனைத்துக்கும் நாம் மட்டுமல்ல பொறுப்பு. நமது முன்னோரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதை இன்று அறிவியல் நன்கு எண்பித்துவிட்டது. எனவே, நல்ல முன்னோரிடமிருந்து உடல், உள்ள, சமூக நலனைப் பெற்றுக்கொள்கிறோம். நமது முன்னோர் ஆற்றலும், நன்மைத்தனமும் குறைந்தவர்களாக இருந்தால், நாமும் அப்படியேதான் இருப்போம், பெரிய முயற்சிகள் எடுக்காவிட்டால். எனவே, தலைமுறை அட்டவணை என்பது இன்றளவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே, வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப் பெரிய செல்வம் இன்றைய நல்ல தலைமுறைதான். எனவே,...