Category: Daily Manna

விசுவாசத்தளர்ச்சியைப் போக்குவோம்

யூதர்களுக்கு மூன்று திருவிழாக்கள் முக்கியமானவைகளாக இருந்தன. அவைகள் முறையே, பாஸ்கா திருவிழா, பெந்தகோஸ்து திருவிழா மற்றும் கூடாரத்திருவிழா. யெருசலேம் ஆலயத்திலிருந்து 15 மைல்களுக்குள் வாழும் ஒவ்வொரு யூத ஆண்மகனும், இந்த திருவிழாக்களில் கட்டாயம் கலந்தகொள்ள வேண்டும். இன்றைய நற்செய்திப் பகுதியை யோவான் ஒரு உருவகமாக எழுதியிருக்கலாம் என சிலர் விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். முடக்குவாதமுற்ற மனிதன் இஸ்ரயேல் மக்களை குறிக்கிறவர். ஐந்து தூண்களும் முதல் ஐந்து புத்தகங்களைக் குறிக்கிறது. 38 ஆண்டுகள் என்பது இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் நாடோடிகளாக வாழ்ந்ததைக்குறிக்கிறது. தண்ணீரைக்கலக்குவது என்பது திருமுழுக்கை நினைவூட்டுகிறது. ஆனால், உண்மையில் இயேசுவின் புதுமைகளுள் ஒன்றுதான் இது என்று வாதிடுகிற அறிஞர்கள்தான் ஏராளம். இயேசு அந்த மனிதரிடம் ‘நலம் பெற விரும்புகிறீரா?’ என்று கேட்கிறார். இயேசுவின் இந்தக்கேள்வி பொருத்தமான கேள்வியாக, அறிவார்ந்த கேள்வியாக இருக்க முடியுமா? என்ற கேள்வி நமக்குள்ளாக எழலாம். காரணம், இத்தனை ஆண்டுகளாக, அந்த குளத்தின் கரையில் அந்த மனிதன் இருந்ததே,...

வார்த்தையை நம்பி !

அரச அலுவலர் இயேசுவிடம் வந்து தன் மகனை நலமாக்க வருமாறு அழைத்தபோது, இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப் போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் மகன் பிழைத்துக்கொண்டான். எனவே, அவரும் அவர் வீட்டாரும் இயேசுவை நம்பினர். இறைவனின் இயல்புகளுள் ஒன்று அவர் “வாக்கு மாறாதவர்” என்பது. எனவேதான், காலையில் அவரது பேரன்பையும், இரவில் அவரது வாக்குப் பிறழாமையையும் புகழ்வது நல்லது என்று திருப்பாடலில் (92) வாசிக்கிறோம். இறைவன் வாக்குப் பிறழாதவர், சொன்ன சொல் தவறாதவர். எனவே, நாமும் அவரது வார்த்தையை நம்பி வாழ்வோம். இறைவனின் வாக்கே விவிலியம். அந்நூலில் இறைவனின் வாக்குறுதிகளும், ஆறுதல் மொழிகளும், அறைகூவல் சொற்களும் அடங்கியுள்ளன. அவரது வார்த்தைகள் நிலைவாழ்வைத் தருகின்றன. எனவே, இறைவனின் வார்த்தையை நம்புவோம். அந்த வார்த்தைகளின்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்....

மனமாற்றம்

உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறான். மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவம். இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம். தன்னை மகனாக ஏற்க வேண்டும் என்று, அவன் நினைக்கவில்லை. தன்னுடைய தந்தையின் பணியாட்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டாலே போதும், என்பதுதான் அவனின் எண்ணம். தன்னுடைய தகுதியின்மையை, இளைய மகன் உணர்கிறான். தந்தை அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒருபோதும் எண்ணவில்லை. தான் செய்தது தவறு. அதற்கு விமோசனமே கிடையாது என்பதுதான், இளைய மகனின் மனநிலை. அந்த மனநிலையோடு தான் அவன் தந்தையிடம் திரும்பி வருகிறான்....

உண்மையான செபம் எது?

பக்தியுள்ள யூதர் காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகள் செபம் செய்வார். அதுவும் ஆலயத்திற்கு வந்து செபிப்பது சிறந்த அருளைப்பெற்றுத்தரும் என்பதால், ஆலயத்திற்கு வந்து பலர் செபித்தனர். யூதச்சட்டம் ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று மட்டும் நோன்பிருக்க அறிவுறுத்தியது. ஆனால், சிலர் கடவுளின் அருளை சிறப்பாகப் பெறுவதற்காக வாரம் இருமுறை திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் யெருசலேமில், மக்கள் பொருட்களை வாங்க சந்தைகளில் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென்று இணைச்சட்டம்(14:22), கூறுவதன் அடிப்படையில், யூதர்கள் இதைப்பின்பற்றினர். இந்தப்பாரம்பரிய முறைகளை பரிசேயர்கள் மக்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக செய்தார்கள். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆலயத்திற்கு வந்து செபித்தார்கள், தாங்கள் நோன்பிருப்பது தெரியவேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள், அதேபோல கொடுக்கத்தேவையில்லாத பொருட்களிலும் பத்திலொரு பங்கைக்கொடுத்தார்கள். இன்றைய நற்செய்தியில், பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் ஆலயத்தில் நின்று செபிக்கிறார்கள்....

கடவுளன்பும், பிறரன்பும்

யூதச்சட்டங்களைப்பொறுத்தவரையில், இரண்டுவிதமான பார்வைகள் இருந்தது. சட்டங்களில் பெரிய சட்டங்கள் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஒரு குழுவும், சிறிய பெரிய என அனைத்து சட்டங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது என மற்றொரு குழுவும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இப்படிப்பட்டச் சூழ்நிலை இருந்த காலத்தில்தான், ஒருவர் இயேசுவிடம் வந்து, ”அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கிறார். அந்த மனிதர் இந்த இரண்டு பார்வையைப் பிரதிபலிக்கிறார். அனைத்திலும் முதன்மையானது கடவுளன்பா? அல்லது பிறரன்பா? என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. ஒரு குழு கடவுளை அன்பு செய்வதுதான் முதன்மையானது என்று நம்பியது. ஏனென்றால், கடவுள்தான் அனைத்திற்கும் மேலானவர். அவரன்றி அணுவும் அசையாது என்று உறுதியாக நம்பினர். மற்றொரு குழுவோ, மற்றவர்களை அன்பு செய்வதைத்தான் கடவுள் முழுமையாக விரும்புகிறார் என்று நம்பினார்கள். இயேசு இரண்டையும் இணைத்துப்பேசுகிறார். அதுதான் இயேசுவின் சிறப்பு. இதுவரை எந்த யூத போதகர்களும், இரண்டையும் இணைத்து விளக்கம் தந்ததில்லை. ஆனால், இயேசு கடவுளன்பையும், பிறரன்பையும்...