Category: Daily Manna

இடைவிடாத செபம் கேட்கப்படும்

இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8) வருகிற நடுவர் ஏரோதாலோ, அல்லது உரோமையர்களாலோ நியமிக்கப்பட்ட நடுவர். பணம் இருந்தால், எதையும் செய்யலாம் என்பதாகத்தான், இந்த நடுவர்கள் செயல்பட்டனர். நீதிக்கு அங்கே இடமில்லை. எந்த அளவுக்கு பணத்தை வாறி இறைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நாம் விரும்பியபடி நீதி கிடைக்கும். நீதி, நியாயத்தைப்பற்றி அங்கு யாரும் பேசமுடியாது. பணம்தான் எல்லாம் செய்யும். இங்கே நற்செய்தியில் குறிப்பிடப்படுகிற பெண் ஏழைகளை, எளியவர்களை அடையாளப்படுத்தும் பெண். பணத்தினால் நிச்சயம் அவர்களுக்கு நீதி கிடைக்காது. ஏனென்றால் அவர்களால் பணம் கொடுக்க முடியாது. ஆனாலும், அந்த பெண் நீதியை பெற்றிட பிடிவாதமாய் இருக்கிறாள். எப்படியாவது, நீதி கிடைத்திட தொடர்ந்து அவள் நச்சரிக்கிறாள். நச்சரிப்பின் காரணமாக, அவள் நீதியைப்பெறுகிறாள். இயேசுவின் செய்தி இதுதான்: பணத்திற்கா விலைபோகிற நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், நம்மைப்படைத்துப்பாதுகாத்துவரும் கடவுள் நம்மை அவ்வளவு எளிதில் கைவிட்டு விடுவாரா? நிச்சயம் நம்மைக்காப்பார். நமது...

உண்மை உரைக்கும் தூய ஆவி

இன்றைய நற்செய்தி(லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12), தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றத்தை நமக்கு உறுதிபடுத்துகிறது. மத்தேயு 12: 31 – 32 மற்றும் மாற்கு 3: 28 – 29 ல், இயேசுவின் குணப்படுத்துகின்ற வல்லமையை, தீய ஆவிகளின் சக்திக்கு ஒப்பிடுகிறபோது, இயேசு இதைச் சொல்கிறார். இந்த திருச்சட்ட அறிஞர்கள், கடவுளுடைய அருளையும், ஆசீரையும் தீய ஆவிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில், தூய ஆவியானவரைப்பற்றிய புரிதல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இயேசு இங்கே தூய ஆவியானவரைப் பற்றிப் பேசுகிறபோது, அவர் சொல்கிற அர்த்தமும் நமக்கு விளங்க வேண்டும். அப்போதுதான், நம்மால், சரியான விளக்கத்தைப் பெற முடியும். தூய ஆவியின் செயல்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றது. 1. கடவுள் மனிதர்களுக்கு, தூய ஆவியானவர் வழியாக, உண்மையை உரைத்தார். உண்மையை உரைப்பது தூய ஆவியானவரின் பணி. 2. தூய ஆவியனவரின் தூண்டுதலினால் தான், மனித உள்ளம், கடவுள் அறிவிக்கும் உண்மையை,...

கடவுளின் உடனிருப்பு

கடவுளின் பராமரிப்பு இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒரு மனிதனின் தலையில், இலட்சக்கணக்கான முடிகள் காணப்படுகிறது. ஆனால், அதில் விழுகிற முடிகள் கூட, கடவுளின் கண்களில் இருந்து தப்பமுடியாது என்றால், கடவுள் நம் மட்டில், எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார், எவ்வளவுக்கு நம்மை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார், என்பது இங்கே தெளிவாகிறது. நம் அனைவருக்குமே ஒரு காவல் தூதர் தரப்பட்டிருக்கிறார். அந்த காவல் தூதுவரின் பிரசன்னம், கடவுள் நம் மட்டில் வைத்திருக்கிற, பராமரிப்பின் அளவைக் காட்டுவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த பிரச்சனைகளுக்கு நாமும் காரணமாக இருக்கலாம், மற்றவர்களும் காரணமாக இருக்கலாம். சில வேளைகளில், பிரச்சனைக்கான காரணத்தையும் நாம் அறிய முடியாமல் இருக்கலாம். எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் பராமரிப்பை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது. அந்த பராமரிப்பின் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை தான், நமது பிரச்சனைகளிலிருந்து, நாம்...

உண்மையான வாழ்க்கைமுறை

இறைவாக்கினர்கள் பற்றிய, திருச்சட்ட அறிஞர்களின் பார்வை முரணானதாக இருந்தது. அவர்கள் மக்கள் முன்னிலையில், இறைவாக்கினர்களைப் பற்றி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தவர்கள் போல நடந்து கொண்டார்கள். ஆனால், உண்மையில், இறைவாக்கினர்களின் இறப்பிற்கு காரணமானவர்கள் அவர்களே. அவர்கள் போற்றிய இறைவாக்கினர்கள் அனைவருமே இறந்து போனவர்கள். ஆனால், வாழும் இறைவாக்கினர்களை அவர்கள் கடுமையாக துன்புறுத்தினர். இறந்த இறைவாக்கினர்களுக்கு உயர்ந்த கோபுரங்களை எழுப்பினர். ஆனால், வாழ்ந்து கொண்டிருந்த இறைவாக்கினர்களுக்கு, இறப்பைப் பரிசாகக் கொடுத்தனர். ”உங்கள் அமாவாசை, திருவிழாக்கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது” (எசாயா 1: 14). ” ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர, வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?” (மீக்கா 6: 8). மேற்கூறிய இறைவார்த்தைகள் தான், இறைவாக்கினர்களின் போதனையின் அடிப்படை சாராம்சம். ஆனால், திருச்சட்ட அறிஞர்களின் வாழ்வுமுறைக்கு எதிரானது இதுதான். இயேசு,...

ஒழுங்குகள் காட்டும் ஒழுக்கம்

திருச்சட்ட அறிஞர் ஒருவர், தங்களை இயேசு இழிவுபடுத்துவதாகக் கூறுகிறார். ஆனால், இயேசு இன்னும் அதிக வேகத்தோடு அவர்கள் செய்யக்கூடிய தவறான செயல்களைச் சுட்டிக்காட்டுகிறார். தங்களுக்கு ஏற்றவாறு அவர்கள் சட்டங்களை, விளக்கினார்கள். உதாரணமாக, ஓய்வுநாளில், யாரும் 1000 அடிக்கு மேல் நடக்கக்கூடாது. நடந்தால் அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். அதே வேளையில், தாங்கள் வசிக்கும் பகுதியில், ஊருக்கு தொடக்கத்தில் ஒரு கயிறு குறுக்கே கட்டியிருந்தால், அந்த கயிறு வரை, ஒருவரின் வீடாக மாறிவிடும். எனவே, அந்த கயிற்றிலிருந்து, அவர் இன்னும் 1000 அடிகள் நடக்கலாம். அதே போல, ஏதாவது ஒரு இடத்தில், இரண்டு வேளைக்கான உணவை வைத்தால், அதுவரை அந்த மனிதரின் வீடாக மாறிவிடும். அதிலிருந்து இன்னும் 1000 அடிகள் அவர் நடந்து செல்லலாம். இந்த ஒழுங்குகளையெல்லாம் கடவுள் நிச்சயம் கொடுக்கவில்லை. தாங்கள் நினைத்ததை எல்லாம், இந்த திருச்சட்ட அறிஞர்கள் ஒழுங்குகள் என்ற பெயரில் மக்களைப் பின்பற்ற வற்புறுத்தினர். ஆனால், அவர்களுக்கு ஏதாவது...