Category: Daily Manna

முழந்தாளிடு முன்னேற்றத்தைப் பாரு…

லூக்கா 6:12-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஜெபிக்கும் போது நாம் கடவுளோடு உறவாடுகிறோம். நம்முடைய ஜெபம் நமக்கு ஜெயத்தை தர வல்லது. ஜெபத்தில் நாம் கடவுளின் அதிசயத்தை கண்டுணர்கிறோம். ஜெபத்தில் நம்முடைய குறைகளைக் கண்டுபிடித்து நிறைவை நோக்கி பயணம் செய்ய முடிகிறது. முழந்தாளிட்டு ஜெபிக்கும் போது நம் வாழ்வில் முன்னேற்றம் முந்திக்கொண்டு வரும் என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் முக்கிய செய்தி. முழந்தாளிட்டு நன்கு ஜெபிக்கும் போது பல செயல்களை நாம் மிகவும் எளிமையாக செய்ய முடிகிறது. அவற்றுள் இரண்டு இன்று. 1. குறிக்கோளை குறி வைக்கலாம் ஜெபிக்கும் போது நம் வாழ்விற்கான குறிக்கோள் மிகவும் தெளிவாகிறது. பலருக்கு குறிக்கோள் இருக்கிறது. ஆனால் சில காலங்களிலே...

நன்மைக்கு விடுமுறை இல்லை

லூக்கா 6:6-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கையை நீட்டி நன்மையை பெறுகின்ற ஒவ்வொரு கிறிஸ்தவா்களும் நன்மை செய்ய வேண்டும் என்ற அழைப்பைப் பெறுகின்றார்கள். நன்மை என்று ஆண்டவரின் உடலை எதற்காக சொல்கிறோம்? நாம் நன்மை செய்பவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவே. இயேசு நடந்த இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார். நாமும் அப்படி செய்ய வேண்டும் என்ற அழுத்த திருத்தமான அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நன்மை செய்யும் போது நாம் இரண்டு காரியங்களை கண்டுக்கொள்ளவே கூடாது. 1. குறைகளைக் கண்டுக் குனியாதே நாம் நன்மைகள் செய்யும் போது பல விதமான விமர்சனங்கள் வரும். அவைகள் நம் நன்மைகளுக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாம்...

பேசுங்க.. பேசுங்க.. பேசிக்கிட்டே இருங்க!

மாற்கு 7:31-37 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 23ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பேசுங்க.. பேசுங்க.. பேசிக்கிட்டே இருங்க! இயேசுவைப் பற்றி பேசுங்க. எங்கும் பேசுங்க.. எதிலும் பேசுங்க.. என்ற சிறப்பான அறிவிப்பு முழக்கத்துடன் வருகிறது பொதுக்காலம் 23ம் ஞாயிறு. நடிகர் குமரிமுத்துவின் பேட்டியை நான் அண்மையிலே பார்த்தேன். பார்த்தவன் பிரமித்து போனேன். அவர் தன் பேட்டியில் சொன்னதாவது, “நான் கிறிஸ்தவ சயமத்திற்குள் 1968ல் நுழைந்தேன். நுழைந்த அந்த தருணத்திலிருந்து மாற்றம் கண்டேன். ஆரம்ப காலத்தில் என் வாழிடம் என்பது பிளாட்பார்ம் தான். போதிய வசதி இல்லை. வறுமையில் வாடினேன். ஆனால் என் ஆண்டவரைக் கண்ட பொழுதிலிருந்து நான் உயர்த்தப்பட்டேன். இப்போது பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். ஒரு மாதத்திற்கு 24 நாட்கள் பயணம்...

வாழ்க்கையை கோலாகலமாக்கு…

புனித கன்னி மரியாளின் பிறப்பு பெருவிழா மத்தேயு 1:1-16,18-23 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாளின் பிறந்த நாள் விழாவினைச் செப்டம்பர் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மிக கோலாகலமாக நாம் கொண்டாடுகின்றோம். அன்னை மரியாள் மிகவும் கோலாகலமாக வாழ்ந்தார். ஆகவே அவரின் அன்பு பிள்ளைகளாகிய நாமும் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றோம். இந்த இனிய நாளில் நம் வாழ்வை கோலாகலமாக மாற்ற வேண்டும். அதற்கு மரியை மாதிரியாக கொண்டு வாழ வேண்டும் என இப்பெருவிழா பெருமகிழ்ச்சியோடு நம்மை அழைக்கின்றது. மரியிடமிருந்து நான்கு மாதிகள் நமக்கு மூலதனமாக உள்ளன. 1. அருள் தெரிகிறது “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன் நீ பிறக்கும்...

மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்…

லூக்கா 5:33-39 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்பாத ஒருசிலர் எதையாவது, அவசியமில்லாததைச் சொல்லி நம்முடைய மகிழ்ச்சியை தடைசெய்ய அதிக ஆசைப்படுவர். அவர்களைக் காணும் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சொல்லித் தருகிறது. 1. கண்டுக்கவே வேண்டாம் கேட்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் பேசக் கூடாது. அதை பெரிதாக எண்ணக் கூடாது. பெரிதாக எண்ணினால் அவர்கள் பெரிய ஆளாக மாறிவிடுவார்கள். நம் மகிழ்ச்சி பறிபோகும். இயேசு பரிசேயர்கள், சதுசேயர்கள் பேசும்போது கையாண்ட பாணியை நாம் கையாள வேண்டும். 2. கறைப்படுத்தவே வேண்டாம் நம் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் மனிதர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற...