Category: Daily Manna

மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்…

லூக்கா 5:33-39 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்பாத ஒருசிலர் எதையாவது, அவசியமில்லாததைச் சொல்லி நம்முடைய மகிழ்ச்சியை தடைசெய்ய அதிக ஆசைப்படுவர். அவர்களைக் காணும் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சொல்லித் தருகிறது. 1. கண்டுக்கவே வேண்டாம் கேட்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் பேசக் கூடாது. அதை பெரிதாக எண்ணக் கூடாது. பெரிதாக எண்ணினால் அவர்கள் பெரிய ஆளாக மாறிவிடுவார்கள். நம் மகிழ்ச்சி பறிபோகும். இயேசு பரிசேயர்கள், சதுசேயர்கள் பேசும்போது கையாண்ட பாணியை நாம் கையாள வேண்டும். 2. கறைப்படுத்தவே வேண்டாம் நம் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் மனிதர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற...

ஆச்சரியம் ஆனா அதிசயம்

லூக்கா 5:1-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிறுவயதிலிருந்தே மறைக்கல்வி வகுப்புகளில் அழுத்தம் திருத்தமாக நமக்கு சொல்லித் தரப்படுகிறது. இயேசுவோடு நாம் இருக்கும் போது நம் வாழ்க்கை மாறும். மகிழ்ச்சி மனங்களி்ல் மத்தளமிடும். மங்களகரமான வருங்காலம் உருவாகும். ஆனால் நாம் இயேசுவோடு இருப்பதில்லை. இவைகளை அனுமதிப்பதில்லை. இயேசுவோடு இல்லாமல் அவதிப்படும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவோடு இருப்பதற்கான அந்த அழைப்பை திரும்ப நினைவூட்டுவதாக அமைகிறது. இயேசுவோடு நாம் இருக்கும் போது பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றில் இரண்டு முக்கியமானவைகளை நாம் அவசியம் பார்த்தே ஆக வேண்டும். 1. ஆச்சரியம் நம்முடைய பண்புகளிலே ஆச்சரியம் ஏற்படும். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கேற்ப நாம் அவரோடு...

இனி என்றும் இளமையே!

லூக்கா 4:31-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் அனைவரும் தாங்கள் வயதாவதை விரும்புவதில்லை. எப்போதும் இளமையுடன் இருக்கத்தான் ஆசைப்படுகின்றனர். என்றும் இளமையோடு இருப்பதற்கு இரண்டு விதமான அருமையான ஆலோசனைகளோடு அகமகிழ்ந்து வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். 1. கட்டளையிடும் அதிகாரம் நாம் இருட்டில் எதையாவது பார்த்து பயப்படும் போது நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு சொல்லித் தருவார்கள், “இனி நீ இருட்டில் நடக்கும் போது நாசரேத்து இயேசுவின் பெயரால் கட்டளையிடுகிறேன். தீய சக்தியே அகன்று போ” என கட்டளையிட்டுச் சொல். அப்படி சொன்னதும் தீயவை அனைத்தும் காணாமல் போகும் என சொல்லித் தருவார்கள். அந்த மந்திரத்தை சொல்லிய பிறகு நாமும் எந்த தீய சக்தியையும்...

விருதுவாக்கு விறுவிறுப்பாக்கும்

லூக்கா 4:16-30 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வாழ்க்கையில் வாலிப பருவத்தை அடைந்ததும் நாம் பிற்காலத்தில் என்ன செய்யப்போகிறோம். நம்முடைய திட்டம் என்ன? குறிக்கோள் எப்படிப்பட்டடது? பணியின் விருதுவாக்கு என்ன? இதுபோன்ற தெளிவுகள் இருந்தால் அவைகள் நம்மை சுறுசுறுப்பாக மாற்றும். நம் பணிகளை விறுவிறுப்பாக்கும். இயேசுவின் தெளிவான விருதுவாக்கோடு தெளிவாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் விருதுவாக்கு: ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் ஏனெனில் விண்ணரசு உங்களுக்கு உரியது என்ற நற்செய்தியை ஏழைகளுக்கு அறிவிக்கும் விருதுவாக்கு, சிறைப்பட்டோரை விடுதலை செய்து மகிழ்ச்சியை அளிக்கும் விருதுவாக்கு, மக்களின் அகக்கண்களை திறந்து பார்வை அளிக்கும் விருதுவாக்கு, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்மிட்டு அறிவிக்கும் விருதுவாக்கு. இந்த திட்டத்தை ஆண்டவர் நிறைவேற்றிய...

கடவுளே! நீரே என் இறைவன்

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8 கடவுளை தன்னுடைய இறைவனாக வடிக்கிறது இந்த திருப்பாடல். பல தெய்வங்கள் வாழ்ந்த சமுதாயத்தில், இறைவனின் இருப்பையும், அவர் மீதான நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது இந்த திருப்பாடல். அது சாதாரணமான மனநிலையோடு அல்ல, மாறாக, தீராத பாசம் கொண்ட மனநிலையாக வெளிப்படுத்தப்படுகிறது. இதற்கு அருமையான உருவகம் ஒன்று எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது. நீரின்றி வறண்ட தரிசு நிலத்தோடு இது ஒப்பிடப்படுகிறது. நீரின்றி காணப்படும் நிலம் விதைப்பதற்கு ஏற்ற நிலமாக அல்லாமல், வறண்ட நிலமாக காணப்படும். அது நீரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நிலம் நீரோடு அமைந்தால் தான், அது பயன்படும். அல்லது அதற்கு மதிப்பு இல்லை. வறண்ட நிலம் ஒன்றுக்கும் உதவாது என்பதால், அதன் மதிப்பு குறைய ஆரம்பிக்கிறது. தன்னுடைய மதிப்பை இழந்து விடாமல் இருக்கவும், தன்னால் பயன் இருக்க வேண்டும் என்கிற ஏக்க உணர்வும், நிலத்தை மழைக்காக ஏங்க...