Category: Daily Manna

”ஆண்டவரே! உம்மிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 2: 1 – 3, 4 – 6, 7 – 9 கடவுள் தான் இஸ்ரயேல் மக்களை ஆள்வதற்காக தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீது எருசலேமில் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், வேற்றுநாட்டினர் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக போர்தொடுக்கின்றனர். இந்த போர், இஸ்ரயேல் மக்களுக்கு எதிரானதோ, தாவீதுக்கு எதிரானதோ அல்ல. இது கடவுளுக்கு எதிரான போர். ஏனென்றால், இஸ்ரயேல் மக்களைத் தாக்குவது கடவுளையே தாக்குவது போலானதாகும். ஏனென்றால், எப்போது தாவீது இஸ்ரயேல் மக்களின் அரசனாக மாறினாரோ, அப்போதே அவர், கடவுளின் மைந்தனாக மாறிவிட்டார். எனவே, இனி கடவுளின் அருட்கரம் தான், அவரைப் பாதுகாக்கப் போகிறது. இந்த திருப்பாடல் இயேசுவின் வருகையைக் குறிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இயேசு எப்படியெல்லாம் கடவுளால் பேணிப் பாதுகாக்கப்பட போகிறார். இயேசுவின் வாழ்க்கை எவ்வளவு சவால்களுக்கு மத்தியில் இருக்கப்போகிறது என்கிற, எதிர்காலத்தில் நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் இந்த திருப்பாடல் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. எவ்வளவு சோதனைகள்...

ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது

திருப்பாடல் 118: 1, 14 – 15, 16, 18, 19 – 21 நமது அன்றாட வாழ்வில், நமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து நாம் சொல்வோம்: ”இவர் என்னுடைய வலக்கரம் போன்றவர்”. இங்கு வலக்கரம் என்பது நம்பிக்கைக்குரியவராக அடையாளப்படுத்தப்படுகிறது. எசாயா 41: 13 ”நானே உன் கடவுளாகிய ஆண்டவர். உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, ”அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்”. பொதுவாக எல்லா மக்களுமே வலது கையை முக்கியமாக பயன்படுத்துவதால், அது ஒருவருடைய பலத்தை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. லூக்கா 20: 43 ”நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று திருப்பாடலில் உள்ள வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு வலது கரம், அதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. மாற்கு 10: 37 ல், யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரர்கள், இயேசுவின் வலப்பக்கத்தில் அமரும் பாக்கியத்தைக் கேட்கின்றனர். மத்தேயு 25 வது அதிகாரத்தில், தந்தையின் ஆசீர் பெற்றவர்களை...

அக்கரையில் அவரின் அக்கறை (யோவான் 21 : 1-14)

உயிர்ப்பும், உயிர்த்த உடலும் எப்படியிருக்கும் என்ற செய்தியைத் தருவதோடு இயேசுவின் அன்பையும் அக்கறையையும் இந்நிகழ்வு இன்னும் அதிகமாக எடுத்துக் கூறுகின்றது. திருத்தூதர்களில் சிலரைத் தவிர அனைவரும் படிப்பறிவற்ற சாதாரண மீனவர்கள். இவர்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போலவோ, மாமேதைகள் போலவோ கதை கட்டத் தெரியாது. இவர்கள் கற்பனை உலகில் வாழ்பவர்களல்ல. எதார்த்தத்தை எதார்த்தமாக எதிர்ப்பவர்கள். கண்ட காட்சிகளை உடனடியாக ஏற்றுக் கொள்ளுமளவிற்கு முட்டாள்களுமல்ல. தாங்கள் கண்டதை, தொட்டுணர்ந்ததை உலகிற்கு அறிவித்தனர். இயேசு வெறும் ஆவியன்று என்பதற்கு சான்றுதான் இந்நிகழ்ச்சி. அதேநேரத்தில் அவர் நம்மைப் போன்ற உடலைக் கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை. மாட்சிமை நிறைந்த உடலையே அவர் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆவி, கை நீட்டி இப்பக்கம் வலையைப் போடுங்கள் என்று சொல்லுவதில்லை. நெருப்பு மூட்டி மீன் சாப்பிடுவதில்லை. இதன் மூலம் நமக்கு அதிகமாக இல்லாவிட்டாலும் உயிர்ப்பைப் பற்றிய சில தெளிவுகள் கிடைக்கின்றன. நமது வாழ்விற்கு இன்றைய நற்செய்தி வலுவூட்டுவதாக அமைகிறது. இயேசு நம் அன்றாட வாழ்க்கையில்,...

கலக்கத்தைக் கலகலப்பாக்க! (லூக்கா 24 : 35-48)

அகக்கண்கள் திறந்திருந்தாலும் அவர்களின் மனக்கண்கள் மூடியே இருந்தன. இதுவரை ஒருவருக்கும் இருவருக்குமாய் தோன்றி தன்னை வெளிப்படுத்திய ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அனைவரும் குழுமியிருக்க அங்கே தன் உயிர்ப்பின் மாட்சியை வெளிப்படுத்துகிறார். அவர் இறப்பினைப் பற்றி முன்னறிவிக்கும் போது புரியாதவை இப்பொழுது மட்டும் என்ன புரியவா போகின்றது? இது இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் இயேசு உயிர்ப்பினைப் பற்றி அவர்கள் உணர கடும் பாடுபடுகிறார். இந்த சிரமத்தை அவர் இறப்பதற்கு முன்பாக எடுக்கவில்லையே! காரணம், இயேசு இறந்துவிட்டதால் சீடர்கள் அனைவரும் கலக்கமும், பீதியும் அடைந்திருந்தார்கள். வாழ வேண்டுமா அல்லது யூதாசினைப் போன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா அல்லது பேதுருவைப் போல அதிகார வர்க்கத்தினருக்குப் பயந்து இயேசுவை மறுதலிக்க வேண்டுமா என்றெண்ணி கூனிக்குருகி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார் என ஆங்காங்கே கேள்விப்படுவதைக் கேட்டு இவர்களின் கலக்கம் குழப்பமாக மாறியது. இது இவர்களுக்கு இன்னும் வேதனையைக் கொடுக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்...

இருளினை அவரின் அருளால் …

(யோவான் 20 : 11-18) கிறித்தவர்களின் உண்மையான முகத்தைப் பார்க்கும் போது இயேசு கிறித்து உயிருடன் எழுந்தார் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறாhர் – கடவுள் மறுப்பாளர் பிரடெரிக் நீட்சே. இயேசுவை அதிகமாக அன்பு செய்தவர்களில் மகதலென் மரியாவுக்கு சிறப்பான இடம் உண்டு. அப்படிப்பட்டவர்க்கு எப்படி இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை? தோட்டக்காரர் என்று எப்படிக் கூறுகின்றார்? இந்தக் கேள்விகளுக்கு இருபதாம் பிரிவின் முதல் இறைவார்த்தைப் பதிலாக அமைகின்றது. “இருள் விலகும் முன்பே”. இங்கே “இருள்” என்ற ஒற்றைப் பதத்தை நேரடியான மற்றப் பொருள் பொதிந்த பதமாகவே நான் பார்க்கிறேன். யோவான் நற்செய்தியாளரது, வார்த்தைகளின் ஆழம் அளப்பரியது என்பதை நாம் அறிவோம். இந்த “இருள்” தன் அன்பரை இழந்துவிட்டேன் என்ற கவலையினாலும் கண்ணீராலும் வந்த இருள். ஆண்டவர் இயேசு இறந்து விட்டார் என்ற அறியாமையினால் வந்த இருள். மூன்றாம் நாள் அவரின் உயிர்ப்பில் நம்பிக்கையில்லாமல் அவரின் சடலத்தை...