† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்

தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் லூக்கா 1:39-56 உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா நல்வாழ்த்துக்களையும், சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தித்திப்பான நாளிலே நல்ல உடல் ஆரோக்கியமும், குறைவில்லா வருமானமும், தீராத சந்தோசமும், சிறந்த நற்பண்புகளையும் நீங்கள் பெற்றிட உங்களை வாழ்த்துகிறேன். விண்ணேற்பு அன்னை மரியின் பரிந்துரையும், ஆண்டவரின் ஆசீரும் உங்களுக்கு நிறைவாகவே கிடைப்பதாக! இன்றைக்கு நம் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் விழா எடுக்கிறோம். இருவருக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் இருப்பதை நாம் பார்க்கலாம். தாய்க்கு எதற்காக? ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும். “அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – என்கிறார் புனித தமசீன் நகர அருளப்பர். “ஒரு மனிதனின் உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக...

ADD WATER

“There was no water in the cistern, only mud, and Jeremiah sank into the mud.” –Jeremiah 38:6 “No water, only mud” — is that a description of your life? Are you in a hole, sinking in the mud, starving to death spiritually? (see Jer 38:9) You need to add water to turn your mud into a mud puddle, and your mud puddle into a fountain of living waters (see Jn 4:14). Most of us have already received the life-giving waters of Baptism, but we should renew our baptismal promises. We have already done that on Easter Sunday, but maybe we...

இயேசு மூட்டிய தீ

இயேசு இந்த உலகத்திற்கு வந்து, அவரது பணிவாழ்வை ஆரம்பித்தபோது, இலக்கில்லாமல் ஆரம்பிக்கவில்லை. தன்னுடைய பணிவாழ்வில், தனக்கென்று ஓர் இலக்கை வைத்திருந்தார். அந்த இலக்கை நிறைவேற்றுவதை, தனது வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தார். அதைப்பற்றித்தான், இன்றைய நற்செய்தி வாயிலாக இயேசு பேசுகிறார். மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அதுதான் தனது விருப்பம் என்று சொல்கிறார். அது என்ன தீ? நேர்மையாளர்கள் இன்னும் நேர்மையோடு வாழவும், அமைதியை ஏற்படுத்த விரும்புவோர் அவர்களோடு கடவுள் இருக்கிறார் என்பதை உணரவும், நல்லவர்கள் இன்னும் அதிக நன்மை செய்வதற்கான எரிபொருளாக இயேசு வந்திருக்கிறார். மனிதர்களுக்குள்ளாக நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணமிருந்தாலும், செய்வதா? வேண்டாமா? என்கிற விவாததத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமாய், அவருடைய வாதம் அமைந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதுதான் இன்னும் பல நல்லவர்களை உருவாக்குவதற்கு துணையாக இருந்தது. இயேசு என்கிற ஒரு மனிதன், இந்த உலகத்தையே தன் வசப்படுத்த முடிந்தது என்றால், தனியொரு ஆளாக அல்ல. அவர்...

HAND-ME-DOWN

“Children were brought to Him so that He could place His hands on them in prayer.” –Matthew 19:13 Jesus laid His hands on children and prayed for them. He holds children and the whole world in His hands. Jesus embraces us with His nail-scarred hands. Hands are for: praying, holding our spouses and children, embracing our brothers and sisters (see 1 Thes 5:26), disciplining children (see Prv 13:24), helping our neighbors, honoring (applauding) others, praising God (see Ps 134:2). Hands are not for expressing: anger, impurity, rejection. Our hands will be instruments of righteousness and not weapons for evil (Rm...

சின்னச் சிட்டுக்களை இயேசுவிடம் சேர்ப்போம்

மத்தேயு 19:13-15 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற பழமொழி நமக்கு நன்றாகத் தெரியும். இப்போது விளைந்துக்கொண்டிருக்கிற பயிர்களை அதவாது சிறுவர்களை பார்க்கின்ற போது துயரமாக இருக்கின்றது. பயிர்களிலே நச்சு மருந்து கலந்திருக்கிறது. சிறுவயதிலே அவர்களுடைய சிந்தனை, சொல், செயல் இவைகளிலே நஞ்சு இருக்கிறது. சிறியவா்கள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சின்னச் சிட்டுக்களின் வருங்காலம் வறுமையாய் மாறிக்கொண்டிருக்கிறது. சின்ன சிட்டுக்களின் வாழ்வில் வறுமையயை போக்கி எப்படி வளமையை, சிறப்பை சேர்க்க வேண்டும் என்பதற்கு இன்றைய நற்செய்தி நலம் தரும் நல்வாக்காக வருகிறது. அவர்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வளர்க்க வேண்டியது நம் பொறுப்பு. எப்படி எல்லாம் அவர்கள் நஞ்சு படாமல் பஞ்சு போல மென்மையாகவும், பரிசுத்தமாகவும் வாழ நாம்...