† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நீதி எங்கே? நியாயம் எங்கே?

இயேசு தொழுகைக்கூடத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதனை என்பது வார்த்தையோடு நின்றுவிடுவது கிடையாது. வாழ்வைத் தொட வேண்டும். வாழ்வைத் தொடாத போதனையும், வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாத போதனையும், வெறும் சடங்குதான். இயேசு தனது போதனை அவ்வாறு இருக்க விரும்பவில்லை. எனவே, அவர் போதித்துக்கொண்டிருக்கிறபோதே, மக்களுக்கு இறைவனுடைய அருளையும் பெற்றுத்தந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறு மக்களின் நோய்களைக் குணப்படுத்திக்கொண்டிருக்கிறபோது, தொழுகைக்கூடத்தலைவன் மக்களிடத்தில், தனது கோபத்தைக் காட்டுகிறான். ஓய்வுநாளில், இயேசு குணப்படுத்துவது அவனுக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால், சட்டப்படி, அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். எனவே, தான் சொல்வது நியாயம் என்று நினைக்கிறான். ஆனால், இயேசுவிடம் சொல்லத்துணிவில்லாமல், சாதாரண பாமர மக்களிடத்தில் காட்டுகிறான். ஒருவேளை, அவன் இயேசுவிடம் சொல்லியிருந்தால், அவர் விளக்கம் சொல்லியிருப்பார். ஆனால், அவனோ, மக்களிடத்தில் தனது கோபத்தைக்காட்டுகிறான். அதனால், இயேசுவின் கோபத்திற்கு ஆளாகிறான். இன்றைக்கு, நாமும் இந்த தொழுகைக்கூடத்தலைவன் போலத்தான் இருக்கிறோம். நம்மைவிட கீழாக உள்ளவர்களிடம், நமது அதிகாரத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறோம். நம்மைவிட,...

HE’S JUST PITIFUL

“Jesus, Son of David, have pity on me!” –Mark 10:47 Bartimaeus was blind. Many people had no pity on him, but instead scolded him to keep quiet and out of sight (Mk 10:48). Jesus had pity on Bartimaeus and healed him (Mk 10:52). A leper was treated without pity by the masses. He had to keep out of the way, calling out, “Unclean, unclean!” (Lv 13:45) Jesus saw him, was “moved with pity,” touched him, and healed him (Mk 1:41-42). A vast crowd was hungry for the Word of God. Jesus “pitied them, for they were like sheep without a...

தயங்காதே! தளராதே!

மாற்கு 10:46-52 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 30ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! இளம் தொழிலதிபர் ஒருவரின் வெற்றி கதையை உங்களுக்குச் சொல்கிறேன். சீனநாட்டைச் சார்ந்தவர் அவர். தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்து சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனவர். அவர்தான் ஜாக் மா. இவர்தான் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர். 2016 ஆம் ஆண்டில் உலகின் 33 வது கோடிஸ்வரர் இவர். தோல்விகளைக் கண்டு தயங்காத அவர் உள்ளம் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது. தொடர் முயற்சிகளை எடுக்க தவறாத அவரின் தாராள இதயம் நம் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது. அவரின் வெற்றிக்கான படிக்கட்டுகள் பல. வாருங்கள் படிக்கட்டுகளைப் பார்க்கலாம். அவை ஒவ்வொன்றும் நமக்கு பசுமையான பாடங்களளே.  30 முறை வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து 30லும்...

A CONDEMNED BUILDING

“There is no condemnation now for those who are in Christ Jesus.” –Romans 8:1 We often feel condemned or about to be condemned. In these moments, we feel as if people are judging us, because they are. We are afraid of not being accepted and even rejected. We know that people’s love for us is conditional, and sooner or later we won’t meet their conditions. We have the haunting fear we will be condemned not only in this life but for all eternity. The Good News is: “There is no condemnation now for those who are in Christ Jesus” (Rm...

கடவுளின் கருணை

இந்த உலகத்தில் விபத்துக்களில் மனிதர்கள் சிக்கி இறக்கிறபோது, குறைந்த வயதில் வாழ்வை இழக்கிறபோது, நமது மனித சிந்தனையில் எழுவது, இவர்கள் முற்பிறவியில் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும். எனவே தான், இவர்கள் இந்த பிறவியில் வாழ்வை முடிக்க இயலவில்லை என்பது. ஆனால், இறப்பிற்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்கிற கருத்தை இயேசு சொல்கிறார். இறப்பு யாரையும் எப்போதும் தழுவலாம். இறப்பு எப்போது, யாருக்கு, எங்கே வரும் என்பது தெரியாது. நாம் உயிர் வாழ்வதால், நாம் புனிதர்கள் என்று நினைக்க வேண்டாம். ஒருவேளை அதுவே கடவுள் நாம் மனம்மாறுவதற்கு கொடுத்திருக்கிற அழைப்பாக இருக்கலாம். அந்த வாய்ப்பை நல்ல முறையில் நாம் பயன்படுத்தி, நமது வாழ்வை சீர்படுத்த எண்ணுவதுதான், மிகச்சிறந்த சிந்தனையாக இருக்கும். ஒவ்வொருநாளும் கடவுள் நம்மீது வைத்திருக்கிற கருணையின் வெளிப்பாடு. அந்த கருணையை நாம் நல்ல முறையில் பயன்படுத்தி, நமது வாழ்வை சரியான தடத்திற்கு கொண்டு செல்ல, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். வாழ்க்கை என்கிற...