கடவுளின் கருணை

இந்த உலகத்தில் விபத்துக்களில் மனிதர்கள் சிக்கி இறக்கிறபோது, குறைந்த வயதில் வாழ்வை இழக்கிறபோது, நமது மனித சிந்தனையில் எழுவது, இவர்கள் முற்பிறவியில் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும். எனவே தான், இவர்கள் இந்த பிறவியில் வாழ்வை முடிக்க இயலவில்லை என்பது. ஆனால், இறப்பிற்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்கிற கருத்தை இயேசு சொல்கிறார்.

இறப்பு யாரையும் எப்போதும் தழுவலாம். இறப்பு எப்போது, யாருக்கு, எங்கே வரும் என்பது தெரியாது. நாம் உயிர் வாழ்வதால், நாம் புனிதர்கள் என்று நினைக்க வேண்டாம். ஒருவேளை அதுவே கடவுள் நாம் மனம்மாறுவதற்கு கொடுத்திருக்கிற அழைப்பாக இருக்கலாம். அந்த வாய்ப்பை நல்ல முறையில் நாம் பயன்படுத்தி, நமது வாழ்வை சீர்படுத்த எண்ணுவதுதான், மிகச்சிறந்த சிந்தனையாக இருக்கும். ஒவ்வொருநாளும் கடவுள் நம்மீது வைத்திருக்கிற கருணையின் வெளிப்பாடு. அந்த கருணையை நாம் நல்ல முறையில் பயன்படுத்தி, நமது வாழ்வை சரியான தடத்திற்கு கொண்டு செல்ல, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

வாழ்க்கை என்கிற புனிதமான கொடையைப் பெற்றிருக்கிற நாம், அதன் புனிதத்தன்மையை போற்றும் வகையில் நமது வாழ்வை, நாம் வாழ்வோம். கடவுளின் கருணையை எண்ணிப்பார்த்து, நமது வாழ்வை மாற்றுவோம். அதற்கான அருளை ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.