Author: Jesus - My Great Master

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்”

திருப்பாடல் 119: 23 – 24, 26 – 27, 29 – 30 இறைவன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களை தான் வாக்களித்த நாட்டிற்கு வழிநடத்தினார் என்பதை, மீட்பின் வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இந்த மீட்பின் வரலாற்றில் பல இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அவர்களைக் கட்டுக்கோப்பாக வன்முறையில்லாமல், பாதுகாப்பாக வழிநடத்த வேண்டுமென்றால், இறைவனின் துணையும், அவர் கொடுத்திருந்த வழிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. இத்தகைய எண்ணத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் அமைந்ததுதான், இந்த திருப்பாடல். கடவுளின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்துகிறார். கடவுளின் சட்டப்படி நாம் நடக்கிறபோது, நமது வாழ்க்கையில் நாம் இடறி விழமாட்டோம். கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், நமது வாழ்க்கையில், நாம் துணிவோடு நடப்பதற்கு, அது வழிசெய்யக்கூடியதாக இருக்கிறது. நம்மை அரவணைத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவியாக இருந்தது கடவுளின் சட்டங்கள் தான். அதனை...

IGNORANCE AIN’T BLISS

“Yet I know, my brothers, that you acted out of ignorance, just as your leaders did.” –Acts 3:17 Contrary to the old saying, ignorance is not bliss. What you don’t know will hurt you. God’s people perish for lack of knowledge (Hos 4:6). Of course, the Lord is merciful and will even make excuses for us in our ignorance: “Father, forgive them; they do not know what they are doing” (Lk 23:34). Nevertheless, there comes a time when there’s no excuse for our ignorance of God, His Word, and His plan of salvation. “God may well have overlooked bygone periods...

உயிர்த்த இயேசுவின் பிரசன்னம்

இயேசுவின் பாடுகள், வலி, வேதனை, இறப்பு ஆகியவை நிச்சயம் இயேசுவின் சீடர்ளுக்கு பயங்கரமான வேதனையைக்கொடுத்திருக்கும். இப்போதைக்கு வாழ்க்கை அவர்களுக்கு வெறுப்பாக இருந்திருக்கும். அவர்கள் மீதே அவர்களுக்கு வெறுப்பு வந்திருக்கும். ஏனென்றால், அவர்களும் அதற்கு ஒரு காரணம் என்கிற குற்ற உணர்ச்சி அவர்களை நிரப்பியிருந்தது. நிச்சயமாக அந்தப்பாடுகளின் வலி, வேதனை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இவ்வளவு பயங்கரங்கள் நடந்தபிறகு, இயேசு அவர்கள் நடுவில் தோன்றினால் சீடர்களின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்? நிச்சயம் அவர்கள் பட்ட வலிகள் மறைந்திருக்கும் ஆனந்தம் அவர்களை ஆட்கொண்டிருக்கும். அவர்கள் எதைப்பற்றியும் கலங்கியிருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் மனது முழுவதும் மகிழ்ச்சிதான். தாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்றுகூட உணராத அளவுக்கு அன்பினால், மகிழ்ச்சியினால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள். கவலைகள், கண்ணீருக்கு ஆண்டவர்தரும் ஆனந்தம் நிச்சயம் அளவிட முடியாதது. கவலைகள், கலக்கங்கள் வருகிறபோது, உயிர்த்த ஆண்டவரின் இருப்பை நாம் அதிகமாக உணர வேண்டும். அவர் நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் நிச்சயம் நமக்கு அதிகமாக...

WHEN SHEEP MAKE SHEPHERDS

Look around among your own number, brothers, for seven men acknowledged to be deeply spiritual.” –Acts 6:3 “They presented these men to the apostles.” –Acts 6:6 Did you notice that the leaders of the early Church placed the responsibility for finding deacons on the “community of the disciples”? (Acts 6:2) That’s us! We need to be on the lookout for those who would make good leaders in the Church. This was new for the early Christians. Jewish priests and Levites were born into their positions. The apostles were called and chosen by Jesus Himself. The early Church, however, called the...

நீதியுள்ளோர் ஆண்டவரைப்புகழ்வது பொருத்தமானதே

திருப்பாடல் 33: 1 – 2, 4 – 5, 18 – 19 இந்த உலகத்தில் நீதிமான்களை எல்லாருமே புறந்தள்ளிவிடுகிறார்கள். அவர்களை எள்ளி நகையாடுகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்கள் அனைவராலும் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். எதற்காக? ஏன் அவர்கள் இப்படிப் பார்க்கப்படுகிறார்கள்? அவர்கள் நீதியோடு, நேர்மையோடு வாழ வேண்டும் என்பது, இந்த உலகத்தின் பார்வையில் வாழத்தெரியாத மனிதர்களாக அவர்களை அடையாளம் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நேர்மையாக வாழ்ந்ததால், அவர்கள் பல துன்பங்களையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த துன்பங்களைப் பார்க்கிறபோது, நாம் ஏன் நேர்மையோடு வாழ வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள்ளாக வருகிறது. ஆனால், இதுதான் சரியான வாழ்க்கை, இப்படி வாழ்வது தான் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பதை, திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்திச் சொல்கிறார். அது கடினமான வாழ்க்கை தான். இந்த உலகத்தின் பார்வையில் பரிகாசம் செய்யப்படக்கூடிய வாழ்க்கை தான். ஆனாலும், அந்த வாழ்க்கையின் நிறைவை, அதை வாழ்பவர்கள் மட்டுமே...