உயிர்த்த இயேசுவின் பிரசன்னம்

இயேசுவின் பாடுகள், வலி, வேதனை, இறப்பு ஆகியவை நிச்சயம் இயேசுவின் சீடர்ளுக்கு பயங்கரமான வேதனையைக்கொடுத்திருக்கும். இப்போதைக்கு வாழ்க்கை அவர்களுக்கு வெறுப்பாக இருந்திருக்கும். அவர்கள் மீதே அவர்களுக்கு வெறுப்பு வந்திருக்கும். ஏனென்றால், அவர்களும் அதற்கு ஒரு காரணம் என்கிற குற்ற உணர்ச்சி அவர்களை நிரப்பியிருந்தது. நிச்சயமாக அந்தப்பாடுகளின் வலி, வேதனை வார்த்தைகளில் சொல்லி மாளாது.

இவ்வளவு பயங்கரங்கள் நடந்தபிறகு, இயேசு அவர்கள் நடுவில் தோன்றினால் சீடர்களின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்? நிச்சயம் அவர்கள் பட்ட வலிகள் மறைந்திருக்கும் ஆனந்தம் அவர்களை ஆட்கொண்டிருக்கும். அவர்கள் எதைப்பற்றியும் கலங்கியிருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் மனது முழுவதும் மகிழ்ச்சிதான். தாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்றுகூட உணராத அளவுக்கு அன்பினால், மகிழ்ச்சியினால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள். கவலைகள், கண்ணீருக்கு ஆண்டவர்தரும் ஆனந்தம் நிச்சயம் அளவிட முடியாதது.

கவலைகள், கலக்கங்கள் வருகிறபோது, உயிர்த்த ஆண்டவரின் இருப்பை நாம் அதிகமாக உணர வேண்டும். அவர் நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் நிச்சயம் நமக்கு அதிகமாக ஆனந்தத்தைத்தரும். அது நமது கவலைகளைக், கண்ணீரை மறைக்கக்கூடியதாக இருக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.