பதில் தொடர்கின்றது

(யோவான் 5:31-47)

பரிசேயர்களுக்கான பதில் இன்றைய நற்செய்தியிலும் தொடர்கின்றது. இயேசுவே இறைமகன் என்பதற்கான சான்றுகளைத் தனக்குத்தானே எடுத்துக்காட்டுவதோடு, மற்றவர்கள் அவருக்கு சான்று பகர்ந்தது பற்றியும் எடுத்துரைக்கின்றார். இதில் தந்தைக் கடவுளின் சான்றும், திருமுழுக்கு யோவானின் சான்றும் மிகவும் இன்றியமையாதவை. ஆனால் இச்சான்றுகள் அனைத்தும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே இருந்தன. அதனால் யூதர்களுக்குக் குறிப்பாகப் பரிசேயர்களுக்கு இயேசுவே இறைமகன் என்று கூறுவது மிகவும் கடினமாக இருந்தது. அச்சான்றுகளை அறியாதவர்கள் பலர். அறிந்தவர்களிலும் உணர்ந்தவர்கள் சிலர். இப்படியிருக்க எப்படி இயேசுவின் சான்றினை ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால் இயேசு தான் இறைமகன் என்பதனை தன் வார்த்தைகளால் மட்டும் காட்டவில்லை. மாறாகத் தன் செயல்களினாலும் காட்டினார். அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லை. மற்றவர்களைப் போல அவர் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. மாறாகத் தான் சொன்னது அனைத்தையும் செய்துவிட்டுச் சென்றார்.

காண்க :
“பார்வையற்றோர் பார்க்கின்றனர், ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், காது கேளாதோர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவர்க்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. (லூக் 7:22) இவை அனைத்தையும் அவர் தம் பணிவாழ்வினை தொடங்கும் முன்பே சொன்னார். சொன்னதைச் செய்தும் காட்டினார்.
“தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவான் 15:13) இதனைத் தனது வாழ்நாளின் கடைசி நேரத்தில் நமக்காக பலியானார் இயேசு என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

இவ்வாறு கிறித்து என்பதை அவர் தமது சொல்லினாலும் செயலினாலும் நிரூபித்தார். கிறித்து + அவர்கள் ஸ்ரீ கிறித்தவர்கள். உண்மைக் கிறித்தவர்கள் என்றால் நம் சொல்லினால் மட்டுமல்ல நமது செயல்களும் கிறித்தவர்கள் என்பதற்குச் சான்று பகரட்டும். சான்று பகர இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.