தீர்ந்தது தீர்க்கமாகும்

07.01.2023 – யோவான் 2: 1 – 12

2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, 2018 ம் ஆண்டு நடந்த கஜா புயல், 2017 ல் ஏற்பட்ட ஓகி புயல் இவைகளின் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாக்கப்பட்டார்கள். இதனால் தங்களிடமிருந்த பொருட்களெல்லாம் தீர்ந்து போனது. முகம் தெரியாத, முகவரி தெரியாத மனிதர்கள் முன்வந்து இவர்களின் தீர்வை தீர்க்கமாக்கினர். காரணம், தாங்கள் கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்குத் தங்களையே அர்ப்பணித்தார்கள். அது போலத்தான் கானாவூர் நிகழ்வு. யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாட்கள் நடக்கின்ற ஒரு சமூக விழா. குடிபானங்களிலே தயாரிப்பதற்கென்று அதிக நாட்கள் எடுக்கக்கூடிய குளிர்பானம் திராட்சை ரசம். ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகும். அப்படியென்றால் திருமண வீட்டார் எத்தனை வருடங்களாக இருந்து தயாரித்திருப்பார்கள் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த குறைவு பசி அல்லது வெறும் உடலை சார்ந்த குறைவு அல்ல. மாறாக, சமுதாயத்தில் அந்தஸ்தை காட்டுகின்ற குறைவு. அத்தகைய தீர்வில் தான் இயேசு தீர்க்கத்தைக் கொடுக்கின்றார். எவ்வொறெனில் அவர்கள் தங்களிடமிருந்த தண்ணீரை இயேசுவிடம் அர்ப்பணித்தார்கள். அந்த அர்ப்பணிப்பு தான் தீர்வை தீர்க்கமாக மாற்றுகிறது.

நம்முடைய வாழ்வில் அன்பு, பாசம், பொறுமை, கீழ்ப்படிதல், நம்பிக்கை தீர்ந்து போய்க் கொண்டே இருக்கிறதா? பயம் வேண்டாம். கடவுளிடம் நம்மை அர்ப்பணிப்போம். கடவுள் தீர்க்கமாக்குவார். அர்ப்பணிக்க தயாரா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.