Category: Prayers in Tamil

MEN OF LOVE

“Husbands, love your wives, as Christ loved the Church. He gave Himself up for her.” –Ephesians 5:25 Our modern culture chokes on the opening of today’s first reading, “Wives should be submissive to their husbands” (Eph 5:22). Yet that is not the most radical sentence of this passage. St. Paul’s call for husbands to love their wives, in the same way as Jesus loves the Church, is an extraordinarily radical challenge, both for the culture of Paul’s time, and for every age since. In Paul’s time, wives were considered the property of the husband and had no rights at all....

கடற்கரை சகாய மாதா மன்றாட்டு ஜெபம்

கடற்கரை சகாய மாதா மன்றாட்டு ஜெபம் அருள் மழை பொழியும் கடற்கரை சகாய தாயே துன்பப்படுவோரின் துயர் துடைக்கும் தயை மிகு தாயே இதோ அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம் உமது வல்லமையுள்ள மன்றாட்டினால் எங்களை காத்தருளும  நாங்கள் எவ்வித தவறிலும்/ கேட்டிலும்/ விழாதபடி எங்களைக் கரம்பிடித்து/ வழி நடத்தும் தாயே அன்று இந்த ஆலயத்தையும் இப்பகுதியையும் காப்பாற்ற வேண்டி நீர் வீற்றிருந்த கெபியை இக்கடலுக்கு காணிக்கையாக்கிய  கடற்க்கரை சகாய தாயே எங்களை காத்தருளும் சுனாமி காலத்தில் பொங்கியெழுந்த/ கடலின் சீற்றத்திலிருந்து எங்களை காப்பாற்றிய கருணைத் தாயே எங்கள் மன்றாட்டை இறை இயேசுவிடம் எடுத்துச் சொல்லும் துன்ப துயரங்களிலிருந்து எங்களை காப்பாற்றும் தீராத வியாதிகளிலிருந்து எங்களை விடுவித்தருளும் வறுமையில் வாழும் எங்கள் வாழ்வை வளமாக்கும் எங்களுக்கு சமாதானத்தை தந்தருளும் ஆமென்

பாவ மன்னிப்புக்காக

              பாவ மன்னிப்புக்காக கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரக்கம் காட்டியருளும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும் . என் பாவம் அற்றுப் போகும்படி என்னைத் தூய்மைபடுத்தியருளும். என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக பாவம் செய்தேன். உமது பார்வையில் தீயது செய்தேன் இதே தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன். பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள் இறைவா! மெய்ஞ்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும். என் பாவக் கறைகளை எல்லாம் துடைத்தருளும். தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதி தந்து புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே  உருவாக்கியருளும். உம் தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும். உமது மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.-ஆமென்.