Category: Prayers in Tamil

திருச் சிலுவை முன்பு ஜெபம்

மிகவும் கனிவும் இனிமையும் கொண்ட இயேசுவே!என் முன் ஆன்ம ஆவல்களுடன் உம் திரு முன் முழந்தாளிட்டு வேண்டுகிறேன்,விசுவாசம்,நம்பிக்கை,அன்பு என்னும் வரங்களால் என்  ஆன்மாவை புதுபித்து உண்மையாக என் பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும் ஆழ்ந்த பாசத்தோடும்,வருத்தத்தோடும் உம் திருக்காயங்களை தியானித்து உம்மைப் பற்றி தாவீது முன்னுரைத்த படியே,ஓ என் நல்ல இயேசுவே!”அவர்கள் உம் கைகளையும்,கால்களையும் துளைத்து உம் எலும்புகளையும் எண்ணினார்கள்”என்பதை நினைவு கூர்ந்து வாழச் செய்தருளும்.ஆமென்.

மகிமையின் மறை உண்மைகள்

மகிமையின் மறை உண்மைகள்                                           புதன்,ஞாயிறு 1) இயேசு புதுவாழ்விற்கு உயிர்த்தார்: மருத்துவ தொழிலின் அங்கத்தினர் அனைவரும் மனித வாழ்வை காக்க அர்ப்பணீக்கப்பட்டவர் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டுமென்று வேண்டுவோம். 2) தந்தையின் வலப்பக்கத்திற்கு உயர்த்துப் பெற்று நமக்காக பரிந்து பேசுகிறார்: மனித வாழ்வின் மாண்பின் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொருவரும் திடப்படுத்தப்பட வேண்டுமென மன்றாடுவோம். 3) தெளிவுப்படுத்தி உறுதிப்படுத்தும் தூய ஆவியால் திருத்தூதர்கள் நிரப்பபடுதல்: மனித மாண்பின் மேன்மைக்காக உழைப்பவர்கள் அனைவரும் தெளிவுப்படுத்தி உறுதிப்படுத்தும் தூய ஆவியால் நிரப்பப்பட வேண்டுமாய் செபிப்போம். 4)  பல இடங்களின் நடுவே தம் பொறுப்புகள் நிறைவு பெற்றவுடன் மரியாள் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டவர்: பெற்றோர்கள் தங்கள் பொறுப்புகளை ஒற்றுமையுடன் நிறைவேற்றி. தங்கள் பிள்ளைகள் மீது உள்ள கடமைகளைப் பொறுப்புடன் செயல்படுத்த மன்றாடுவோம் . 5)   மரியாள் இயேசுவின் பாடுகளில் பங்கேற்று அவரின் அரசுரிமையிலும் பங்கேற்றவலாய் முடி சூட்டப்பெற்றால்: நாம் அனைவரும் இயேசுவின் பாடுகளில்...

துயர்மிகு மறை உண்மைகள்

துயர்மிகு மறை உண்மைகள்     செவ்வாய்,வெள்ளி,தவக்கால ஞாயிறு. 1) இயேசு வர இருக்கும் துன்பம் குறித்து துயருறுத்தல்: பிள்ளை பேற்றின் துன்பத்தால் துயருறும் பெண்கள் உறுதியுடன் துயரினை ஏற்கும் மனபலம் பெற மன்றாடுவோம். 2) இயேசு கற்றுணீல் கசையடிப்படுதல்: கருகலைப்பு செயல்களால் துன்பம் அனுபவிக்கும் பெண்களுக்காக ஜெபிப்போம். 3)  இயேசு முள்முடி சூட்டப்படுதல்: இளம் குழந்தைகளை கொன்ற செயல்களுக்கும் அவ்வாறு செய்த தாய்மார்களை கேலிக்கு உள்ளாக்கிய செயல்களுக்குப் பரிகாரமாக இந்த பத்து மணிகளை அர்ப்பணிப்போம். 4)  இயேசு சிலுவை சுமத்தல்: மிக இளமையிலேயே பிறப்பதற்கு முன்னதாக தங்கள் குழந்தைகளை இழந்த தம்பதிகளுக்காக இப்பத்து மணிகளை ஒப்புக்கொடுப்போம் 5)   இயேசு சிலுவையில் தந்தையே இவர்களை மன்னியும் என உரக்க அழுதல்: கருச் சிதைவு செய்ய ஊக்குவிப்போர் அனைவரையும் மன்னிக்க வேண்டுமாய் அழுது மன்றாடுவோம்.

இரவு ஜெபம்

முன்:நாம் தூங்க செல்லும் முன் இந்த நல்ல நாளை நமக்குத்தந்து பல அருட்கொடைகளை வழங்கிய இறைவனக்கு நன்றி செலுத்துவோம்.இன்று நாம் செய்ய தவறிய நம் கடைமைகளை இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் எதாவது நன்மை செய்தருளித்தல் அவற்றைநம் அன்பின் காணிக்கையாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம். முன்:தந்தை,மகன்,தூய ஆவியின் பெயராலே.ஆமென். முன்:என் இறைவா! அணை:என் இறைவா!உம்மை ஆராதிக்கிறேன்.என் முழு உள்ளத்தோடு உம்மை நேசிக்கிறேன்.என்னைக் உண்டாக்கி கிறிஸ்துவனாக்கி இந்த நாளில் என்னைக் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.இன்று நான் செய்த தீமைகளுக்காக என்னை மன்னித்தருளும்.எதாவது நன்மை செய்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும். நான் தூங்கும் பொழுது என்னைக்காப்பற்றி ஆபத்துகளிலே இருந்து என்னை விடுவித்தருளும் உமது அருள் என்னோடும் நான் நேசிக்கும் அனைவரோடும் எப்போழுதும் இருப்பதாக ஆமென். முன்:என் இறைவா !நன்மை நிறைந்தவர் நீர்.அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. அணை:என் பாவங்களால் உம்மை மன நோகச்செய்தேன்,எனவே குற்றங்கள் பல செய்தேன் எனவும் நன்மைகள் பல செய்ய...

வாழ்விற்கான ஜெபமாலை

வாழ்விற்கான ஜெபமாலை திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.                                                              மகிழ்வின் மறை உண்மைகள் திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.    1    இயேசு பிறப்பின் அறிவிப்பு:          அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்ற நொடியில் இருந்தே அவளில் இறைவார்த்தை உயிருடன்          வாழ்ந்தது என்பதை தூய ஆவி நமக்கு கற்பிக்க ஜெபிப்போம்.    2    மரியாள் எலிசபெத் சந்திப்பு:        மரியாள்அதிவிரைவாக சென்று எலிசபெத்தை வாழ்த்தினால்.மரியாளை போன்று நாமும்        கருத்தாங்கி உள்ள பெண்களுக்குப் அதிவிரைவில் துணைசெய்ய அருள் வேண்டுவோம்.   3    இயேசுவின் பிறப்பு:      ...