Tagged: verse of the day in tamil

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 10:12

பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்: தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும். நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 10:12

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 15:5

கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! ~ உரோமையருக்கு எழுதிய திருமுகம் 15:5

லூக்கா நற்செய்தி 1:68

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். ~லூக்கா நற்செய்தி 1:68

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 138:8

நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 138:8

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 5:7

நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். உரோமையருக்கு எழுதிய திருமுகம் 5:7