Tagged: verse of the day in tamil

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:39

உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை. ~ உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:39

கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3:13

ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3:13

யோவான் முதல் திருமுகம் (1 அருளப்பர்) 3:16

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ~யோவான் முதல் திருமுகம் (1 அருளப்பர்) 3:16

யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:6

நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். ~யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:6

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 17:17

நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்: இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 17:17