Tagged: daily verse

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 3:16

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 3:16

எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:10

ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு: நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார். ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:10