Tagged: Daily manna

அன்பின் தின சிறப்பு நிகழ்ச்சி

அன்பானவர்களே!உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான அன்பின் நல்வாழ்த்துக்கள். கடவுள் மனிதனை படைத்து அவன் இதயத்தில் அன்பு என்ற பூவை உருவாக்கி அந்த பூ அந்த மனிதனையும், அவனை சார்ந்த அனைவரையும் மணக்க செய்ய வேண்டுமாய் விரும்பி மனிதனின் இதயத்தில் அன்பை விதைத்தார். ஆனால் நாமோ பிறரை அன்பு என்ற மனம் கொண்டு கவர்ந்து செயல்படுவதை விட்டு, சுயநலம், தற்புகழ்ச்சி, பெருமை, வெறுப்பு, தன்னலம் என்று நமக்கே நமக்கு என்று வாழ்ந்து கடவுளின் வழியில் இருந்து பிரிந்து சென்று பல இன்னல்களை வருவித்து கொள்கிறோம். இன்று உலகம் முழுக்க உள்ள அனைத்து மக்களும் கொண்டாடும் காதலர் தினம் அதாவது அன்பின் தினத்திற்கான அர்த்தம் புரியாமல் நம் இஷ்டத்துக்கு வாழ்ந்து பாவத்தை சேர்த்து கொள்கிறோம். காதல் என்றால் அன்பு. அந்த அன்பை நாம் எவ்வாறு கடைப்பிடித்து வாழ்கிறோம் என்று நாம் யோசித்து நம் மனசாட்சியில் குற்றமற்றவர்களாய் வாழ கற்றுக்கொள்வோம். காதலர் தினம் கொண்டாடுவது தவறு...

நம் நம்பிக்கையால் உலகத்தையே வெல்லலாம்.

இயேசுகிறிஸ்துவின் பேரில் நம்பிக்கை கொண்ட அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! நாம் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய் விடுவதும் அல்லாமல் தற்கொலை செய்யும் அளவுக்கு கூட போய்விடுகிறோம். ஆத்திரத்திலும், அவசரத்திலும் எடுக்கும் முடிவு நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது. அதனால்தான் நம் ஆண்டவர் அவருடைய பிள்ளைகள் ஒருபோதும் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய்விடக் கூடாது என்று நமக்கு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்து அவருடைய உயிரையே கொடுத்து நம்மை மீட்டு காத்தும் வருகிறார். மானிட அவதாரம் எடுத்த நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவராகிய கடவுள் அவருடைய திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே நாம் யாவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக ஆகும்படி நம்பிக்கையை நம் இதயத்தில் வைத்துள்ளார். அது குறையாதபடிக்கு காத்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.        ரோமர் 3:28. நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்தில்...

கடவுளின் மீட்பு

விண்ணுலகையும், மண்ணுலைகையும் படைத்து, விண்ணுலகை ஆள்வதற்கு தேவதூதர்களையும், மண்ணுலகை ஆள்வதற்கு தமது தொற்றத்தின்படியே மனிதனை உருவாக்கி, ஒரே இரத்தத்தால் தோன்றச் செய்து ஆசீர்வதித்து உலகம் தோன்றின காலமுதல் இன்றுவரை யதார்த்தமாய் வழிநடத்திய நம் கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பானவர்களே!  நாம் பாவத்திலும், சாபத்திலும், விழுந்து போகாதபடிக்கு சாத்தானின் நரித்தனமான சோதனைகளிலிருந்து மீட்கவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் குழந்தையாய் அவதரித்து நம்முடைய சமாதானத்துக்காக, சந்தோசத்திற்காக அவர் தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து தம்மை தாழ்த்தி சிலுவையை சுமந்து தலையில் முள்முடி சூட்டப்பட்டது எதற்காக? மனுகுலமே உங்கள் ஒவ்வொருவருக்காக. கிறிஸ்து என்பது ஒருவழி. அதுவும் ஒரேவழி அதுமட்டும்தான்.  திருத்தூதர்பணி 4:12;  யோவான் 14:6 ; அவராலே அன்றி மீட்பு யார் மூலமாகவும் இல்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். சிலபேர் அறியாமல் அவர் கிறிஸ்துவர்களுக்காய் சிலுவை சுமந்தார் என்று நினைத்து [நானும்  ஒருகாலத்தில் இதுமாதிரி அறியாமல் இருந்ததால் இதை உங்களுக்கு சொல்கிறேன்.] தங்களுக்கென்று ,ஒரு கல்லினாலோ அல்லது மரத்தினாலோ ஒரு தெய்வத்தை உண்டுபண்ணி வணங்கி அதற்கு பலி செலுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த கடவுளை நாம் படைக்க...

கண்டித்து திருத்தும் நம் ஆண்டவர்

அன்பானவர்களே!!! நாம் இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கையில் நமக்கு எது முக்கியம் என்று தெரியாமல் அநேக காரியங்களில் தலையிட்டு சில சமயங்களில் நமக்கு நாமே எதிரி என்று சொல்லும் அளவுக்கு நம் எண்ணங்களும்,செயல்களும்,சில நேரங்களில் பொல்லாதவனவாக மாறிவிடுகிறது. அதனால்தான் நம்முடைய தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்கு துணை நிற்கிறார். ஏனெனில் எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக நமக்காக பரிந்து பேசுகிறார். உள்ளங்களை துருவி ஆயும் கடவுள் தூயஆவியாரின் மனநிலையை அறிவதால் கடவுளுக்கு உகந்த முறையில் நமக்காக வேண்டுதல் செய்கிறார். நாம் செய்ய வேண்டிய காரியத்தை நமக்கு தெளிவாக புரியவைக்கிறார். ரோமையர் 8:26-27 . ஒருசில நேரங்களில் நாம் வேண்டிக்கொள்வது நமக்கு கிடைக்காத பட்சத்தில் நம் மனம் சோர்ந்து போகிறோம். இல்லை பிரியமானவர்களே!! அதைவிட மேலான பெரிய காரியத்தை தரும்படிக்கே கடவுள் சமயத்தில்...

இந்நாளின் ஆசீர்வாதம்

இந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை கடவுள் உங்களுக்கு தர ஆவலோடு இதோ உங்கள் அருகில்,உங்கள் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் – மத்தேயு 11:28.இதோ என்னையே உங்களுக்காக கொடுத்தேனே. நீங்கள் விரும்பி கேட்கும் ஆசீர்வாதத்தை தரமாட்டேனா என்னை நோக்கி கூப்பிடும் யாவரையும் நான் ஆற்றி தேற்றுவேன். “நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்” – யோவான் 14 :14. ஜெபம். அன்பே உருவான இயேசப்பா, உம்மிடத்தில் வருகிரயாவரையும் அணைத்து காத்து நடத்தும் தகப்பனே உமக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னை நோக்கி கூப்பிடு,அப்பொழுது நான் உனக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன் என்று வாக்கு கொடுத்த இறைவா, உம்மையே நம்பி கூப்பிடுகிறேன். என்னுடைய எல்லா கஷ்டத்தையும் நீக்கி கரம் பிடித்து வழி நடத்தி காத்துக்கொள்ளும். எல்லா துதி,கணம்,மகிமை,உமக்கே  உண்டாகட்டும். கிறிஸ்துவுக்கே புகழ்!  கிறிஸ்துவுக்கு நன்றி ! ஆமென்.