Tagged: Daily manna

அன்பும், அமைதியும் அளிக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

அன்பான சகோதர,சகோதரிகளே!நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நம்முடைய நம்பிக்கையில் நிலைத்திருந்து நம்மையே சோதித்து பார்த்து நம் நடக்கையை சீர்தூக்கிப் பார்ப்போம். ஒருவருக்கொருவர் மன ஒற்றுமையுடன் இருந்து ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து அமைதியுடனும்,பொறுமையுடனும் வாழும் பொழுது நமது ஆண்டவரும் நமக்கு தமது அன்பையும், அமைதியையும் அளித்து நம்மோடு கூடவே இருந்து நாம் செல்லும் இடமெங்கும் நமது கரம் பிடித்து வழிநடத்தி நாம் விரும்பி கேட்கும் யாவையும் கொடுத்து நமது மனவிருப்பங்கள் முழுவதையும் நிறைவேற்றி நம்மை அரவணைத்து, ஆசீர்வதித்து காத்தருள்வார். கர்த்தர் உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். அதுபோல் நாமும் ஒருவடோருவர் அன்பு வைத்தால் அவருடைய பிள்ளைகளாய் அவருடைய பிள்ளைகள் என்ற நற்சாட்சியை பெற்று வாழலாம். ஏனெனில் நாம் இயேசுவினிடத்தில் நம்பிக்கை கொண்டால் அவரை அனுப்பிய பிதாவினிடத்திலும் நம்பிக்கை கொள்கிறோம். அவரை யூதாஸ் காட்டிக்கொடுப்பது தெரிந்தும் அவனை ஆண்டவர் வெறுக்கவில்லை. அவனை சிநேகதனே நீ செய்ய வேண்டியதை சீக்கிரமாய் செய் என்றே கூறி முடிவு...

கர்த்தர் வெறுக்கும் காரியங்களை நாம் செய்யாமல் இருப்போம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஆண்டவர் விரும்பும் காரியங்களில் நடந்து அவர் ஒருவருக்கே மகிமை உண்டாக வாழ்ந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்ற ஒன்றுபடுவோம். நாம் ஒருவரோடு ஒருவர் உண்மையாய் இருப்போம். நாம் வாழும் வாழ்க்கை நீதியாகவும், நல்லுறவுக்கு வழி கோலுவதாகவும் இருக்கட்டும். ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமைசெய்ய மனத்தாலும் நினைக்காமலும், பொய்யாணை இடுவதையும் தவிர்ப்போம். ஏனெனில் இவைகளை நமது ஆண்டவர் வெறுக்கிறார். செக்கரியா 8 – 16 ,17. நீதியை விதைப்போம்,அன்பின் கனியை அறுவடை செய்வோம். ஆணவத்தையும், இறுமாப்பையும், தீமையையும், உருட்டையும்,  புரட்டையும் கர்த்தர் வெறுக்கிறார். கடவுள் நேர்மையாளரையும், பொல்லாரையும் சோதித்தறிகிறார். வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கிறார். நேர்மையுடன் நீதி வழங்கவும், ஒருவருக்கொருவர் அன்பும், கருணையும் காட்டுவோம். நம்முடைய சகோதரருக்கு எதிராக தீமைசெய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம். ஆவியானவர் வாயிலாக நமது ஆண்டவர் போதிக்கும் திருச்சட்டத்தையும், வாக்குகளையும் கேட்டும் நமது இதயத்தை கடினப்படுத்தாதபடிக்கு ஆண்டவரின் வார்த்தைக்கு செவிகொடுப்போம். அவர் நமக்கு கட்டளையிடும் காரியங்களை நாம் செய்யாவிட்டால் நமது...

பக்தி வழியில் மட்டுமல்ல, அன்பின் வழியிலும் நடப்போம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இரவு தனித்திருந்து தமது பிதாவை நோக்கி வேண்டுதல் செய்கிறார். பகல் முழுதும் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் அளித்து அவர்கள் நோய்களை சுகமாக்கி, பிசாசுகளை துரத்தி ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் நிறைவேற்றினார் என்று வாசிக்கிறோம். நாமும் அவர் காட்டிய வழியில் நடப்போம். வெறுமனே ஜெபம் செய்வதை மட்டும் செய்யாமல் அவர்களின் தேவைகளை அறிந்து நம்மால் இயன்ற வரை உதவிக்கரம் நீட்டுவோம். ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்பவர் எல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே உமது பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உமது பெயரால் நாங்கள் பேய்களை ஓட்டவில்லையா, உமது பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா என்பர். அதற்கு நான் அவர்களிடம் உங்களை எனக்கு தெரியவே,தெரியாது. நெறிகேடாகச் செயல்படுபவரே, என்னை விட்டு எல்லாரும் அகன்று...

கடவுள் நமக்கு குறித்துள்ளதை நிறைவேற்றுவார்.யோபு 23:14.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே நம்மை ஆண்டவர் அறிந்து நமது தேவைகளை குறித்து வைத்துள்ளார். அதை ஏற்ற நேரத்தில் செயல் படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவரின் சமுகத்தில் வாழ்வின் நூல் [ஜீவ புஸ்தகம் ] ஒன்று அவரின் கையில் உள்ளது. அவரே முதலும் முடிவும் ஆனவர். வாழ்பவரும் அவரே! சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் உடையவர் அவரே. நமக்குள்ளதை நிச்சயம் நிறைவேற்றுவார். மனம் கலங்காதீர்கள். சோர்ந்து போகாதீர்கள். என் வாழ்க்கையில் நடந்த ஒரு காரியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா,ஆஸ்திரேலியா நாடுகளைப் பற்றி புத்தகத்தில் படித்துள்ளேன். ஆனால் அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. 2012ல் bible quiz ல் பங்கு பெற்றதால் அதை வெளியிட்ட father எனக்கு அறிமுகமானார். அவர் அப்பொழுது அமெரிக்காவில் இருந்தார். ஒருநாள் பேசும்பொழுது நான் father இடம் நானும் அமெரிக்கா வருவேன் என்று சொன்னேன். அப்பொழுது அவர்,அமெரிக்கா வரவேண்டும் என்றால் விசா எல்லாம் வாங்க வேண்டும்....

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது,ஆற்றல் வாய்ந்தது.எபிரெயர் 4-12

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! இந்த நாளிலும் நமது தேவைகளை குறித்து கலங்கி நிற்கும் நமக்கு கடவுள் தமது வார்த்தையை அனுப்பி நம்முடைய எல்லா தேவைகளையும் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். ஏற்ற நேரத்தில் நம்மை உயர்த்துவார்.நீங்கள் உங்கள் பணியில் ஒழுங்காக இருந்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, அல்லது சம்பள உயர்வு கிடைக்கவில்லையே என்று மனம் கலங்கி தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். ஆண்டவர் சில சமயம் இரண்டு மடங்கு நன்மையை கொடுப்பதற்காக ஒரு மடங்கு நன்மையை கொடுக்க மாட்டார். அதனால் காலதாமதம் ஏற்படும். நாம் எந்த சூழ்நிலையிலும் நமது பொறுமையை இழந்துவிடாத படிக்கு ஆண்டவரிடம் முறுமுறுக்காமல் இருக்க வேண்டும். வேதத்தில் எஸ்தர் புத்தகத்தில் ஒரு சம்பவம் நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. மொர்தெகாய் என்பவர் அரச வாயிலில் பணிபுரிந்துக்கொண்டு இருந்தார். அந்த நாட்களில் பிகதான், தெரேசு என்ற இருவர் மன்னர் அகாஸ்வேரைத் தாக்க சினங்கொண்டு அவரை தாக்க ஆலோசனை செய்தனர். இந்த காரியம் மொர்தெகாய்க்கு தெரிந்தது. உடனே அவர்...