Tagged: Daily manna

நாம் ஆண்டவர்மேல் வைக்கும் விசுவாசம் நீதியாக எண்ணப்படும்.

கர்த்தருக்குள் அன்பானவர்களுக்கு நம்முடைய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமது முழு நம்பிக்கையையும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேலேயே வைத்து நமது நம்பிக்கையில் நிலைத்திருப்போம். நாம் எந்த ஒரு செயலையும் செய்யாவிட்டாலும் நமது ஆண்டவர்மேல் முழு நம்பிக்கையும் வைத்து காத்திருந்தோமானால் அந்த நம்பிக்கையின் பொருட்டு நம்மை நீதியுள்ளவர்களாக கடவுள் நினைப்பார். ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்தார். அதை கடவுள் அவருக்கு நீதியாக கருதினார். அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் இது முடியவே முடியாது என்று நினைக்கும் ஒரு காரியத்தில் நிச்சயமாக கடவுளால் முடியும் என்று நம்பிக்கையில் உறுதிப்பட்டால் அப்பொழுது அந்த நம்முடைய நம்பிக்கையின் பொருட்டு கடவுள் அதை நிறைவேற்றி தருவார். ஏனெனில் நம்பிக்கை அத்தனை பெலம் வாய்ந்தது. இதைத்தான் உரோமையர் 4:5 ல் இவ்வாறு வாசிக்கிறோம். தம் செயல்கள்மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்றில்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரையும், அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார். கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால்...

எப்பொழுதும் விழிப்பாயிருந்து ஜெபம் செய்திடுவோம். லூக்கா 21:36.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமக்கு ஏற்படும் எல்லா தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆண்டவரின் பாதத்தில் நம்மை ஒப்புவித்து அவரையே சார்ந்து அவரையே பற்றிக்கொண்டால் அப்பொழுது நமக்கு ஏற்படும் எல்லா தொல்லைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்து கோழி தன் குஞ்சுகளை காக்கும் வண்ணமாய் நமது ஆண்டவரும் நம்மை பாதுக்காத்து வழிநடத்துவார். நாம் இந்த உலக பிரமான காரியத்தில் ஈடுபடும் முன்னே அதற்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம், அதற்காக எவ்வளவோ பிரயாசப்பட்டு ஆயத்தமாகிறோம். ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டுமானால் அதற்காக மாதக்கணக்கில் பயிற்சி எடுக்கிறோம். ஒரு பரீட்சைக்கு  தயாராக வருஷ கணக்கில் படிக்கிறோம். அதுவே ஆண்டவரின் காரியத்தில் நாம் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கிறோம்? எவ்வளவு நேரம் ஜெபம் செய்கிறோம்? ஆராய்ந்து பார்ப்போம். அழிந்து போகும் காரியத்துக்கு அவ்வளவு நேரத்தை ஒதுக்கும் நாம் அழிவில்லாத நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ள எவ்வளவு நேரம் ஆயத்தமாகிறோம் என்று இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் மனசாட்சியிடம்...

நமக்கு எதிராக செய்த பொல்லாப்பை தேவன் அவர்கள் மேலேயே திருப்புவார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயராலே என் அன்பின் நல்வாழ்த்துக்கள். பொறாமை கொண்ட இந்த உலகத்தில் வாழும் நமக்கு அநேகர் எந்த வகையினாகிலும் தீங்கு செய்ய காத்திருப்பார்கள். ஆனால் நம்முடைய ஆண்டவர் சொல்கிறார், என் மகனே, மகளே நீ கவலைப்படாதே, உனக்கு எதிராக உருவாகும் எந்த ஆயுதமும் வாய்க்காமல் போகும்படி செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆகையால் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் உங்கள் கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் என்னிடத்தில் தாருங்கள் நான் அவைகளை உங்களுக்காக சுமந்து உங்களை ஒரு தீங்கும் அணுகாமல் என் உள்ளங்கையில் ஏந்துவேன் என்று நமக்கு வாக்கு அளித்து அதன்படியே நம்மை காப்பார். பொல்லாப்பை நம்மை விட்டு விலக்கி காத்திடுவார். நீதித்தலைவர்கள் புத்தகத்தில் 9ம் அதிகாரத்தில் நாம் ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம். அபிமெலேக்கு என்னும் ஒருவன் தனது 70 சகோதரர்களையும், ஒரே கல்லின்மேல் வைத்து கொலை செய்கிறான். அந்த ஊர் மக்களும் அவனையே இஸ்ரயேலை...

ஆண்டவரை நம்பினோர் நிச்சயம் அவராலே ஆசீர்வதிக்கப்படுவர்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஆண்டவரையே முழுதும் பற்றிக்கொண்டு அவரையே நம்பி இருப்போமானால் நிச்சயம் நம்மை ஒருபோதும் கைவிடவேமாட்டார். யார் மூலமோ எதைக்கொண்டோ செயல்பட வல்லவராய் இருக்கிறார்.சுமார் கி.மு.1020 லிருந்து 1025 வரை உள்ள காலங்களில் ரூத் என்னும் சரித்திரத்தின் மூலம் நமக்கு வேதத்தில் ஒரு சம்பவம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அக்கால கட்டத்தில் எலிமெலேக்கு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் தனது மனைவி நகோமியோடும் தன் இரண்டு பிள்ளைகள் மக்லோன், கிலியோன் ஆகியரோடும் எருசலேமில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும்பொழுது ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் எருசலேமை விட்டு மோவாப் தேசத்துக்கு பிரயாணப்பட்டு போனார்கள். அந்த ஊரில் எவ்வளவோ ஜனங்கள் இருக்கும் பொழுது அவர்கள் மாத்திரம் அந்த ஊரை விட்டு வேறே ஊருக்கு போனார்கள். அங்கு போனால் அவர்கள் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் அங்கு போன சில வருஷங்களில் நகோமியின் கணவர் இறந்து விட்டார். அவளுடைய இரண்டு குமாரர் மாத்திரம் இருந்தார்கள்....

ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை நமக்கு கொடுப்பவர் ஆண்டவர். உபாகமம் 8:18.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளினால் சிக்கித் தவிக்கும் உங்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்தித்து உங்களை ஆற்றி தேற்றி, ஆறுதல் அடையச் செய்வார். கடன் பிரச்சனை, வீட்டில் வறுமை, நோய்களினால் தொல்லை, குடும்பத்தில் சமாதானம் இல்லாமல் தவிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் தேவைகளை சந்திக்கவே, அதாவது உங்களுடைய பின்நாட்களில் உங்களுக்கு நன்மை செய்யும் பொருட்டே, இந்த நாட்களில் ஆண்டவர் உங்களை சில பாடுகளின் வழியாக அழைத்து செல்கிறார். உங்களை சிறுமைபடுத்தி, சோதித்து பின்னர் தமது மகிமையின் ஐசுவரியத்தினால் நீங்கள் ஐசுவரியவானாகும்படி செய்யவே ,அதை சம்பாதிக்கும் திறமையையும், பெலனையும், அறிவையும்,ஞானத்தையும் கொடுக்கிறார். கொஞ்சக்காலம் கஷ்டப்படுகிற உங்களை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலைநிறுத்துவார். ஆகையால் இந்த நாளில் உள்ள பாடுகளை நினைத்து மனம் சோர்ந்து போகாமல் அதை பொறுமையோடு சகித்து ஆண்டவரிடத்தில்...