Tagged: Daily manna

துறந்தால் மகிழ்ச்சி தூரமில்லை

மத்தேயு 13:44-46 “கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்பது நமக்குத் தெரிந்த பழமொழி. மனிதர்கள் பெரும்பாலும் இரண்டிற்கும் ஆசைப்படுவதால் ஆபத்தான பல நேரங்களை சந்திக்க நேரிடுகிறது. மனதிற்குள்ளே நாளும் மகிழ்ச்சி மத்தளமிட வேண்டுமென்றால் ஒருசிலவற்றை நம்மிடமிருந்து கழிக்க வேண்டும். ஒருசில அவசியமற்றவைகளை துறந்து தூரே தள்ளிவிட வேண்டும். நம்முடைய ஒருசில தீய பண்புகளையும் நம்மிடமிருந்து எரித்து சாம்பாலாக்க வேண்டும். இன்றைய நற்செய்தியில் புதையலை கண்டுபிடித்த ஒருவரும், முத்தை கண்டுபிடித்த ஒருவரும் மகிழ்ச்சியை சம்பாதிப்பதற்காக, உருவாக்குவதற்காக தங்களுக்குள் வைத்திருந்த அவசியமற்ற அனைத்தையும் துறக்கிறார்கள். முழுவதும் வேண்டாமென்று துறக்கிறார்கள். ஏனெனில் இந்த குப்பைகளை தூரே தட்டினால் தான் தங்களுக்குள் பேரின்பம் உண்டு என்பதை உணா்ந்த அவர்கள் இந்த சிறப்பான செயலை செய்கிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். மகிழ்ச்சி என்பது எப்போதும் நம் அருகிலே உள்ளது. அதை நமக்கு மிகவும் தூரமாக்குவது நாம் தான். நிலையான மகிச்சியை நமக்குள் உருவாக்க வேண்டுமெனில் நாம் இழந்தே ஆக வேண்டும்....

இயேசுவின் திரு இதயம் !

இன்று நாம் இயேசுவின் திரு இதயத்துக்கு விழா எடுக்கிறோம். இதயம் என்பது அன்பின் அடையாளம். பரிவின் வெளிப்பாடு. இயேசு பரிவும், கனிவும் நிறைந்த இதயத்தவராக இருந்தார். எனவேதான், என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், நான் இதயத்தில் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (மத் 11:29) என்று மொழிந்தார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் இதயம் கல்லானதாக மாறிவிட்டதாக, யாவே இறைவன் குறைப்பட்டார். எனவேதான், கல்லான இதயத்தை மாற்றிவிட்டு, கனிவான இதயம் தருவதாக எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக வாக்களித்தார். அந்த வாக்குறுதி இயேசுவின் திரு இதயத்தில் நிறைவு பெற்றது. இயேசுவின் இதயம் ஏழைகள், பாவிகள் என ஒதுக்கப்பட்டோர், ஊனமுற்றோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர் போன்ற ஓரங்கட்டப்பட்ட அனைவருக்காகவும் துடித்தது, அழுதது, பரிவு கொண்டது. அந்த இதயம் இன்றும் நம்மீதும் பரிவு கொள்கின்றது. நமது குறைபாடுகள், பாவங்கள், குற்றங்கள் அனைத்தையும் ஒரு தாயின் இதயம் போன்று பாசத்துடன் பார்த்து, மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்கிறது. அந்த இதயத்துக்காக நாம் நன்றி கூறி,...

வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்ச்சிகளையெல்லாலம் அனுபவித்திருந்த செக்கரியா, தனது மகனைப்பற்றிய நீண்டதொரு கனவை வைத்திருந்தார். கடவுள் பக்தியுள்ள ஒவ்வொரு பாரம்பரிய யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியா வந்து, அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். மெசியாவின் வருகைக்கு முன்னால், அவருடைய முன்னோடி வந்து, அவருக்கான வழியை ஆயத்தம் செய்வார் என்றும் உறுதியாக நம்பினர். செக்கரியா தனது மகனை மெசியாவின் முன்னோடியாக கனவு கண்டார். தான் அனுபவித்த நிகழ்ச்சிகள், கண்ட காட்சிகள் வழியாக, திருமுழுக்கு யோவான் தான், மெசியாவின் முன்னோடி என்பதை, அவர் ஆணித்தரமாக நம்பினார். நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுமே ஏதோ ஒரு செய்தியை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. தெளிவான பார்வையுடன், நமது அனுபவத்தையும் அத்தோடு இணைத்துப் பார்த்தால் நம்மால் அதை தெளிவாக உணர முடியும். அத்தகைய தெளிவைத்தான், செக்கரியா தனது வாழ்க்கையில் கண்டார். கடவுளின் செய்தியை நாம் அறிந்து கொள்ள,...

இறைவனின் திருவுளம் அறிந்து கொள்ள…

2 அரசர்கள் 22: 8 – 13, 23: 1 – 3 “ஆண்டவரின் இல்லத்தில் சட்டநூலைக் கண்டெடுத்தேன்” என்று, தலைமைக்குரு இல்க்கியா கூறும் வார்த்தைகள் இன்றைய வாசகத்தின் தொடக்கத்தில் அமைந்திருக்கின்றன. இந்த நூலின் முக்கியத்துவம் என்ன? இந்த நூல் எதைப்பற்றிக் கூறுகிறது? இந்த நூலில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்திருந்த சட்டங்களும், இஸ்ரயேல் மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. 2 அரசர்கள் 23: 2ல், இது உடன்படிக்கை நூல் என்று குறிப்பிடப்படுகிறது. 2 குறிப்பேடு 17: 9 ல், “ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் அவர்கள் போதித்தனர்” என்கிற வார்த்தைகள் இந்த நூலையே குறிப்பிடுகிறது. 2 அரசர்கள் 11: 12 ல், யோவாசு அரசனாகிறபோது, உடன்படிக்கைச் சுருளேடு அவனிடம் கொடுக்கப்படுவது, அதனுடைய இருப்பை வெளிப்படுத்துகிறது. இணைச்சட்டம் 31: 26 ல், மனாசேயின் ஆட்சிக்காலத்தில், உடன்படிக்கைப் பேழை அருகில் அது வைக்கப்படுவதைப் பார்க்கிறோம், “இத்திருச்சட்ட நூலை எடுத்து, ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்...

இறைவன் மீதான நம்பிக்கை

2 அரசர்கள் 19: 9 – 11, 14 – 21, 31 – 35, 36 அசீரிய மன்னன் சனகெரிபு, செதேக்கியாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அவன் கடிதம் எழுதுகிறபோது, எத்தியோப்பிய மன்னன் திராக்கா, அவனுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். இந்த திராக்கா பிறப்பால் ஒரு எத்தியோப்பியன். தொடக்கத்தில் நபதாவில் தன்னுடைய ஆட்சியைத் தொடங்கிய அவன், மெல்ல மெல்ல எகிப்து முழுமைக்குமாக தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். பல போர்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். பல வெற்றிகளையும் பெற்றான். குறிப்பாக, அசீரியர்களுக்கு எதிராக பல போர்களில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெற்றான். கிரேக்கர்களால் மிகச்சிறந்த போர்வீரனாக அறியப்படுகிறான். கி.மு.699 ல், அவன் இன்னும் எகிப்தின் அரசனாகவில்லை. எத்தியோப்பியாவின் அரசனாகவே இருந்தான். ஆனால்,எகிப்தை தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே வைத்திருந்தான். அது அசீரிய மன்னன் சனகெரிபின் தாக்குதலுக்கு உட்பட்டதால், அதனைக் காப்பாற்றுவதற்காக, அசீரியர்களுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். அதுதான், இந்த பகுதியில்...