Tagged: Daily manna

புதிய ஆவியைப் பெற்றுக்கொள்வோம்

புரியாமைக்கு இரண்டு காரணங்களைச்சொல்லலாம். 1. புரிகிற அளவுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமை. ஆனால், இது ஒன்றும் பெரிய குறை அல்ல. அதை மற்றவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப நாம் விளக்கிச்சொல்கின்றபோது புரிந்துகொள்வார்கள். 2. புரிய விரும்பாமை. புரிந்து கொள்வதற்கு அறிவிருந்தும், அதைக்கேட்காமல் வேண்டுமென்றே அதில் நாட்டம் இல்லாமல் இருக்கிற நிலை. நிக்கதேம் இந்த இரண்டாம் நிலையில் இருக்கிறார். நிக்கதேம் படித்தவர். உயர்குலத்தைச் சேர்ந்தவர். அறிவு மிகுந்தவர். கேட்பதை உடனடியாகப் புரிந்துகொள்ளும் திறன் படைத்தவர். இருந்தபோதிலும், இயேசு சொல்வதைப் புரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கிறார். புதுப்பிறப்பு என்கிற வார்த்தை நிக்கதேமுக்கு ஒன்றும் புதிதாக இருக்க முடியாது. ஏனெனில், அவர் மறைநூலை கரைத்துக்குடித்தவர். இறைவாக்கினர் எசேக்கியேல் தொடர்ச்சியாக புதிய இதயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார். எசேக்கியேல் 18: 31 “புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்”. மேலும், 36: 26 கூறுகிறது: “நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து...

அருள் நிறைந்த மரியே, வாழ்க!

பங்குமக்கள் அடிக்கடி இந்தப்பகுதியைப் படிக்கின்றபோதெல்லாம், ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. கன்னிமரியாளுக்கு வானதூதர் மங்களவார்த்தை சொல்கிறபோது கேட்கும் அதே கேள்வியைத்தான், செக்கரியாவும் கேட்கிறார். கன்னிமரியாளுக்குப்பதில் சொல்லப்படுகிறது. செக்கரியாவுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறதே? இருவரும் ஒரே கேள்வியைத்தானே கேட்கிறார்கள்? என்று. ஏனெனில் கன்னிமரியாள், ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?’ என்று கேட்கிறாள். செக்கரியாவும் வானதூதரிடம், ‘இது நடைபெறும் என எனக்கு எப்படித்தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே?’ என்றார். இதற்கு பல பதில்களை நாம் சொன்னாலும், ஒரே ஒரு பதில் நம் கேள்விக்கு நிறைவானப்பதிலைத்தரும். கணவனை அறியாத கன்னி கருவுறுதல் என்பது நடைபெறவே முடியாத ஒன்று. ஆனால், வயதானவர்கள் பிள்ளை பெறுவது மீட்பின் வரலாற்றில் நடந்திருக்கிறது. ஆபிரகாம் வயதுமுதிர்ந்த வயதில் பிள்ளை பெற்றார். குருத்துவப்பணி ஆற்றக்கூடிய செக்கரியாவுக்கு இது நன்றாகத்தெரிந்திருக்க வேண்டும். அப்படித்தெரிந்திருந்தும் கேட்பதால்தான், வானதூதரால் அவருக்கு ஓர் அடையாளம் தரப்படுகிறது. அது தண்டனை அல்ல. அடையாளம்....

பகிர்வே உயிப்பின் நம்பிக்கை வெளிப்பாடு!

உயிர்த்த இயேசு பன்னிருவருக்கும் தோன்றி, அவர்களை உறுதிப்படுத்தியதையும், அவர்களுக்குப் பாவ மன்னிப்புக்கான அதிகாரத்தை வழங்குவதையும் இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. இன்றைய முதல் வாசகம் நம்பிக்கை கொண்ட தொடக்க காலத் திருச்சபையினரின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பார்க்கிறோம். தொடக்க காலத் திருச்சபை மிகவும் ஆற்றலுடன் வளர்ச்சி அடைந்தது, பெருகிப் பலுகியது. அனைவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றுகளாக விளங்கினர். சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார், தங்களோடு வாழ்கின்றார் என்பதனை அனைவரும் நம்பினர். அவ்வாறு நம்புவதற்கு சீடர்களின் வாழ்வு மிகப்பெரிய ஓர் ஆற்றலாக, ஆதாரமாக விளங்கியது. நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறையைத் திருத்தூதர் பணிகள் நூல் இவ்வாறு சுருங்கத் தருகிறது: 1. அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தனர். (நம்பிக்கை) 2. அவர்களது உடமைகள் அனைத்தும் பொதுவாக இருந்தன. (பிறரன்பு) அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தது அவர்களின் இறைநம்பிக்கையைக் குறிக்கிறது. அவர்களிடத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தவித...

ஆன்மாவின் குரலுக்குச் செவிகொடுப்போம்

உயிர்த்த இயேசுவை முதலில் பார்த்தவர் என்ற பெருமையை உடையவர் மகதலா மரியா. மரியா இயேசுவைக்கண்டாலும் அவரால் இயேசுவை அடையாளம் காணமுடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்களை நாம் சொல்லலாம். 1. இயேசுவைப்பிரிந்த துக்கம் அவருடைய கண்களை மறைத்தது. மரியா எந்த அளவுக்கு இயேசு மீது அன்பு வைத்திருந்தார் என்பதற்கு, இருள் நீங்கும் முன்பே தனி ஆளாக, பெண்ணாக இருந்தாலும் துணிவோடு கல்லறை வாயிலுக்கு இயேசுவைத்தேடிவந்ததைச்சொல்லலாம். அந்த அளவுக்கு இயேசு மீது அவர் அன்பு வைத்திருந்தார். அந்த அன்புதான் இயேசுவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தைக்கொடுத்தது. எனவே தான் இயேசு கண்ணெதிரே நின்றாலும் அவரால் இயேசுவை அடையாளம் காணமுடியவில்லை. வாழ்வில் நமக்கேற்படும் துன்பங்களும், கலக்கங்களும் கடவுளை அறிந்துகொள்வதற்கு தடைக்கற்களாக இருக்கிறது. 2. அவளுடைய பார்வை கல்லறையில் பதிந்திருந்ததால், உயிர்த்த இயேசுவைப்பார்க்க முடியவில்லை. அதாவது, கல்லறையைத்தாண்டி மரியாளால் சிந்திக்க முடியவில்லை. இயேசு இலாசரை உயிர்ப்பித்திருக்கிறார். நாற்றமடித்த உடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அப்படி வல்லமை பொருந்திய இயேசுவால்,...

“அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய்”

நம்முடைய வாழ்க்கை பலவித உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் பல சமயங்களில் பலியாகிவிடுகிறது. அச்சமும் பெருமகிழ்ச்சி இரு வேறு துருவங்களாக இருந்து நம்மை ஆட்டிப்படைக்கின்றன. அதிலும் அச்சம் நம் வாழ்வின் பெரும் பகுதியைத் தன்னகத்தே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அச்சம் என்னும் இந்த அநியாய ஆக்கிரமிப்பு நம்மில் பலருடைய வாழ்வைச் சீரழிப்பதையும் பார்க்கிறோம். உயிர்த்த இயேசுவைக் கண்டவர்களும் விசுவசிப்பவர்களும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. எல்லா எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வென்றவரில் அரவணைப்பில், ஆதரவில் வாழும் நாம், யாருக்கு எங்கே எதற்கு அஞ்சவேண்டும். “நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை”( உரோ 13 :3) நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் வாழ வலியுறுத்துகிறார் பேதுரு.(1 பேதுரு 3 :6) “யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்”.(1 பேதுரு 3 :14) அடுக்கி வரும் துன்பத்தைக்கண்டு சிலருக்குப் பயம். “துன்பத்தைப்பற்றி அஞ்சாதே”.(திருவெளி 2 :10) உடலில் ஒரு நோய் வந்தால் ஒப்பாரி வைப்போரும் உண்டு. “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு...