Tagged: Daily manna

சிலுவையும் மகிமையும்

சிலுவை எப்படி ஒருவருக்கு மகிமையை தர முடியும்? துன்பம் எப்படி ஒருவருக்கு மாட்சிமையாக இருக்க முடியும்? தோல்வி எப்படி ஒருவருக்கு மணிமகுடமாக மாற முடியும்? இந்த கேள்விகள் அனைத்துமே இயேசுவின் வாழ்வை நாம் பார்க்கிறபோது, படிக்கிறபோது ஏற்படக்கூடியவை. ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது. சிலுவை மகிமையாக இருந்திருக்கிறது. துன்பம் மாட்சியைத் தந்திருக்கிறது. தோல்வி மணிமகுடமாக மாறியிருக்கிறது. இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அதுதான் கீழ்ப்படிதல். கீழ்ப்படிதல் வாயிலாக நாம் சிலுவையை மகிமையாக மாற்ற முடியும். துன்பத்தை மாட்சிமையாக கொடுக்க முடியும். தோல்வியை மணிமகுடமாக மாற்ற முடியும். அதுதான் இயேசுவின் வாழ்வு நமக்கு கற்றுத்தரும் பாடமாக அமைகிறது. கடவுளை மாட்சிமைப்படுத்துவதை நமது கீழ்ப்படிதல் வாயிலாக செய்ய முடியும்.கடவுள் மனிதர்களைப் படைத்தது தன்னை மாட்சிமைப்படுத்துவதற்காக. ஆனால், கீழ்ப்படியாமையால் மனிதன் தவறு செய்கிறான். கடவுளை புறந்தள்ளுகிறான். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு புகழ் சேர்க்கிறார்கள். எப்போது? தங்கள் பெற்றோருடைய வார்த்தைகளுக்கு பணிந்து நடக்கிறபோது. இயேசு சிலுவையை தோல்வி...

நீங்கள் என் சாட்சிகள்

”இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்று சீடர்கள் இயேசுவிடத்தில் சொல்கிறார்கள். இதுவரை இயேசுவை நம்பாதவர்கள் எப்படி திடீரென ”நம்புகிறோம்” என்று பதில் சொல்கிறார்கள் என்பது நமக்கு சற்று வியப்பாக இருக்கிறது. எதனால் சீடர்கள் இயேசுவை நம்பினர்? என்ற கேள்வியும் நமக்குள்ளாக எழுகிறது. யோவான் நற்செய்தி 16: 16 மற்றும் 17வது இறைவார்த்தைகளில் சீடர்கள் குழம்பிப்போயிருப்பதை நாம் வாசிக்கிறோம். ”அவர் பேசுவது நமக்குப்புரியவில்லையே” என்றும் தங்களிடையே பேசிக்கொள்கின்றனர். ஆனால், 19 வது இறைவார்த்தையில், இயேசு ”இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைப்பற்றி உங்களிடையே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று, அவர்கள் உள்ளத்தில் எண்ணியதை வெளிப்படையாக இயேசு சொன்னபோது, அவருடைய உள்ளத்தையும் ஊடுருவி அறியும் சிந்தனையைப்பார்த்தவுடன், இயேசுவிடத்தில் அவர்களின் நம்பிக்கை உறுதியாகிவிட்டது. இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்வதற்கு பல விசுவாசத்தின் சாட்சியங்கள் நம்மிடையே இருக்கிறது. ஆண்டவரின் வார்த்தை, சாட்சிய வாழ்வு வாழும் கிறிஸ்தவர்கள்,...

இயேசுவின் விண்ணேற்றம் !

இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவில் நமது சிந்தனைகள் என்ன? திருச்சபையின் தலையான இயேசு விண்ணகம் சென்றதால், அவரது உடலாகிய திருச்சபையும் விண்ணகத்தையே இலக்காகக் கொண்டு பயணம் செய்ய வேண்டும். “நமக்கோ விண்ணகமே தாய்நாடு” என்னும் பவுலடியாரின் சொற்களை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்களும், சொற்களும், வாழ்வும் விண்ணகம் சார்ந்ததாக அமைய வேண்டும். மண்ணக ஆசைகள், ஏக்கங்கள், தேவைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காமல், விண்ணகம் சார்ந்தவற்றுக்கே முதலிடம் வழங்கவேண்டும். #8220;முதலில் இறையாட்சியைத் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்னும் அருள்நாதரின் சொற்களை நினைவில் கொள்வோம். இறைப் பற்று, இறையச்சம், விண்ணகம், நரகம் (இறைவனைப் பிரிந்து வாழும் நிலை) என்னும் மதிப்பீடுகளில் நமது நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வோம். இறுதிக் காலம் பற்றிய நமது எண்ணங்கள் கூர்மைப்படுத்தப்பட வேண்டும். ‘விண்ணகம் என்ற ஒன்று உண்டு, அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்’ என்னும் சிந்தனையை இன்றைய இளைய தலைமுறையினரிடம் விதைப்போமாக! மன்றாடுவோம்: விண்ணகம் சென்று...

கடவுளின் அன்பு

இந்த உலகம் எதற்காக படைக்கப்பட்டது? இந்த உலகத்தில் நாம் எதற்காக வாழ்கிறோம்? இந்த உலகத்தில் நாம் வாழ்வதன் பயன் என்ன? இதுபோன்ற கேள்விகள் நிச்சயம், இந்த வாழ்வைப் பற்றி, நம்மைப்பற்றி சிந்திக்கிற அனைவருடைய மனதிலும் எழக்கூடிய சிந்தனைகளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த உலக முடிவில் நாம் எங்கு செல்கிறோம்? வாழ்க்கை இருக்கிறதா? ஆன்மா எங்கே செல்கிறது? போன்ற கேள்விகளுக்கு பல பதில்களை, மதங்கள் நமக்கு சொல்கிறது. இன்றைய நற்செய்தியில், நாம் எங்கிருந்து வருகிறோம்? எங்கு திரும்பிச்செல்கிறோம்? என்பதை, இயேசுவின் வார்த்தைகள் நமக்குக்கற்றுத்தருகிறது. நாம் அனைவருமே தந்தையிடமிருந்து வந்தவர்கள். எனவே, நாம் திரும்பி தந்தையிடத்தில் திரும்பிச்செல்ல வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இயேசு தந்தையிடமிருந்து வந்திருக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்தது, கடவுளின் வெறுப்பை நமக்குச் சொல்வதற்கு அல்ல. மாறாக, கடவுள் நம்மை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார் என்பதை நமக்கு அறிவிப்பதற்கு. இயேசுவும் தந்தையின் அன்பை மக்களுக்கு காட்டுகிறார். அதன்பிறகு,...

இறைவனோடு நாம் கொண்டிருக்கும் உறவு

”என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் தருவார்” என்று இயேசு சொல்கிறார். முன்பின் தெரியாத ஒருவர் நமக்கு அறிமுகமாகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடனான நமது உறவு நமக்கு எப்படி இருக்கும்? அவரிடத்தில் ஒரு மரியாதை இருக்கும். அவருக்கும் நமக்கும் இடையே நமது உறவில் சிறிது மரியாதை இருக்கும். அதே நபரிடத்தில் நாம் நெருங்கி, நண்பர் என்ற நிலைக்கு வந்தபிறகு எப்படி இருப்போம்? அந்த இடைவெளி குறைந்திருக்கும். மரியாதையுடன் அன்பும், நட்பும் பிணைந்திருக்கும். எதையும் அவரிடத்தில் கேட்பதற்கோ, பேசுவதற்கோ நமக்கு கூச்சம் இருக்காது. கடவுளுடன், அப்படி ஒரு உறவுநிலைக்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். கடவுளைப்பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளை தந்தையாக, உற்ற நண்பராக நாம் பார்க்க வேண்டும். அந்த அன்பை நாம் உணர வேண்டும். அப்படி உணர்கிறபோது, நாம் வெளிப்படையாக இருப்பதற்கு கற்றுக்கொள்கிறோம். அவரிடத்தில் நம்மை ஒரு திறந்த புத்தகமாக காட்டுகிறோம். நமக்குத் தேவையானவற்றை நாம் கேட்கிறோம். நமக்கு அது கிடைக்குமா? கிடைக்காதா?...