Tagged: Daily manna

உண்மையை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்வோம்

இன்றைய நற்செய்தி உண்மைக்கு சான்றுபகரக்கூடியவர்களுக்கு, உண்மைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கு, உண்மையை தங்களது வாழ்வின் விழுமியமாக பிடித்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தலைமைச்சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோர் இயேசுவிடத்தில் கடினமான, கடுமையான ஒரு கேள்வியைக்கேட்கின்றனர். வெளிப்படையாகப்பார்த்தால், ஆம் என்றாலும், இல்லை என்றாலும், நமக்கு பாதகமாக முடியக்கூடிய கேள்வி. ஆனால், இயேசு அதை அசாதாரணமாக எதிர்கொள்கிறார். இயேசு உண்மைக்குச் சான்றுபகரக்கூடியவர். எனவே, அவரது மனதில் அச்சமோ, கலக்கமோ எதுவுமே இல்லை. அந்த கேள்வி கேட்கப்பட்டவுடன், என்ன பதில் சொல்லப்போகிறோமோ? என்று பயப்படவும் இல்லை. உண்மைக்காக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நிச்சயமாக வரும். ஆனால், முடிவு மகிழ்ச்சியானதாக இருக்கும். உண்மை என்று தெரிந்தும், அதன்படி வாழாமல், அதற்கு எதிராக வாழக்கூடியவர்கள், வலுவான அடித்தளத்தில் நின்று பேசுவது போல தோன்றும். ஆனாலும், அது அவர்களைப் பாதாளத்திற்கு இட்டுச்செல்லும். உண்மையின் நிமித்தம் ஒருவர் சந்திக்கக்கூடிய சோதனைகள், வாழ்வை எதிர்கொள்ள பயப்பட வைக்கிறது....

அன்னைமரியாளும், அவளின் வாழ்வும்

மரியாளின் பாடல் கடவுள் மரியாளுக்குத் தந்திருக்கிற ஆசீர்வாதத்தைப்பற்றி நமக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது. மரியாள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள். எந்த அளவுக்கு என்றால், தந்தையாகிய கடவுளே மரியாளை கபிரியேல் தூதர் வழியாக வாழ்த்தும் அளவுக்கு அன்னை மரியாள் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டவள். அன்னைமரியாளுக்கு கடவுளின் மகனைத்தாங்கும் பேறு கிடைத்த அதே வேளையில் அவளுக்கு ஒரு துயரம் நிறைந்த செய்தியும் தரப்படுகிறது. அதாவது, அவளது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்பதுதான் அந்த செய்தி. அதாவது, கடவுளின் ஆசீர் நமக்குக் கிடைக்கும்போது, துன்பங்களையும் துணிவோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்கிற செய்தியை இது நமக்குத்தருகிறது. வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக துன்பம் வருகிறபோது, வாழ்வை ஒரு பாரமாக எண்ணிவிடக்கூடாது. துன்பமும், இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த நியதியை அறிந்துகொண்டால் வாழ்வு இன்பம்தான். இந்த வாழ்வியல் கலையை அன்னைமரியாள் நமக்கு கற்றுத்தருகிறார். துன்பம் வருகிறது என்பதற்காக, துன்பத்தை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை. துன்பத்தைத்தாங்குவதன்...

இயேசுவின் வழியில் நமது வாழ்வு

இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின் வாழ்வைப்பற்றிய மூன்று முக்கிய செய்திகளைத் தருகிறது. முதல் செய்தி: இயேசு தன்னை கடவுளின் ஊழியனாக அல்ல, மாறாக, தன்னை கடவுளின் மகனாகவே வெளிப்படுத்தினார். ஊழியர்கள், இறைவாக்கினர்களைக் குறிக்கிறது. மகன் இயேசுவைக்குறிக்கிறது. இயேசு இறைவாக்கினராக அல்ல, இறைமகனாக நேரடியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை இங்கே நாம் பார்க்க முடிகிறது. இது யூதர்களுக்கு இயேசுவால் விடப்பட்ட நேரடியான சவால். இயேசுதான் கடவுளின் மகன் என்பதை, ஆணித்தரமாக வெளிப்படுத்திய பகுதி இது. இரண்டாவது செய்தி: இயேசுவுக்கு தான் இறக்கப்போகிறேன் என்பது தெரிந்திருந்தது. அது இயேசுவுக்கு அதிர்ச்சிகரமான செய்தியோ, ஆச்சரியமான செய்தியோ அல்ல. தான் தேர்ந்தெடுத்திருக்கிற பாதையின் முடிவு, இறப்பாகத்தான் இருக்க முடியும் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். அப்படி அறிந்திருந்தாலும், துணிந்து தனது வாழ்வை நகர்த்துவது அவரது மனவலிமையைக் குறிக்கிறது. மூன்றாவது செய்தி: தான் இறக்கப்போவது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு தான் மகிமைப்படுத்துவதும் உறுதி, என்று இயேசு முழுமையாக...

இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா

உடலும், இரத்தமும்… இன்று ஆண்டவர் இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தரும் அவரது பேரன்பைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறு. மனம், ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக்கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம். அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத் தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், ஆண்டவர் இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். “கிறிஸ்’து உலகிற்கு வந்தபோது, ‘பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எனவே, நான் கூறியது: உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்””“ (எபி 10: 5-7) என எபிரேயர் திருமடலில் வாசிக்கிறோம். “இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறி’ஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்”“ (எபி 10:...

விண்ணக அதிகாரம்!

இயேசுவின் அதிகாரத்தைப் பற்றித் தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், மூப்பர்களும் கேள்வி எழுப்பியபோது, இயேசு யோவானின் அதிகாரத்தைப் பற்றி எதிர்க் கேள்வி ஒன்றைக் கேட்கின்றார். “திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு எங்கிருந்து வந்தது? விண்ணிலிருந்தா, அல்லது மனிதரிடமிருந்தா?”. அவர்கள் இக்கேள்விக்கு விடை அளிக்கவில்லை, விடையளிக்க விரும்பவில்லை. எனவே, இயேசுவும் அவர்களின் கேள்விக்கு விடை கொடுக்கவில்லை. ஆனால், விண்ணக அதிகாரத்தைப் பற்றிய இரு கருத்துகளை இந்த நிகழ்விலிருந்து அறிகிறோம். 1. விண்ணிலிருந்து வரும் அதிகாரத்தை நாம் நம்பவேண்டும். யோவானின் அதிகாரத்தை, இயேசுவின் அதிகாரத்தை மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்களின் நம்பிக்கைக் குறைவு. இறை நம்பிக்கை உள்ளோரே இறையடியார்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இன்னொரு வகையில் சொல்லப் போனால், குருக்கள், துறவிகள், நற்செய்திப் பணியாளர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம். 2. விண்ணக அதிகாரம் கொண்டவர்களை மக்கள் “இறைவாக்கினர்களாக”க் கருதுகின்றனர். யோவானை மக்கள் இறைவாக்கினராகக் கருதியதால், அவரது அதிகாரம் மனிதரிடமிருந்து வந்தது...