Tagged: Daily manna

மூன்றாம் நாளில் பணி நிறைவுபெறும் !

நல்ல தலைவர்களிடம் இருக்கின்ற பண்புகளுள் ஒன்று தங்களின் பணி பற்றிய இலக்குத் தெளிவு. தாங்கள் ஆற்ற பணிகள் என்னென்ன, அவை எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும், அந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் எவை என்பவற்றையெல்லாம் திறன்மிகு தலைவர்கள் நன்கு தெளிவாக அறிந்திருப்பர். இயேசுவிடம் அத்தகைய தலைமைப் பண்புகள் நிறைந்திருந்தன என்பதைச் சிந்திக்கும்போது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பு மேலிடுகிறது, இயேசு தன் பணியைப் பற்றியும், அதில் உள்ள இடையூறுகளைப் பற்றியும் அறிந்திருந்தார். எனவே, அச்சமின்றி துணிவுடன் பணியாற்றினார். அத்துடன், தனக்குள்ள காலக் குறைவையும் கணக்கில் கொண்டு, விரைந்து செயலாற்றினார். ஓய்வெடுக்கவும், உண்ணவும்கூட நேரமின்றிப் பல நேரங்களில் அவர் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றினார் என்பதை நற்செய்தி நூல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாகவேண்டும் ” என்றார் இயேசு. அவரிடமிருந்து...

நேரிய வழியில் நடப்போம்

வாழ்வுக்குச் செல்லக்கூடிய வழி அவ்வளவு எளிதானதல்ல. அது மிகவும் கடினமானது. நம்முடைய உழைப்பில்லாமல், அர்ப்பணம் இல்லாமல் நிச்சயமாக நம்மால் மீட்பு பெற முடியாது. நாம் அனைவருமே கடவுள் விரும்பக்கூடிய வாழ்வை வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோதுதான், நாம் கடவுளின் அன்பைப் பெற்று, அவரது விருந்திலே பங்கெடுக்க முடியும். எது எளிதானதோ, அவ்வழியில் செல்லவே அனைவரும் விரும்புவர். கடினமான வழியில் செல்ல எவருமே விரும்ப மாட்டார்கள். கடினமாக உழைத்துப்படிக்கலாம். தவறான வழியில் எளிதாகவும் மதிப்பெண் வாங்கலாம். இந்த உலகம் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். இந்த உலகத்தில் இருக்கிற பலரும், இந்த இரண்டாம் வழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களை, இந்த உலகம் அவமானப்படுத்துகிறது. கேலி செய்கிறது. உதாசீனப்படுத்துகிறது. அவர்களுக்கு ஏராளமான சங்கடங்கள் வாழ்வில் இருந்தாலும், அவர்கள் பெறக்கூடிய பரிசு மிகப்பெரிதானது. நமது வாழ்வில் நாம் எத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? என்று கேட்டுப்பார்ப்போம். எப்போதுமே, உண்மையான, நேர்மையான பாதையில் நடக்க விரும்புகிறவர்கள்...

தாக்கத்தை ஏற்படுத்தும் வாழ்வு

இன்றைக்கு எத்தனையோ சொற்பொழிவுகள் மக்கள் மத்தியில் ஆற்றப்படுகின்றன. அது அரசியல்வாதிகளாக இருக்கலாம், அரசியல் தலைவர்களாக இருக்கலாம் அல்லது சமயத்தலைவர்களாக இருக்கலாம். ஆற்றப்படுகின்ற எல்லா சொற்பொழிவுகளும், ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகிறதா? என்றால், அது கேள்விக்குறி. விளைவுகளை ஏற்படுத்தாத எந்த சொல்லும் வீணாணவையே என்று சொல்வார் ஒரு புகழ்பெற்ற போராளி. உதிர்க்கப்படுகின்ற சொற்கள் ஒவ்வொன்றும், அதற்கான விளைவை, அது ஏற்படுத்த வேண்டும். இன்றைய நற்செய்தியும், இதை அடியொற்றித்தான், எழுதப்பட்டிருக்கிறது. புளிப்பு மாவு உவமை, இங்கே தரப்படுகிறது. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வும், இந்த புளிப்பு மாவைப்போல, விளைவை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும். அளவு சிறிதளவே இருந்தாலும், அது புதிய மாவு முழுவதையும், புளிப்பேற்றச் செய்கிறது. அதேபோல, கிறிஸ்தவர்களின் வாழ்வு, மற்ற மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், என்று, இந்த இறைவார்த்தை அழைப்பு விடுக்கிறது. இப்படிப்பட்ட, தாக்கத்தை தொடக்க கிறிஸ்தவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தினர். அதனால் தான், கிறிஸ்தவ விசுவாசம் இந்தளவுக்கு தழைத்தோங்கியிருக்கிறது....

நீதி எங்கே? நியாயம் எங்கே?

இயேசு தொழுகைக்கூடத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். போதனை என்பது வார்த்தையோடு நின்றுவிடுவது கிடையாது. வாழ்வைத் தொட வேண்டும். வாழ்வைத் தொடாத போதனையும், வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாத போதனையும், வெறும் சடங்குதான். இயேசு தனது போதனை அவ்வாறு இருக்க விரும்பவில்லை. எனவே, அவர் போதித்துக்கொண்டிருக்கிறபோதே, மக்களுக்கு இறைவனுடைய அருளையும் பெற்றுத்தந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறு மக்களின் நோய்களைக் குணப்படுத்திக்கொண்டிருக்கிறபோது, தொழுகைக்கூடத்தலைவன் மக்களிடத்தில், தனது கோபத்தைக் காட்டுகிறான். ஓய்வுநாளில், இயேசு குணப்படுத்துவது அவனுக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால், சட்டப்படி, அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். எனவே, தான் சொல்வது நியாயம் என்று நினைக்கிறான். ஆனால், இயேசுவிடம் சொல்லத்துணிவில்லாமல், சாதாரண பாமர மக்களிடத்தில் காட்டுகிறான். ஒருவேளை, அவன் இயேசுவிடம் சொல்லியிருந்தால், அவர் விளக்கம் சொல்லியிருப்பார். ஆனால், அவனோ, மக்களிடத்தில் தனது கோபத்தைக்காட்டுகிறான். அதனால், இயேசுவின் கோபத்திற்கு ஆளாகிறான். இன்றைக்கு, நாமும் இந்த தொழுகைக்கூடத்தலைவன் போலத்தான் இருக்கிறோம். நம்மைவிட கீழாக உள்ளவர்களிடம், நமது அதிகாரத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறோம். நம்மைவிட,...

தாழ்ச்சியோடு வேண்டுதல் செய்வோம்

இரண்டு மனிதர்கள் ஆலயத்திற்கு செபிக்கச் செல்கிறார்கள். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். ஆனால், இரண்டு பேரும் செபித்தார்களா? உண்மையில் யாருடைய செபம், கடவுளால் கேட்கப்பட்டது? யார் உண்மையில் செபித்தார்கள்? என்பதை, நாம் பார்ப்போம். முதலில் பரிசேயர். அவருடைய வார்த்தைகள் நிச்சயமாக செபம் அல்ல, மாறாக, அது தற்புகழ்ச்சி. தன்னைப்பற்றி கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்புகழ்வதில் அதிக சிரத்தை எடுக்கிறார். கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்பற்றி சொல்வதில், அவர் ஆர்வம் காட்டுகிறார். இது உண்மையான செபம் அல்ல. தற்புகழ்ச்சியும், செருக்கும் என்றைக்குமே நமக்கு அழிவைத்தான் தரும். கர்வம் கொண்டவர்கள் நிச்சயம் செபிக்க முடியாது. வரிதண்டுபவர் தொலைவில் நிற்கிறார். கடவுளிடத்தில் நெருங்கிவர தனது பாவங்கள் தடையாக இருப்பதாக எண்ணுகிறார். அவரிடத்தில் குற்ற உணர்ச்சி காணப்படுகிறது. தன்னை மிகப்பெரிய பாவியாக எண்ணுகிறார். இது தற்புகழ்ச்சிக்கு இடங்கொடாமல், தன்னை ஒறுத்து, கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடு நிற்பதற்கு ஒப்பாக இருக்கிறது. செபம் என்பது நமது நிலையை உணர்வது. கடவுள் முன்னிலையில் நம்மையே...