Tagged: Daily manna

தனக்கு எதிராகத் தானே … !

“தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது” என்னும் ஆண்டவர் இயேசுவின் அமுதமொழிகளை இன்று சிந்திப்போம். ஒன்றுபட்டால்தான் வாழ்வு, பிளவுபட்டால் தாழ்வு என்னும் உண்மையை ஆண்டவர் நன்கு எடுத்துரைக்கின்றார். ஆனால், இன்று எத்தனை குடும்பங்கள் தங்களுக்குத் தானே பிளவுபட்டு நிற்கின்றன? ஏன் திருச்சபையிலும் இந்த நிலையைப் பார்க்கின்றோம். திருச்சபைக்கெதிரான செயல்பாடுகளைத் திருச்சபைக்குள்ளேயே இருந்துகொண்டு பலரும் செய்வதில்லையா? இறைமக்களின் விசுவாசத்தை, நம்பிக்கைக் கூறுகளை அழித்துப் போட திருச்சபைக்குள்ளேயே சிலர் முயன்று வெற்றி பெறுகின்றனரே? திருச்சபைக்கு எதிராக வழக்கு மன்றம் சென்று, எதிர்ச் சான்றுபுரியும் பொதுநிலையினர், குருக்கள், கன்னியரை இன்று கண்டு நாம் திகைக்கவில்லையா? திருச்சபைக்கு எதிராகப் பேட்டியளிக்கும், நூல்கள் எழுதி விற்பனை செய்யும் குருக்கள், கன்னியரை இன்று ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கவில்லையா? இவற்றையெல்லாம் முன் உணர்ந்துதான் ஆண்டவர் இயேசு தொலைநோக்குடன் சொன்னார்: “தனக்கு எதிராகத் தானே...

சீடத்துவ வாழ்க்கை

இயேசுவைப்பின்பற்ற விரும்பும் சீடர்கள் அவர்களுடைய வாழ்வில் எதைப்பற்றிக்கொண்டு வாழக்கூடாது என்பதை, இன்றைய நற்செய்த மூலமாக நமக்கு அறிவிக்கிறார். 1. பாதுகாப்பு. இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் அனைவருமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாதுகாப்பிற்கு ஒரு வீடு, ஒரு குடும்பம், ஒரு வேலை என்று, வாழ்வை பாதுகாப்போது எண்ண நினைக்கிறவர்கள், இந்த உலகத்தில் வாழ்கிற மக்கள். ஆனால் இயேசு இதனைக் கடந்து நிற்கிறார். தனக்கென்று, எந்த ஒரு பாதுகாப்பான வேலையும் தேவை இல்லை, என்று கடவுளின் பராமரிப்பில் முழுமையான நம்பிக்கை வைக்கிறார். 2. எதிர்ப்பு. உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் விழுமியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஏனென்றால் எதிர்ப்பசை் சம்பாதிக்க பயப்படுகிறார்கள். தங்களுக்கு எந்த பிரச்சனையும் வராத இடத்தில், பாதுகாப்பாக இருப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். இதனைச் சொன்னால், எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும், எனவே, இதனை எதிர்க்க வேண்டியதில்லை. நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு? என்று, யாரையும் பகைத்துக்கொள்ள விரும்புவது கிடையாது. இயேசு அப்படி...

விசுவாசம் – கடவுளின் கொடை

இயேசு கடவுளின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கிறார். இயேசுவின் இந்த செயல், விசுவாசம் என்பது போற்றிப்பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, அது பறைசாற்றப்பட வேண்டியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கத்தோலிக்க திரு அவை இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலான பாரம்பரியத்தைகொண்டு இருக்கிறது. இந்த இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தின் வெற்றி, ஒவ்வொரு தலைமுறையினரின் அர்ப்பணத்திலே இருந்திருக்கிறது. அன்றைக்கு சீடர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்தை அர்ப்பண உணர்வோடு தலைமுறையினர் தோறும் அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த பாதுகாப்போடு, மகிச்சியோடு, தியாக உள்ளத்தோடு பரிமாறியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஆனாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட அந்த மாட்சிமையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் சந்தித்த இன்னல்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் திருத்தூதர்கள். திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவுக்காக சிந்திய இரத்தம் அதற்கு சாட்சி. இன்றைக்கும் நாம் பெற்றிருக்கிற இந்த பாரம்பரியமான விசுவாசத்தை சிதைக்காமல் எந்தச்சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு...

கடவுளின் அருகாமையில் இருக்க….

தீய ஆவிகள் இயேசுவைக்கண்டதும், ”இறைமகன் நீரே” என்று கத்தியதாக நற்செய்தி கூறுகிறது. ”இறைமகன்” என்ற வார்த்தையின் பொருளை இங்கு நாம் பார்ப்போம். இறைமகன் என்கிற வார்த்தை, மத்திய கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த மக்களால், அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வார்த்தை. எகிப்து தேசத்தின் அரசர்கள் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர். அகுஸ்துஸ் சீசர் முதல் ஒவ்வொரு உரோமை அரசர்களும் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர். பழைய ஏற்பாட்டில் நான்கு வழிகளில் இந்த வார்த்தை பயன்படுகிறது. 1. வானதூதர்கள் கடவுளின் மகன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தொடக்க நூல் 6: 2 ல் ”மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப்புதல்வர் கண்டு…. ” என்று பார்க்கிறோம். 2. இஸ்ரயேல் நாடு கடவுளின் மகனாகக் கருதப்படுகிறது. ஓசேயா 11: 1 ”எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்”. இங்கே இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததும், அவர்களைக் கடவுள் அழைத்து வந்ததும் தெரியப்படுத்தப்படுகிறது. 3. ஒரு நாட்டின் அரசர், கடவுளின் மகனாக பார்க்கப்படுகிறார்....

“ரௌத்திரம் பழகு” !

“ரௌத்திரம் பழகு” என்றார் பாரதி தமது புதிய ஆத்திச்சூடியில். கோபப்படப் பழகு என்பது அதன் பொருள். பொதுவாக, சினம் என்பது ஒரு தவறான உணர்வுநிலைதான். பெரும்பாலான வேளைகளில், சினமும், சீற்றமும் மானிடரைக் குற்றப் பழிக்கு இட்டுச்செல்கின்றன என்பதுவும் உண்மைதான். இருப்பினும், கோபம் கொள்ளவேண்டிய வேளைகள் இருக்கின்றன. அவ்வேளைகளில் கோபம் கொள்ளாமல் இருப்பதுவும் தவறே என்பது இந்தப் புதிய ஆத்திச்சூடியின் பாடம் அது உண்மைதான். எப்போது நாம் கோபம் கொள்ளவேண்டும்? நமக்கு தீமையோ, அநீதியோ இழைக்கப்பட்டால், அதைப் பொறுத்துக்கொள்வதும், அமைதி காப்பதும் சிறந்த பண்புகள். ஆனால், பிறருக்குத் தீமை, அநீதி நிகழும்போது அதைப் பார்த்துக்கொண்டு அமைதி காப்பது என்பது தவறு. அந்த நேரத்தில்தான் நமக்குக் கோபம் பொங்கி எழவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6) இயேசு கொள்ளும் சினம் அத்தகையதே. தொழுகைக்கூடத்தில் கை சூம்பிய மனிதரைப் பார்த்தபோது, இயேசுவின் பரிவுள்ளம் அவரைக் குணமாக்கத் துடித்தது. ஆனால்,...