Tagged: Daily manna

பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்

திருப்பாடல் 98: 1, 2 – 3ab, 3cd – 4 நீதி என்பது ஒருவருக்கு உரியதை அவருக்கே கொடுப்பது ஆகும். அது பரிசாகவும் இருக்கலாம், தண்டனையாகவும் இருக்கலாம். பிற இனத்தார் முன் கடவுள் தம் நீதியை எப்படி வெளிப்படுத்தினார்? அவர்கள் எப்படி கடவுளின் நீதியை கண்டு கொண்டனர்? கடவுளைப் பற்றிய பார்வை, கடவுள் தன்னை வழிபடும் மக்களுக்கு உதவியாக இருப்பார் என்பது. அவர்கள் தவறு செய்தாலும் அவருக்காகவே அவர் போரிடுவார், அவர்கள் பக்கம் தான் அவர் நிற்பார் என்பதாகும். இதைத்தான் இஸ்ரயேல் மக்களும் நம்பினர், மற்றவர்களும் எண்ணினர். இஸ்ரயேல் மக்களின் கடவுளைப் பொறுத்தவரையில் அவரும் மற்ற கடவுளைப் போல, இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தாலும், அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று பிற இனத்தவர் எண்ணினர். ஆனால், நடந்தது வேறு. இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தபோதெல்லாம், அவர்களை தண்டிக்கக்கூடியவர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தினார். இது கடவுள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானவர்...

எப்போதும் நன்றி மறவாது இருப்போம்

கடவுளிடம் நாம் பல விண்ணப்பங்களை வைத்து நம்பிக்கையோடு மன்றாடுகிறோம். நாம் கேட்பதை பெற்றுக்கொண்ட பிறகு, நமது மனநிலை என்ன? என்பதுதான், இன்றைய நற்செய்தி நமக்குத்தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. தேவை இருக்கிறபோது, ஓயாமல் கடவுளை தேடுகிற நாம், தொந்தரவு செய்கிற நாம், நமது தேவை நிறைவேறிய பிறகு, கடவுளை நாடாதவர்களாக இருப்பது தான், இன்றைய உலக நியதி. அதைத்தான் இந்த வாசகமும் பிரதிபலிக்கிறது. பத்து தொழுநோயாளர்கள் இயேசுவைச் சந்திக்கிறார்கள். தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர், இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் எந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கப்பட்டார் என்பது, அவர்கள் அனுபவித்திராத ஒன்றல்ல. முழுமையாக அறிந்திருக்கிறார்கள். அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் இயேசுவை நாடி தேடி வருகிறபோது, மனம் கசிந்துருகி மன்றாடுகிறார்கள். ”ஐயா, எங்கள் மீது மனமிரங்கும்” என்று சொல்கிற, அந்த தொனியே, அவர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள் என்பதையும், அவர்களது பரிதாப நிலையையும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அவர்கள் குணமடைந்த பிறகு, அவர்களின் வாழ்வே மாறிவிட்ட பிறகு, அவர்களின்...

அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன

திருப்பாடல் 97: 1 – 2, 5 – 6, 11 – 12 இந்த உலகத்தில் இன்றைக்கு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பிளவுகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை சமூகத்தீமையாக கருதப்பட்டாலும், மக்களை ஆளும் அரசுகள் இதை அரசியலாக்கி தங்களது நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். கடவுள் முன்னிலையில் அனைவரும் அவருடைய பிள்ளைகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது தான் இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை. சாதிகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சுயநலத்திற்காகவும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காகவும் ஒரு தந்திர நரி குணம் கொண்டவர்களால் புகுத்தப்பட்டது. கடவுள் முன்னிலையில் இவர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்களே. நாம் வழிபடும் இறைவனும், நாம் சார்ந்திருக்கும் சமயங்களும் இவற்றிலிருந்து நமக்கு விடுதலையைத் தருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை இன்னும் தரங்கெட்டவர்களாக மாற்றக்கூடாது. மற்றவர்கள் எப்படி வாழ்ந்தாலும், கடவுள் முன்னிலையில் “நாம் “அவருடைய பிள்ளைகள் என்கிற உணர்வு நமக்குள்ளாக வர வேண்டும்....

வேற்றினத்தாரைக் கண்டித்தீர், பொல்லாரை அழித்தீர்

திருப்பாடல் 9: 1 – 2, 5, 15, 1b – 8 கடவுள் அனைவருக்குமான கடவுள். எந்த பாரபட்சமும் காட்டாதவர். எல்லாருக்கும் நடுநிலையில் இருந்து நீதி வழங்குகிறவர். தவறு செய்கிற அனைவரையும் கண்டிக்கிறார், தண்டிக்கிறார் என்பது இன்றைய திருப்பாடல் நமக்குத் தரும் செய்தி. கடவுள் இஸ்ரயேல் மக்களை தன்னுடைய சொந்த இனமாகத் தேர்ந்து கொண்டார். அவர்கள் வழியாக இந்த உலக மக்களை மீட்டெடுக்க முடியும் என்று கடவுள் நம்பினார். அந்த நம்பிக்கையில் தான், இறைவாக்கினர் வழியாக அவர்களோடு பேசினார். அவர்களை வழிநடத்தினார். தான் அவர்களுக்காக முன்குறித்து வைத்திருந்த மீட்புத்திட்டத்திற்கு அவர்களை தயாரித்தார். இறைவனின் மீட்புத்திட்டத்தை முழுமையாக உணராத மக்கள் கடவுளுக்கு எதிராக புறக்கணித்துச் சென்றபோது, அவர்களை தண்டித்து திருத்துவதற்கு கடவுள் தயங்கவில்லை. வேற்றினத்தாரையும் கடவுள் அன்பு செய்தார். ஏனெனில் அவர்களும் கடவுளின் படைப்புக்கள் தான். அவர்களுக்கும் கடவுள் தந்தை தான். அவர்களை மீட்டெடுப்பதற்குத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார். நீதியோடு,...

இயல்புகளுக்கேற்ப வாழ்வை முன்னெடுப்போம்

செபம் என்றால் “இதுதான்“ என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், இதுதான் இன்றைக்கு திருச்சபையில் நாம் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாகவும் இருக்கிறது. திருச்சபை என்பது பலதரப்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும், இயல்புகளையும் கொண்ட மிகப்பெரிய அமைப்பு. ஒரு சிலர் இயல்பாகவே துடிப்பாக இருப்பர். சிலர் அமைதியான இயல்பைக் கொண்டவர்களாக இருப்பர். திருச்சபையின் வழிபாட்டு முறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி நடக்கிறபோதுதான், அனைவருமே ஈடுபாட்டோடு பங்கு பெறுவதற்கு வசதியாக இருக்கும். ஒரு சிலர் ஆடிப்பாடி இறைவனைப் போற்ற விரும்பலாம். ஒரு சிலர் அமைதியாக இறைவனை மனதிற்குள் நினைத்து போற்றலாம். அவரவர் இயல்பிற்கேற்ப வழிபடுவதற்கு, அனைவருமே உதவியாக இருக்க வேண்டும். இதுதான் சிறந்தது, வழிபாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமது எண்ணங்களைப் புகுத்துகிறபோது, அங்கே இயல்பாக பிரச்சனை எழுகிறது. இன்றைய நற்செய்தியிலும் அதைத்தான் பார்க்கிறோம். மார்த்தாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. மரியாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. இரண்டுமே...