Tagged: Daily manna

உமது பேரன்பின் பெருக்கினால் எனக்கு பதில் தாரும்

திருப்பாடல் 69: 29 – 30, 32 – 33, 35 – 36 ஒரு சிலர் நன்றியை மறந்தவர்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறபோது, மீண்டுமாக தங்களுக்கு உதவி செய்தவர்களிடம் செல்ல வேண்டும் என்கிறபோது, அது எளிதானதல்ல என்பதை நாம் அறிந்தவர்களாக இருக்கிறோம். ஏனென்றால், அவருடைய நன்றியை மறந்திருக்கிற நாம், நல்ல நிலையில் இருக்கிறபோது, அவர்கள் செய்த உதவியைப் பொருட்டாத எண்ணாத நாம், மீண்டும் அவர்களிடம் கையேந்துகிற நிலை வருகிறபோது, நிச்சயம் அது கடினமான ஒன்று. அவமானப்பட வேண்டிய ஒன்று. இன்றைய திருப்பாடலின் களம் இதுதான். இறைவனிடம் எல்லா நன்மைகளையும் பெற்று, அவருடைய நன்றியை மறந்துவிட்டு, இப்போது மீண்டும் கடவுளிடத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறபோது பாடப்பட்ட பாடலாக இது அமைந்திருக்கிறது. கடவுளிடம் தான் உதவியை எதிர்பார்க்க தகுதியற்ற நிலையில் இருந்தாலும், கடவுளின் அன்பில் நம்பிக்கை வைத்து ஆசிரியர் தன்னுடைய உணர்வுகளை பதிவு செய்கிறார். இறைவனிடத்தில் கேட்கிறபோது, நிச்சயம் தனக்கு பதில் சொல்வார்...

சக்கேயுவின் தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை என்பது இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் காணப்படக்கூடிய மிக்பெரிய பலவீனமாக நாம் சொல்லலாம். அந்த மனநிலை தான், விளையாட்டு வீரர்கள், சினிமாக நடிகர்களை தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளவும், சில சமயங்களில் உயிரைக் கொடுக்கவும் தூண்டுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை சில சமயங்களில் ஒருவிதமான போதையாகவும் மாறிவிடுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மையை அகற்றுவதற்கு, நமக்கு இரண்டு விதமான ஆற்றல்கள் தேவைப்படுகிறது. ஒன்று, நமது முயற்சி. இரண்டாவது கடவுளின் அருள். இந்த இரண்டையும் பெற்று, முழுமையான மனிதனாக, தனது பலவீனங்களை கடந்த மனிதனாக, சக்கேயு உயிர்பெற்று எழுகிறான். சக்கேயுவிற்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை. அவனுடைய உயரம் அவனுக்குள்ளாக தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அவனது வரிவசூலிக்கும் தொழில் காரணமாக, சமுதாயத்தில் இருந்து புறந்தள்ளப்பட்ட மனிதனாக காணப்படுகிறான். அதிலிருந்து விடுபட முயற்சி எடுக்கிறான். அந்த முயற்சி அவனுக்கு வெற்றியாக மாறுகிறது. தனது பலவீனத்திலிருந்து மீண்டு வருகிறான். கடவுளின் அருளையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறான். சக்கேயு தனது...

சகல ஆத்துமாக்கள் திருவிழா

அனைத்து ஆன்மாக்கள் திருவிழா கல்லறைகளை கண்முன்னே வை யோவான் 6:37-40 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து ஆன்மாக்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம்’ அல்லது `கல்லறைத் திருநாளை” நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறாம். இறந்தவர்கள் அனைவரையும் இன்று நாம் நினைத்து அவர்களுக்காக ஜெபிக்கிறோம். நம் அன்னையாகிய திருச்சபை, மோட்சத்திலிருக்கும் தன் மக்களை நினைத்தபின் வேதனைப்படும் தன் மக்களை நினைக்கிறது. அவர்களுக்காக பரிந்து பேசுகிறது. அவர்களுக்கு தன்னாலான உதவி செய்ய முயற்சிக்கிறது. மோட்சத்தில் வாழும் தன் மக்களுடன் அவர்களை சீக்கிரம் ஒன்றிக்கும்படி மன்றாடுகிறது. இன்று ஒவ்வொரு குருவும் மூன்று திருப்பலிகள் வைக்கிறார்கள். முதல்...

சாதாரணமானது ஆனால் வரலாறானது

புனிதர் அனைவர் பெருவிழா மத்தேயு 5:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் புனிதர் அனைவரின் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து புனிதர்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! மனிதர்கள் என நாம் மரியாதை செலுத்துவோர் தங்களுடைய வாழ்வையும் பணியையும் முழுமையாக இறைசித்தத்திற்கு அர்ப்பணித்து துன்பங்களை, இன்பங்களாக ஏற்று, உலக மக்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களையே கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அடையாளப்படுத்துகிறது. கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மேலான கடமையாகும். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்விற்கு நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். இவ்விழா நாம் புனித வாழ்விற்குள் நுழைய...

இயேசுவின் துணிவு

கடவுளின் பணியாளர்களிடம் பகைமை பாராட்டுவதும், அவர்களை எதிரிகளாக பாவிப்பதும் இன்றைக்கு நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது தொடர்ந்து வருகிறது. கடவுளின் பணியாளர்களை மிரட்டுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும் தொடக்க காலத்திலிருந்தே, வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி எதிர்ப்புக்கள் வருகிறபோது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. பரிசேயர்கள் சிலர், இயேசுவின் மீது நல்லெண்ணமும், அன்பும் கொண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலைக்கொண்டு, இயேவிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிற சதித்திட்டங்களை, அவரிடத்தில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டதும், இயேசு பயந்துவிடவில்லை. ஓடிவிடவும் இல்லை. துணிவோடு எதிர்க்கிறார். தவறை, தவறு என்று சுட்டிக்காட்டும் வலிமை, வல்லமை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கொள்கிற பிரச்சனையில் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. இறுதிவரை நிலைத்து நிற்க வேண்டும். நியாயத்திற்காக, நீதிக்காக நிற்க வேண்டும். அதுதான், இயேசுவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம். வாழ்க்கையில் சவால்களை துணிவோடு சந்திக்க, இயேசுவின் வாழ்க்கை...