Tagged: Daily manna

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே! நீங்கள் கடவுளை வாழ்த்துங்கள்

தானியேல் 1: 34, 35 – 6, 37 – 38 நெருப்பு மூன்று இளைஞர்களை தீண்டாது இருந்தபோது, கடவுளின் வல்லமையை அனுபவித்த அவர்களின் நன்றிப்பெருக்கு தான், இன்றைய நாளின் பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆண்டவர் செய்த செயல்கள் ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்கிற தங்களது விருப்பத்தை, அந்த மூன்று இளைஞர்களும் வெளிப்படுத்துகிறார்கள். இது சற்று வித்தியாசமானதாக இருப்பதை நாம் உணரலாம். படைப்புக்களை கடவுளைப் போற்றச் சொல்லி அழைப்புவிடுப்பதைப் பார்த்திருக்கிறோம், இறைவனின் அருளை உணர்ந்த மனிதர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இறைவனது செயல்களை கடவுளைப் போற்றுவதற்கு விடுக்கப்படும் அழைப்பு புதுமையானது. அடுக்கடுக்கான வார்த்தைகளைப் பேசி மக்களை கவர்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பேச்சு மட்டும் தான், அவர்களின் மூலதனம். தங்களுடைய பேச்சுக்கு தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. வாயில் என்ன வருகிறதோ, அதை அப்படியே பேசிவிடுகிறார்கள். இவர்களை மக்கள் மதிப்பதும் கிடையாது. ஒரு...

என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்

தானியேல்(இ) 1: 29அ,இ, 30 – 31, 32 – 33 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ கடவுளைத் தவிர வேறு எவரையும் வழிபட மாட்டோம் என்று சொன்னதால், நெபுகத்நேசர் அரசரால் தீச்சூளையில் தள்ளப்பட்டனர். மன்னனின் பணியாளர் அவர்களைச் சூளைக்குள் தூக்கி எறிந்தபின், சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் ஆகியவற்றைச்சூளையில் போட்டு தீ வளர்த்த வண்ணம் இருந்தனர். இதனால், தீப்பிழம்பு சூளைக்கு மேல் நாற்பத்தொன்பது முழம் எழும்பிற்று. அது வெளியே பரவிச்சென்று, சூளை அருகே நின்று கொண்டிருந்த பாபிலோனியரைச் சுட்டு எறித்தது. ஆனால், இளைஞர்கள் காவல்தூதர்களின் பராமரிப்பில் பாதுகாப்பாக இருந்தனர். இக்கட்டான நேரத்தில் தங்களைக் காப்பாற்ற தூதர்களை அனுப்பிய இறைவனை அவர்கள் இணைந்து போற்றுவதுதான் இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இறைவனை மூதாதையரின் கடவுளாக இளைஞர்கள் வாழ்த்துகிறார்கள். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் செய்து வந்திருக்கிற எல்லா வல்ல செயல்களையும் இஸ்ரயேலின் பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களுடைய மூதாதையர் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்கள் கடவுளையும்,...

கிறிஸ்தரசர் பெருவிழா

இயேசு கிறிஸ்து – அனைத்துலகின் அரசர் அரசர் என்பவர் யார்? ஓர் அரசர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஆள வேண்டும்? எப்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த உதாரணம். இந்த உலகம் ஏற்றுக்கொள்வது போன்ற அரசர் இயேசு அல்ல. காரணம், அவர் அரசரின் வாரிசு அல்ல. தச்சரின் மகன். போரில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியவரும் அல்ல. ஆனால், மக்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்டு, குறிப்பாக, ஏழை, எளியவர்கள் நடுவில் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒப்பற்ற அரசர். அவர்கள் வாழ்வை உயர்த்துவதற்காக முழுமையாக அர்ப்பணித்தவர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறபோது, மற்றவருக்கு உதவி செய்ய மனமிருக்கலாம். அப்படி இருப்பவர்கள் கூட இன்றைக்கு அரிதாகி விட்டார்கள். ஆனால், துன்பத்தில் இருக்கிறதுபோது, தனது உயிரே ஊசலாடிக்கொண்டிருக்கிறபோது, தனது நிலையே மற்றவர்களால் பரிதாபப்படுகிறதுபோல இருக்கிறபோது, ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்கிறார் என்றால், அதுதான் ஒரு அரசரின் உணர்வாக இருக்க...

ஆண்டவர் அளிக்கும் விடுதலையைக் குறித்து அகமகிழ்வேன்

திருப்பாடல் 9: 1 – 2, 3 & 5, 15 & 18 இறைவனை விடுதலை தருகிறவராக இந்த திருப்பாடல் அறிமுகப்படுத்துகிறது. யாரிடமிருந்து விடுதலை? எதிலிருந்து விடுதலை? மத்திய கிழக்குப் பகுதியில் நாடுகள் மற்ற நாடுகளை போரில் வென்று அடிமைப்படுத்துவதும், தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள, அரசர்கள் பலரை வெட்டி வீழ்த்துவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது. இப்படிப்பட்ட பிண்ணனியில் இந்த பாடல், கடவுளை நம்புகிறவர்கள் அடிமைத்தனத்திலிருந்தும், தீமைகளில் இருந்தும், விடுதலை பெறுவார்கள் என்கிற செய்தியை அறிவிக்கிறது. இன்றைய உலகில் நாம் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம். நேர்மையாக வாழ்கிறவர்கள் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். கடின உழைப்பின் மூலமாக நாம் முன்னேறுகிறபோது, மற்றவர்கள் நம்மைப்பார்த்து பொறாமைப்படுகிறார்கள். நம்முடைய வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொள்கிறார்கள். நம்மை பழித்துரைக்கிறார்கள். ஆனால், ஆண்டவரிடம் நம்மையே நாம் ஒப்படைக்கிறபோது, கடவுள் நம்மை பாதுகாப்பார். எல்லாவிதமான தீமைகளில் இருந்தும், அவர் நம்மை பாதுகாப்பாக வழிநடத்துவார். நமக்கு எதிராக எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும்,...

மாட்சிமிகு உம் பெயரை போற்றுகிறோம் ஆண்டவரே!

1குறிப்பேடு 29: 10, 11, 12 தாவீது கடவுளுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்று விரும்புகிறார். அதனை கடவுளிடத்தில் வேண்டுகோளாகவும் பணிக்கிறார். ஆனால், தாவீது பத்சேபாவுடன் செய்த தவறு, அவருடைய வாழ்க்கையில் நீங்காத கறையாக படிந்துவிடுகிறது. கடவுள் தனக்கு ஆலயம் ஒன்று, தாவீதால் கட்டப்படுவதை விரும்பவில்லை. ஏனெனில், அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். ஆனால், தாவீது கடவுளுடைய பணிக்காக செய்த பல நல்ல பணிகளை அவர் மறக்கவில்லை. எனவே, அவருடைய மகன் சாலமோன் வழியாக, தனக்கு ஆலயம் கட்டுவதற்கு அனுமதி தருகிறார். இந்த பிண்ணனியில் தான், இந்த பாடல் பாடப்படுகிறது. ஆலயம் கட்டுவது தொடர்பான பணிகளைப் பற்றி, மக்களுக்கும், சபையோருக்கும் எடுத்துச்சொல்லிக் கொண்டிருக்கிற தாவீது அரசர், கடவுள் மீது தான் கொண்டிருக்கிற நம்பிக்கையை, தன்னுடைய ஆன்மீகத்தின் ஆழத்தை இந்த பாடல் வழியாக வெளிப்படுத்துகிறார். தாவீது கடவுளால் தண்டிக்கப்பட்டவர் தான். ஆனால், தாவீதின் உள்ளத்தில் தான், கடவுளால் தண்டிக்கப்பட்டோம் என்பதைக் காட்டிலும், கடவுளிடமிருந்து...