Tagged: Daily manna

நீதி வழங்கும் இறைவன்

1அரசர்கள் 21: 1 – 16 ஆண்டவர் எப்போதும் ஏழைகள் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்கிறார் என்பதற்கு இன்றைய வாசகம் சிறந்த சாட்சியாக அமைகிறது. இறைவன் இந்த உலகத்திலிருக்கிற எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கிறார். அந்த விருப்பத்தோடு தான், இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்த இறைவன், அவனுக்கு இந்த உலகத்தின் எல்லா செல்வங்களின் மீதும் நிர்வகிக்கிற பொறுப்பை வழங்குகிறார். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான், இறைவன் இந்த உலகத்தைப் படைத்ததன் நோக்கமாகும். பேராசை கொண்ட மனிதன், இந்த உலகத்தை அடக்கி ஆள வேண்டும் என்று எண்ணுகிறான். அங்கே அடிமைத்தனம் உருவாகிறது. வளங்களைக் கொள்ளையடிக்கிறான். பொருளாதாரப் பிளவை உண்டாக்குகிறான். நாம் வாழ்கிற இந்த உலகத்தில் மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாக, அதிகாரவர்க்கமும், அவர்கள் அடக்கி ஆள்வதற்கு பாமரரர்களும் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். இறைவன் எப்போதும் எளியவர்களுக்கு பாதுகாப்பாகவும், ஏழைகள் சார்பாகவும், மக்களுக்கு சரியான...

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19, 22 எருசலேம் என்று இங்கே குறிப்பிடப்படுவது இஸ்ரயேல் மக்களை குறிக்கக்கூடிய சொல்லாகும். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்து வந்திருக்கிற எல்லா மேன்மை மிகு செயல்களையும் ஆசிரியர் சொல்கிறார். இஸ்ரயேல் மக்களை மற்ற நாட்டினரோடு ஒப்பிட்டுப்பேசுகிறார். மற்ற நாட்டினரோடு ஒப்பிட்டுப் பேசுகையில், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்திருப்பதை ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். இஸ்ரயேல் மக்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். பகைநாட்டினரிடமிருந்து அவர்களை பாதுகாப்பாக வழிநடத்தியிருக்கிறார். அவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளையெல்லாம் செய்திருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் வழியாக, கடவுள் எவ்வளவுக்கு மேன்மைமிக்கவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காகவே இதை கடவுள் செய்தார். ஆனால், கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொண்ட இஸ்ரயேல் மக்கள், அதற்கேற்ப தங்களது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் கடவுளை விட்டு விலகிச்சென்றார்கள். அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்து, பாவம் செய்தார்கள். கடவுளை தங்களது செயல்களால் பழித்துரைத்தார்கள். இப்படிப்பட்ட...

துணிவோடு வாழ…

கிறிஸ்தவர்களாகிய நமக்கு துணிவு முக்கியம். அந்த துணிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும், என்று துணிவோடு வாழ அழைப்பதுதான் இன்றைக்கு நாம் வாசிக்கிற நற்செய்தி நமக்குத்தருகிற செய்தியாக இருக்கிறது. பல வேளைகளில் நம் கண்முன்னால் அநீதி நடக்கிறபோது, நமக்கு ஏன் வம்பு? என்று ஒதுங்கிச்செல்கிறோம். விவேகமாக நடந்து கொள்வதாக நாம் எண்ணுகிறோம். ஆனால், அது தவறு. நமது பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கிறோம். நமது கடமையை நாம் செய்யத்தவறுகிறோம் என்பதுதான் இதனுடைய அர்த்தமாக இருக்க முடியும். இயேசு தனது போதனைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் எது தவறு என்பதை அவர் அறிந்தாரோ, அதனைத்துணிவோடு எதிர்த்து நின்றார். எது சரி என்று அவர் நினைத்தாரோ, அதனைத் துணிவோடு செய்தார். ஆக, தவறை, தவறு என்று சுட்டிக்காட்டுவதற்கும், சரியை, சரி என்று செய்வதற்கும், அவருக்கு துணிவு இருந்தது. அந்த துணிவு நமக்கும் இருக்க வேண்டும். இன்றைய உலகில் தவறு என்பது தெரிந்தும், நாம்...

இறையனுபவம்

1அரசர்கள் 19: 9, 11 – 16 இன்றைய வாசகம் “இறையனுபவம் என்றால் என்ன?“ என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இன்றைக்கு இறையனுபவத்தைப் பெறுவதற்காக பல இடங்களுக்கு, பல இலட்சங்களை செலவு செய்து மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இறைவனை அந்த இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியுமா? இங்கே தரிசிக்க முடியுமா? என்று அங்கலாயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைதியில் தான் இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார், அமைதியில் தான் இறைவனை அனுபவித்து உணர முடியும் என்பது இன்றைய வாசகத்தில் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்டவர் தன்னை எலியா இறைவாக்கினருக்கு வெளிப்படுத்த விரும்புகிறார். எனவே, ”வெளியே வா! மலைமேல் என் திருமுன் வந்து நில்!” என்று சொல்கிறார். சுழற்காற்று எழும்புகிறது. அதில் ஆண்டவர் இல்லை. காற்று பிளந்து பாறைகளைச் சிதறடிக்கிறது. அதிலும் இறைவன் இல்லை. இறுதியாக, அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதில் தான், இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். ஆக, கோடி கோடியாக செலவழித்துக் கட்டும் ஆலயங்களிலோ, சடங்கு,:...

இறைவன் தரும் ஆசீர்வாதம்

1அரசர்கள் 18: 41 – 46 நாம் வணங்கும் இறைவன் ஆசீர்வாதத்தின் கடவுள் என்கிற செய்தி, இன்றைய வாசகத்தின் மூலமாக நமக்கு வழங்கப்படுகிறது. நாடெங்கிலும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இறைவாக்கினர் எலியா, தன்னை அரசன் முன்னால் நிறுத்தி, உண்மையான இறைவன் யாவே இறைவன் என்பதையும், பாகால் இறைவன் பொய்யானவர் என்பதையும் நிரூபிக்கிறார். மக்கள் அனைவரும் கடவுளை உண்மையான இறைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த தருணமே, அவர்களின் பஞ்சம் நீங்கியது என்பதை, இந்த வாசகத்தில் நாம் பார்க்கிறோம். பாகால் தெய்வத்திற்கான பலிபீடங்களையும், மதகுருக்களையும் கொன்றொழித்த பின்பு, மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிறார்கள். பாவங்களை மன்னிக்கின்ற தேவன், இஸ்ரயேல் மக்களின் மனமாற்றத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அவர்களை பஞ்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்க திருவுளம் கொள்கிறார். இறைவன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று திருவுளம் கொண்டிருக்கிறவர். அவர்கள் துன்பப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைப்பவர் கிடையாது. எனவே தான், மக்கள் அவரை...