Tagged: தேவ செய்தி

இயேசு கிறிஸ்து நமக்காக சாவை ருசித்து ஏற்றுக்கொண்டார்.

ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் மனுக்குல மைந்தனாய் நமக்காக வந்து நம்முடைய பாவங்களை போக்கி நம்மை மீட்டு தமது தந்தையிடம் அழைத்து செல்ல தம்மையே ஜீவ பலியாக இந்த நாளில் ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டெடுத்த நாள். நமக்கு முன் மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்த அவரின் வாழ்க்கையை பாடமாக வைத்து நாமும் அவரின் பாதையில் நடப்போமாக. நேற்றைய தினத்தில் பாஸ்கா திருவிருந்தில் தமது சீடர்களோடு கலந்துக்கொண்டு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி அதைப்பிட்டுச் சீடருக்கு கொடுத்து இதைபெற்று உண்ணுங்கள்: இது எனது உடல், என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுத்து இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்: பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில் தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்: அதுவரை குடிக்க மாட்டேன் என நான் உங்களுக்கு சொல்கிறேன், என்றார். அதன்பின்னர் இயேசு தமது சீடர்களோடு கெத்சமனி என்னும் இடத்திற்கு போய் அங்கே...

நமக்காக பஸ்காவை ஆயத்தப்படுத்தினார்

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நம்முடைய ஆண்டவர் நம்முடைய பாவங்களுக்காக மரிக்க தம்மை ஒப்புக்கொடுத்து பாஸ்கா விருந்தை ஏற்பாடு செய்கிறார்.பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று அர்த்தம். அதாவது நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து தமது உயிரை நமக்கு அர்ப்பணித்து நம்மை விட்டு கடந்து தமது தந்தையிடம் பரலோகம் செல்கிறார். நமது வீட்டுக்கு ஒரு நண்பர் வந்தாரானால் அவர் நம்மை விட்டு செல்லுமுன் நாம் அவரை உபசரித்து அனுப்புவோம். அதுபோல்தான் ஆண்டவரும் ஒரு நண்பராய் வந்து நம்மையெல்லாம் உபசரித்து நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் மீட்டு இவ்வுலகத்தை விட்டு கடந்து சென்றுள்ளார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் 430 வருஷம் அடிமைகளாய் இருந்து மாதங்களில் தலையாயது மாதமான முதல் மாதத்தில் எகிப்தை விட்டு புறப்பட ஆண்டவர் ஆயத்தப்படுத்தின மாதம். எகிப்தை விட்டு இஸ்ரயேல் மக்கள் கானான் தேசத்துக்கு ஆண்டவர் அவர்களை அத்தேசத்திலிருந்து கடந்து செல்ல உதவுகிறார். கசப்பை உண்ட தமது மக்களுக்கு இனிப்பை அருளிய நாள். அதனால்தான் அந்த நாளில்...

கடவுள் தமது வார்த்தையை அனுப்பி நம்மை மீட்பார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு மார்ச் மாதம் முழுதும் நம்மோடு கூடவே இருந்த நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்து ஒரு சேதமும் நம்மை தாக்காதபடிக்கு காத்து வந்திருக்கிறார். அவருக்கு நமது நன்றியை நம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தெரிவித்து,அவர் பாதம் பணிவோம். இதுபோல் வருகிற ஏப்ரலிலும் நம்மை காத்து வழிநடத்த வேண்டுமாய் அவரிடத்தில் கெஞ்சி மன்றாடுவோம்.ஏனெனில் நாம் ஒவ்வொரு நாளும் இந்த உலகில் வாழ்வது ஆண்டவரின் கிருபையே.நாம் செய்தி தாளில் வாசித்து பார்ப்போமானால் ஒருநாளில் எவ்வளவு விபத்து நடக்கிறது என்று நாம் யாவரும் அறிந்த ஓன்று. ஆனாலும் நமக்கு எந்த தீங்கும் ஏற்படாதபடிக்கு காத்து வந்த தேவனை மனதார ஸ்தோத்தரித்து நன்றிபலி ஏறெடுப்போம். நான் இன்று உயிரோடு இருப்பது ஆண்டவரின் மேலான கிருபையே. கடந்த மார்ச் 18ம் தேதி நான் என் கணவருடன் பைக்கில் சென்று கொன்று இருந்தேன். ஒரு நிமிஷத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவு ஒரு பெரிய விபத்து நேரிட இருந்தது....

கடவுளின் ஆட்சியையும்,அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவோம். மத்தேயு 6:33.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் நமது கடவுளின் ஆட்சியை தேடுவோமானால் அவரும் நம்முடைய சுகவாழ்வுக்கு கட்டளையிடுவார். ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து முதலாவது அவரை தேடி நம் தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை நாம் நடக்க வேண்டிய வழியில் வழிநடத்துவார். நம்முடைய தேவைகள் யாவையும் சந்திப்பார்.இப்படிச் செய்வதால் நாமும் விண்ணகத் தந்தையின் மக்களாக ஆவோம். நாம் வேண்டுவது யாவையும் நமக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். நமக்குள்ளதை பிறர்க்கு பகிர்ந்து கொடுப்போம்.நம்மால் ஆனா உதவிகளை பிறர்க்கு செய்வோம். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று அன்பு செய்து உதவிகளையும் செய்தார். நாமும்  அவ்வாறு நடப்போம். நாம் உயிர் வாழ எதை உண்பது எதை குடிப்பது? என்று கவலைப்படத்தேவையில்லை. உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தது அல்லவா? வானத்து பறவைகளை பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை.நமது தந்தை அவற்றுக்கு உணவு அளிக்கிறார். அவற்றைவிட நாம் மேலானவர்கள் அல்லவா!நமது...

நம்முடைய தேவைகளை அறிந்து வைத்திருக்கிறார்

அன்பார்ந்த சகோதரர்,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான காரியங்கள் தேவைப்படுகிறது. பணத்தேவை, பொருளாதரத்தேவை, வீடு தேவை, நம்மை நேசிக்கும் அன்புள்ளங்கள் தேவை, நம் கவலைகளை பகிர்ந்துக்கொள்ள நல்ல நண்பர்கள் தேவை, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். சில வீடுகளில் பணம், பொருளாதாரம இருக்கும்.ஆனால் அதை அனுபவிக்க அவர்களால் கூடாது போகலாம். நல்ல சுகம் இருக்கும், அவர்கள் பசியாலும், பட்டினியாலும் துன்பப்படுவார்கள். ஆனால் நம்முடைய தேவன் நம் மேல் மனதுருகி இந்த மாதிரியான கஷ்டங்களில் இருந்து நம்மை பாதுக்காக்க வல்லவராய் இருக்கிறார். அவரை நோக்கி கூப்பிடும் யாராயிருந்தாலும் இவைகளில் இருந்து விடுவிக்கப்படுவர். ஒருபோதும் தம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதை ஆண்டவர் விரும்பமாட்டார் . கடவுள் தம்முடைய பிள்ளைகளுக்கு யார் மூலமாவது உதவிகளை அனுப்புவார். இதை வேதத்தில் நாம் நிறைய இடங்களில் வாசிக்கலாம். எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது: நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரவேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா...