Tagged: தேவ செய்தி

கடவுள் நமக்கு குறித்துள்ளதை நிறைவேற்றுவார்.யோபு 23:14.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே நம்மை ஆண்டவர் அறிந்து நமது தேவைகளை குறித்து வைத்துள்ளார். அதை ஏற்ற நேரத்தில் செயல் படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவரின் சமுகத்தில் வாழ்வின் நூல் [ஜீவ புஸ்தகம் ] ஒன்று அவரின் கையில் உள்ளது. அவரே முதலும் முடிவும் ஆனவர். வாழ்பவரும் அவரே! சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் உடையவர் அவரே. நமக்குள்ளதை நிச்சயம் நிறைவேற்றுவார். மனம் கலங்காதீர்கள். சோர்ந்து போகாதீர்கள். என் வாழ்க்கையில் நடந்த ஒரு காரியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா,ஆஸ்திரேலியா நாடுகளைப் பற்றி புத்தகத்தில் படித்துள்ளேன். ஆனால் அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. 2012ல் bible quiz ல் பங்கு பெற்றதால் அதை வெளியிட்ட father எனக்கு அறிமுகமானார். அவர் அப்பொழுது அமெரிக்காவில் இருந்தார். ஒருநாள் பேசும்பொழுது நான் father இடம் நானும் அமெரிக்கா வருவேன் என்று சொன்னேன். அப்பொழுது அவர்,அமெரிக்கா வரவேண்டும் என்றால் விசா எல்லாம் வாங்க வேண்டும்....

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது,ஆற்றல் வாய்ந்தது.எபிரெயர் 4-12

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! இந்த நாளிலும் நமது தேவைகளை குறித்து கலங்கி நிற்கும் நமக்கு கடவுள் தமது வார்த்தையை அனுப்பி நம்முடைய எல்லா தேவைகளையும் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். ஏற்ற நேரத்தில் நம்மை உயர்த்துவார்.நீங்கள் உங்கள் பணியில் ஒழுங்காக இருந்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, அல்லது சம்பள உயர்வு கிடைக்கவில்லையே என்று மனம் கலங்கி தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். ஆண்டவர் சில சமயம் இரண்டு மடங்கு நன்மையை கொடுப்பதற்காக ஒரு மடங்கு நன்மையை கொடுக்க மாட்டார். அதனால் காலதாமதம் ஏற்படும். நாம் எந்த சூழ்நிலையிலும் நமது பொறுமையை இழந்துவிடாத படிக்கு ஆண்டவரிடம் முறுமுறுக்காமல் இருக்க வேண்டும். வேதத்தில் எஸ்தர் புத்தகத்தில் ஒரு சம்பவம் நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. மொர்தெகாய் என்பவர் அரச வாயிலில் பணிபுரிந்துக்கொண்டு இருந்தார். அந்த நாட்களில் பிகதான், தெரேசு என்ற இருவர் மன்னர் அகாஸ்வேரைத் தாக்க சினங்கொண்டு அவரை தாக்க ஆலோசனை செய்தனர். இந்த காரியம் மொர்தெகாய்க்கு தெரிந்தது. உடனே அவர்...

கடவுள் எதை விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்.யோபு 23 – 13.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கத்தையும்,மன விருபபத்தையும் கொடுத்து அதை செய்து முடிக்க அறிவையும், புத்தியையும் கொடுக்கிறார். சில வேளைகளில் நாம் விரும்பும் காரியம் நமக்கு கிடைக்காத பட்சத்தில் நம்முடைய உடலும்,உள்ளமும்,சோர்ந்து போய்விடுகிறது. ஆனால் காத்திருந்து கிடைக்கும் எந்த ஒரு காரியத்திலும் பலமடங்கு ஆசீர்வாதம் இருக்கும். ஆனால் நமக்கோ பொறுமை இல்லாமல் மனம் பதறுகிறோம். யோபுவின் சரித்திரத்தை வாசித்து பார்ப்போமானால் நமக்கு நன்கு விளங்கும். ஆண்டவர் அவர்மேல் அன்பு கூரும் யாவரையும் சோதித்து பார்ப்பார். நம்முடைய நம்பிக்கையும்,விசுவாசமும், எந்த அளவு உறுதியாய் இருக்கிறது என்று தமது பிள்ளைகளை சோதித்து பார்க்கிறார். யோபுவும் கூட மாசற்றவரும், நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கி வந்தார். கடவுளே அவரைக் குறித்து அவனைப்போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவன் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்று ஆண்டவரே அவரை குறித்து சாட்சி கொடுக்கிறார். ஆனாலும் ஆண்டவர் அவரை சோதிக்க...

மரித்தேன்,இதோ!சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்கள் அன்பின் நல்வாழ்த்துக்கள். நமக்காகவும் நம்முடைய பாவங்களுக்காகவும், தமது ஒரே மகனை கல்வாரி சிலுவையில் ஒப்புக்கொடுத்த பிதாவாகிய தேவன் அவரை மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பி அன்றிலிருந்து இன்றுவரை நம்மோடு கூடவே இருக்கும்படி கிருபை அளித்து அவருடைய தூய ஆவியை தந்தருளியிருக்கிறார். உயிரோடு எழுந்து நாற்பது நாட்கள் வரைக்கும் தமது சீடர்களுக்கு தோன்றி அவர்களை பலப்படுத்தி பிறகு விண்ணேற்றமடைந்தார். அன்பே உருவான ஆண்டவர் நம்மை தனியாக விடாமல் தமது தூய ஆவியை தந்து அதன் மூலம் நமக்கு ஒவ்வொரு நாளும் போதித்து காத்து வழிநடத்துகிறார். மரித்தேன், ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடு நம்மோடு இருக்கிறார். அன்பை கட்டுப்படுத்தவோ, அடக்கி வைக்கவோ ஒருவராலும் கூடாது. அவரின் அன்பை கல்லறைக்குள் புதைத்துவிட நினைத்தவர்களே ஏமாற்றமடைந்தனர். அவர் தமது அன்பை நமக்கு கொடுக்க இன்று உயிரோடு நம் மத்தியில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார். வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும், வேறொரு மரியாவும்,கல்லறையை பார்க்க சென்றனர். திடீரென்று ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின்...

மனுக்குலத்துக்கே அரசனாகிய இயேசுகிறிஸ்து சாரோனின் ரோஜா.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். சுமார் 800 வருஷங்களுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரசி இவ்வாறு எழுதி வைத்துள்ளார். நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விருப்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார். மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்.வேதனையுற்ற மனிதராய் இருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவு படுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை.நம் துன்பங்களை சுமந்துக்கொண்டார்.நமக்காக சிறுமை படுத்தப்பட்டார்.அவரே நம் குற்றங்களுக்காக காயமடைந்தார்.நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்.நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.அவருடைய காயங்களால் நாம் குணமடைகிறோம்.நாம் ஆடுகளைப்போல் வழி தவறி அலைந்தோம்,ஆனால் கடவுளோ நம் அனைவரின் தீச்செயல்களுக்காக அவரை காயப்படுத்தினார்.அடிப்பதற்கு இழுத்து செல்லும் ஆட்டைப்போலவும்,ரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போல் தமது வாயை திறவாமல் நம்முடைய பாவங்கள்,சாபங்கள்,அக்கிரமங்கள்,யாவையும் சுமந்தார். சாரோனின் ரோஜாவாய்,பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமுமாயிருந்த அவர்,வாழ்நாள் முழுதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டுக் கிடந்த நம்மை விடுவிக்க அடிமையின்...