Tagged: தேவ செய்தி

தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறிய நமக்கு அருளப்பட்டது.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்தநாளிலும் ஆண்டவர் நமக்கு அருளிய அவருடைய மகிமையின் ராஜ்யத்தை நாம் அலட்சியம் செய்யாமல் அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து, பயந்து நடந்து அந்த ராஜ்யத்தில் பங்குபெறும் பேற்றை அடைவோமாக. ஆண்டவரைப்பற்றி அறிந்தும் அவரை ஏதோ கோடி தெய்வத்தில் அவரும் ஒருவர் என்று இல்லாமல், அவர் ஒருவரே தெய்வம் என்று உணர்ந்தவர்களாய் செயல்படுவோம். எவ்வளவோ பேர்கள் அறிந்தும் அலட்சியம் செய்வதுபோல் நாம் இல்லாமல் அவர் காட்டும் வழியில் நடந்து அவருக்கே மகிமை உண்டு பண்ணுவோம். கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துக கொள்ளாமலும் இருக்காதபடிக்கு நம்முடைய இருதயத்தில்உணர்ந்து மனந்திருந்துவோம். ஏனெனில் அநேக மக்கள் கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது. காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள். எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கிறார்கள். நானும் அவர்களை குணமாக்காமல் இருக்கிறேன். உங்கள் கண்களோ பேறுபெற்றவை. ஏனெனில்...

பாசம்

ஒரு ஊரில் மிகவும் சந்தோஷமாக டேவிட்டின் குடும்பம் வாழ்ந்து வந்தனர்.ஒருநாள் டேவிட்டின் பிள்ளைகள் இரண்டு பேரும்,அக்காவும், தம்பியுமாக சேர்ந்து அவர்கள் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது தம்பி தனது அக்காவிடம் அக்கா வா அருகில் ஒரு ஆறு ஓடுகிறது. நாம் அதை பார்த்து விட்டு வரலாம்,என்று கூப்பிட்டான். அக்கா தனது தம்பியிடம் வேண்டாம் என்று சொல்லியும் தம்பி பிடிவாதமாக கூப்பிட்டதால் அக்காவும் மனமிரங்கி சரி தம்பியின் ஆசையை நிறைவேற்றலாம் என்று நினைத்து போகலாம் என்று சொன்னாள். இருவரும் சேர்ந்து ஒரு ஒத்தையடி பாதை வழியாக நடந்து பக்கத்தில் உள்ள எல்லா இயற்கை காட்சிகளையும் கண்டு களித்தவாறு போய் கொண்டு இருந்தனர். அவர்கள் தங்களை மறந்த நிலையில் சந்தோஷமாக இருந்ததால் வெகு தொலைவில் வந்துவிட்டனர். பிறகுதான் தெரிந்தது, தாங்கள் வெகு தொலைவில் வந்துவிட்டோமே என்று, திடீரென்று அச்சமயத்தில் பனிமழை பொழிய ஆரம்பித்தது. தாங்கள் வந்த பாதை தெரியாமல் இருவரும் தடுமாறினார். நேரம் ஆக, ஆக இருட்ட ஆரம்பித்தது.இருட்டில் பாதை தெரியாமல் எப்படியாவது வீடு போய் சேர வேண்டும்...

அன்பின் ஆழத்தை உணர்ந்து செயல்படுவோம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் அன்பை நம் இதயத்தில் உணர்ந்து செயலில் காட்டி நன்றியுள்ளவர்களாய் இருப்போம். அன்பைக் குறித்து தீவிரமாக யோசித்துப் பார்ப்போமானால் அதின் செயல்பாடு யாவும் இனிமையாகவே இருக்கும். ஆனால் நாம்தான் அப்பேற்பட்ட  அன்பின் ஆழத்தை உணராமல் கோபம், பொறாமை, சண்டை, வாக்குவாதம் என்று நம்மை கெடுத்துக்கொள்கிறோம். நாம் ஒருவர்மேல் உண்மையான அன்பு வைத்தோமானால் அவர்களை எந்த சூழ்நிலையிலும் வெறுக்கவே மாட்டோம். நம் மனது அவர்களையே சுற்றி சுற்றி வரும். அவர்கள் சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? எப்படி இருக்கிறார்கள்? என்று நம் மனது நினைத்துக்கொண்டே இருக்கும். ஒரு தாய் தன் குழந்தையை இப்படித்தான் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகையால்தான் ஆண்டவரும் ஒரு தாய் தேற்றுவதுப்போல் நான் உங்களை தேற்றுவேன் என்று சொல்கிறார். தாய், பிள்ளை அன்பு மட்டும் அல்ல. அண்ணன், தங்கை, அக்கா, தம்பி நண்பர்களிடம் வைக்கும் அன்பு என்று உறவில் வித்தியாசம் வருமே தவிர அன்பில் எந்த வித்தியாசமும் கிடையாது. கடவுள் நம்மேல்...

நம்முடைய பெலன் நமது தேவனிடத்தில் இருக்கிறது.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நமது மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாளிலும் பலவிதமான நோயினால் துன்புறும் உங்களுக்கு நம்முடைய தேவன் என் மகனே!என் மகளே! நீ கலங்காதே, உங்களை நான் குணமாக்குவேன். அதற்காகவே நான் காயப்பட்டேன். என்னுடைய காயங்களை உற்றுப்பாருங்கள். அந்த காயங்களின் தழும்புகளால் நீங்கள் குணமடைவீர்கள். ஏனெனில் உங்களுடைய பலத்தினாலும் அல்ல, பராக்கிராமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினால் அதை நான் செய்வேன், எல்லா காரியமும் ஆகும் என்று சொல்கிறார். இதோ உன்னை புடமிட்டேன்: ஆனாலும் வெள்ளியைப்போல் அல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னை தெரிந்துக்கொண்டேன். என்னிமித்தம்,என்னிமித்தமே,அப்படி செய்தேன் என்று ஆண்டவர் சொல்கிறார். நானே முந்தினவரும், பிந்தினவருமானேன், நீங்கள் என்னை உண்மையோடும், ஆவியோடும் தொழுதுக்கொண்டால் நீங்கள் விரும்பும் சுகத்தை உங்களுக்கு கட்டளையிடுவேன், இது முதல் புதியவைகளையும், நீங்கள் அறியாத மறைபொருளானவைகளையும் உங்களுக்கு தருகிறேன் என்று ஆண்டவர் வாக்குத்தத்தம் செய்கிறார். 18 வருஷங்கள் கூனியாய் இருந்த ஆபிரகாமின் குமாரத்தியை குணப்படுத்தியதுபோல ஒரு நொடிப்பொழுதில் உங்களையும் குணமாக்குவேன். என் மகிமையை உங்களுக்கு...

தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுவோம்

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் வந்து பிறந்த ஒவ்வொருவருவரும் நிலைவாழ்வு பெற்றிட வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவன் தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.யோவான் 3:16. இப்பேற்பட்ட தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவர் சாயலாய் உருவாக்கப்பட்ட நாம் அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து ஒருவரில் ஒருவர் ஊக்கமாய் அன்புக் கூர்ந்து தூய உள்ளத்தோடு ஆழ்ந்த அன்பு காட்டிடுவோம். பழைய ஏற்பாடு புத்தகம் விடுதலை பயணம் 21:23,24,25ல் வாசிப்போமானால் அதில் உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், கைக்கு கை,காலுக்கு கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்கு காயம் என அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு கடவுள் கட்டளை பிறப்பித்தார். அதே சமயம் புதிய ஏற்பாடு புத்தகம் மத்தேயு 5:38 லிருந்து வாசித்துப்பார்ப்போமானால் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்  என்று சொல்லப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:...