Tagged: தேவ செய்தி

நம்முடைய பாவங்களை மன்னித்து நலன் அளிப்பார். 2 குறிப்பேடு 7:14

எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று,தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன். அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன் என்று நம்முடைய ஆண்டவர் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார்.2 குறிப்பேடு 7 : 14. நாம் நமது பாவங்களை அறிக்கை செய்து மறுபடியும் அதை செய்யாதபடிக்கு விட்டுவிட்டால் ஆண்டவரும் நமக்கு மன்னித்து அவற்றை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டு நம்மை எல்லா ஆபத்துக்கும் விலக்கி காத்து நம்மேல் அன்புக்கூர்ந்து உயர்த்தி ஆசீர்வதிப்பார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டால் நாமும் ஆண்டவரைப்போல் மறுரூபமாக்கப்படுவோம். எழு!ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. ஏசாயா 60:1ல் வாசிப்பதுபோல ஆண்டவர் அவரின் முகத்தை நம்மேல் உதிக்கப்பண்ணுவார். இதோ!இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக்கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும். அன்பானவர்களே! நாமும் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து ஆண்டவரின் சமூகத்தை நித்தமும் தேடினால் அந்தந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை தந்து நம்மை ஆசீர்வதித்து...

அடைக்கலமும்,ஆற்றலும் ஆண்டவர் நமக்கு தருவார்

நம்முடைய துன்ப வேளைகளில் நமக்கு உற்ற துணையாக இருந்து அடைக்கலமும்,ஆற்றலையும்,தந்து நம்மை பாதுகாத்து நம் தேவைகள் யாவையும் சந்திக்கும் கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் மனம் கலங்க தேவையேயில்லை. இந்த நிலவுலகம் நிலை குலைந்தாலும்,மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவை பெருக்கெடுத்து வருவதால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில், கடவுள் நமக்கு அரணும்,கோட்டையும்,நமது நம்பிக்கையாயும் இருக்கிறார். அவரின் செயலை காணுங்கள்,அவர் இந்த உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். ஆகையால் உங்கள் கவலைகளை மறந்து துயரங்களை தூக்கி எறிந்து, அவரே கடவுள் என்று உணர்ந்து ஆண்டவரின் மாட்சிமையை போற்றுங்கள். ஒரு குழந்தை தனது தாயிடம் கேட்பதை அந்த தாய் மறுப்பதே இல்லை. அதைப்போல் தாயைவிட மேலான அன்பு காண்பிக்கும் நமது ஆண்டவர் நாம் கேட்பதை மறுப்பதே இல்லை. விண்ணப்பத்தை கேட்பவர் உங்களோடு இருக்கிறார், உங்கள் கண்ணீரை காண்கிறார். உங்களை ஆற்றி, தேற்றி, மகிழச்செய்கிறார். அவரே அனைத்துலகின் வேந்தர்: அவருக்கே நாம் அருட்பா தொடுத்து புகழ் பாடுவோம். நமது...

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7 : 15

தேசத்தில் உள்ள எல்லா மக்களே!கடவுளின் நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, ஆண்டவரைத் தேடுங்கள்.அவரின் நீதியை தேடுங்கள். மனத்தாழ்மையை தேடுங்கள். அப்பொழுது ஆண்டவர் நம்மை எல்லாப்பொல்லாப்புக்கும் விலக்கி அதிசயங்களைக் காணப்பண்ணுவார். அவர் நம்நடுவில் இருக்கிறார். வல்லமையுள்ளவர். அவரே இரட்சிப்பார். அவர் நமது பேரில் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து தம்முடைய அன்பின் நிமித்தம் அமர்ந்திருப்பார். இஸ்ரயேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து புறப்பட்ட காலத்தில் அநேக அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார். நாமும் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பயந்து, கீழ்படிந்து நடக்கும்பொழுது அவரின் கிருபை நம்மை சூழ்ந்துக்கொள்ளும்.நாம் அவருக்காக பொறுமையுடன் காத்திருந்தால் நமது கூப்பிடுதலை கேட்பார். ஆண்டவர் நோவாவிடம் நீ ஒரு பேழையை உண்டு பண்ணு என்று சொன்ன நேரத்தில் எந்த ஒரு மழைக்கான அறிகுறியும் இல்லவே இல்லை. ஆண்டவரின் வார்த்தைக்கு நோவா கீழ்படிந்து ஒரு பேழையை உண்டு பண்ணுகிறார். அந்த ஊரில் அப்பொழுது வாழ்ந்த மக்கள் அவரை கிண்டல் செய்திருப்பார்கள். நோவாவை பார்த்து உனக்கு பைத்தியமா? என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து...

மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இந்த உலகத்தில் நடக்கப்போகும் காரியங்களை தமது சீடர்களுக்கு அறிவித்தார். அதற்கு அவர்கள் இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு நானே அவர், என்றும் காலம் நெருங்கி விட்டது என்றும் கூறுவார்கள்:அவர்கள் பின்னே போகாதீர்கள். போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் முடிவு உடனே வராது என்றார். நாட்டை எதிர்த்து நாடும்,அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியன ஏற்படும். அச்சுறுத்தக் கூடிய பெரிய அடையாளங்களும், வானில் தோன்றும் இவைகள் நடப்பதற்கு முன் உங்களைப்பிடித்து துன்புறுத்துவார்கள். தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வர். சிறையில் அடைப்பார்கள் என்று லூக்கா 21:8 to 12 வரை உள்ள வசனங்களில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் நாம் இவைகளைக் கண்டு ஒருபோதும் பயப்படாமல் மனஉறுதியோடு இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்டவர் அந்நேரத்தில் நம்மோடு இருந்து நாம் என்ன...

ஒரே கடவுளாகிய இயேசுகிறிஸ்துவை அறிவதே நிலைவாழ்வு

விண்ணையும், மண்ணையும், கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்களினங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார். என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டு விடவில்லை ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார். வானிலிருந்து மழையைக் கொடுக்கிறார். வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார். நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய் கிறார்.திருத்தூதர் பணிகள் 14:15,16,17. இப்படிப்பட்ட தேவனை அறிந்துக்கொள்வது எத்தனை அவசியம்! உண்மையான ஒரே கடவுளாகிய அவரை அறிந்து அவர் அளிக்கும் நிலைவாழ்வை பெற்றுக்கொள்வோம். உலகம் தோன்றுமுன்னே தந்தை இயேசுவை மாட்சிப்படுத்தியுள்ளார். இந்த உலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் என் பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளை கடைபிடித்தார்கள். உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துக்கொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல...