Tagged: தேவ செய்தி

முழு ஆர்வத்துடன் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வோம்

கடவுள் தம்மை மக்கள் தேடவேண்டும், தட்டித் தடவியாவது தம்மைக்கண்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக உயிரையும், மூச்சையும், மற்றனைத்தையும் கொடுத்தார். மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்கு தேவையில்லை. ஏனெனில் ஒரே ஆளிலிருந்து மக்களினம் முழுவதையும் படைத்து அவர்களை மண்ணுலகில் குடியிருக்கச் செய்தார். குறிப்பிட்ட காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். அவர் சொல்ல ஆகும்,அவர் கட்டளையிட நிற்கும்.நமது தேவைகள் யாவையும் பூர்த்தி செய்கிறவர் அவரே! நம்மை நோயிலிருந்தும், தீராத பிரச்சனைகளில் இருந்தும் கடன் பிரச்சனையிலிருந்தும், நம்மை காப்பவர் அவரே. ஒவ்வொரு நாளும் நம்மை கரம் பிடித்து கண்மணியைப்போல் காப்பவர் அவரே! நமது விண்ணப்பத்தையும், வேண்டுதல்களையும் தருபவர் அவரே! அவரே நமக்கு கட்டளையிடுகிறவர்.அவர் கரத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம் சிறந்ததாய் இருக்கும். ஒவ்வொரு நாளும் நம்மை காத்து வழிநடத்தும் தெய்வம் அவரே. அவரையே நாம் ஒவ்வொரு நாளும் துதித்து ஆராதிப்போம். ஏனெனில்,நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். நம்முடைய தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.அவர் பட்ட காயங்களால் நம்மை நோயிலிருந்து குணப்படுத்துகிறார். நமக்காக சிறுமைப்பட்டு,...

ஆண்டவரின் இரக்கம் தீர்ந்து போகவில்லை.புலம்பல் 3 : 22

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை. காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீரே பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!” ஆண்டவரே என் பங்கு” என்று என் மனம் சொல்கின்றது! எனவே அவரில் நம்பிக்கை கொள்கிறேன். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போருக்கும், அவரைத் தேடுவோருக்கும், அவர் நல்லவர்! அவர் அருளும் மீட்டுப்பாக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!அவர் நம்மை வருத்தினாலும் தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார். மனமார அவர் நம்மை வருத்துவதுமில்லை. துன் புறுத்துவதுமில்லை. துன்பங்களின் வழியாக நாம் கடந்து செல்லும்பொழுது நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். தங்கம் அக்கினியினால் உருக்கப்பட்டால்தான் புது, புது வடிவத்தில் பலவகையான ஆபரணங்கள் கிடைக்கிறது. நம்முடைய ஆத்துமாவோ அதைவிட மேலானது. அது சோதிக்கப்படும்பொழுது நமக்குள் பொறுமையும், அமைதியும், அன்பும், நிலைத்திருக்க உதவி செய்கிறது. உபத்திரவம் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது. தி.பாடல்கள் 119:71 ம் வசனம் இதையே சொல்கிறது. எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே: அதனால் உம் விதிமுறைகளைக் கற்றுக்கொண்டேன். கடவுள் ஒரு காரியத்தை கட்டளையிடவில்லை என்றால் அவர் சொல்லியதை யாரால் நிறைவேற்றக்கூடும்? நன்மையும் தீமையும் உன்னதரின் வாயினின்றே புறப்படுகிறது. ஆகையால்...

தம் சகோதரர்,சகோதரிகளிடம்,சினம் கொள்வோர் தண்டனை தீர்ப்புக்கு ஆளாவார்.மத்தேயு 5 : 22

விண்ணும்,மண்ணும்,ஒழிந்துபோகும்முன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ, நான் அழிக்க வந்தேன் என நினைக்க வேண்டாம். அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். இதில் ஒரு சிறு எழுத்தும் ஒழியாது என உறுதியாக சொல்கிறேன் என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார். கொலை செய்யாதே: கொலை செய்கிறவர்கள் எவரும் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார் என்று கேள்விபட்டிருப்பீர்கள் ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், தம் சகோதரர், சகோதரிகளிடம், சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். தம் சகோதரரையோ, சகோதரியையோ முட்டாளே” என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார். “அறிவிலியே” என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையை பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவு வந்தால் பலிபீடத்தின் முன் காணிக்கையை வைத்துவிட்டு முதலில் அவரிடம் சமாதானமாகுங்கள். என்று இயேசுநமக்கு அறிவுறுத்துகிறார். மத்தேயு 5 : 21 to 24. தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன். கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின்...

தருமம் செய்யும்பொழுது முகம் கோணாதே:தோபித்து 4 : 7

தோபித்து வாழ்நாள் எல்லாம் உண்மையையும், நீதியையும் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்.அசீரியா நாட்டில் உள்ள நினிவே நகருக்கு நாடு கடத்தப்பட்ட அவரின் உறவினர்களுக்கு பல தருமங்கள் செய்து வந்தவர். இஸ்ரயேலர் எல்லார்க்கும் எக்காலத்துக்கும் கட்டளையிட்டிருந்தபடி திருவிழாக்களின் போது பலமுறை எருசலேமுக்கு சென்று வந்தவர். தனது கால்நடையிலும்,தானியம்,திராட்சை ரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கை எருசலேமில் திருப்பணி புரிந்து வந்த லேவியரிடம் கொடுத்து வந்தவர். அவர் தன் வழிமரபில் வந்த அன்னாள் என்பவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.அவன் பெயர் தோபியா. இவர்கள் யாவரும் நாடு கடத்தப்பட்டு அங்கு அடிமைகளாக இருந்தபொழுது மற்றவர்கள் எல்லோரும் அந்நாட்டின் உணவை உண்டு வாழ்ந்தனர். ஆனால் தோபித்து அந்நிய உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தார். ஏனெனில் தமது முழுமனதுடன் கடவுளை சிந்தனையில் நிறுத்தி உன்னத இறைவனின் விருப்பப்படி வாழ்ந்து வந்தார். அசீரிய மன்னன் சனகெரியு யூதா மக்களை கொன்று குவித்து வநதான். அப்பொழுது தோபித்து அந்த சடலங்களை எடுத்து அடக்கம் செய்து வந்தார்.தனது இன மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துவந்தார். அதனால்...

உலகின் விதானத்தின்மீது வீற்றிருப்பவர் நமது ஆண்டவரே! எசாயா 40 : 22

இந்த பூமியில் வாழும் நாம் ஆண்டவரின் பார்வைக்கு வெட்டுக்கிளி போல் இருக்கிறோம். கடவுள் வானங்களை மெல்லிய திரைகளாக பரப்பி அவைகளைக் குடியிருக்கும் கூடாராமாக விரிக்கிறார். ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே! மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே. அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை. விதைக்கப்படுவதுமில்லை. அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை. அவர்கள்மேல் ஆண்டவர் ஊதவே அவர்கள் பட்டுப்போவார்கள். பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டு போகும். இவ்வளவு வல்லமையும்,மகத்துவமும் நிறைந்த ஆண்டவர் நம்மோடு இருக்கும்பொழுது நாம் மனம் கலங்க வேண்டிய அவசியம் தான் வேண்டுமோ! ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து கற்றுத்தந்தவர் யார்? யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்? அவருக்கு பயிற்சி அளித்து, நீதிநெறியை உணரத்தியவர் யார்? அவருக்கு அறிவு புகட்டி விவேக நெறியைக் காட்டியவர் யார்? அவர் பூமியின் உருண்டையின்மேல் வீற்றிருக்கிறார். அங்கிருந்து நம்மை கண்ணோக்கி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சகல மக்களும் அவருக்குமுன் ஒன்றுமில்லை. அவர்கள் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள். அவரை யாரோடும் ஒப்பிடாதீர்கள்.யாரோடு ஒப்பிட்டு எந்த சாயலை அவருக்கு நிகராக செய்வீர்கள்?...