Tagged: தேவ செய்தி

கடுகு, புளிப்பு மாவு : தைரியம் தரும் தைலங்கள்

மத்தேயு 13:31-35 மனிதர்களுக்கான பல பிரச்சினைகளில் தாழ்வு மனப்பான்மை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. தாழ்வு மனப்பான்மை என்பது நான் சிறியவன், சிறந்தவன் அல்ல என்பதிலிருந்து உதயமாகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கு தைரியம் கொடுக்கும் தைலமாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். கடுகு உருவில் சிறியது ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. கடுகு தனக்குள்ளே இருக்கும் சக்தியை உணா்ந்ததால் வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை அந்த சிறிய விதை வெளிக்கொணர்கின்றது. புளிப்பு மாவு கண்ணுக்கு புலப்படாதது. ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. மாவு முழுவதையும் புளிப்பேற்றும் தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை வெளிப்படுத்துகின்றது. நமக்குள்ளே கடவுள் கொடுத்த பிரம்மாண்டமான சக்தி இருக்கிறது. அதை கண்டுபிடிப்போம். அதை உசுப்பிவிடுவோம். மிகவும் சிறியவைகள் இப்படி செய்கிறது என்றால் ஏன் நம்மால் செய்ய முடியாது? எல்லாமே முடியும். நம்மை ஆட்டிப்படைக்கும் தாழ்வு மனப்பான்மையை தரை...

பதவிக்கான ஆசை உங்களை விரட்டுகிறதா?

யோவான் 6:1-15 திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (போப் பெனடிக்ட் XVI), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர் ஆவார். இவர் 1927 ஏப்ரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். இவர் மூனிச் உயர் மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயல்பட்டு வந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார். இவர் தன் வாழ்வில் செய்த ஒரு சிறப்பான செயல் இன்றும் நம் மனக்கண் முன் நிற்கின்றது. ஒருபோதும் நாம் அதை மறக்க முடியாது. அது நம் அனைவருக்கான அழியா பாடம், அழகான பாடம். 2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013...

களைகளுக்கு தேவை மூன்று சுற்றுலாக்கள்

மத்தேயு 13:24-30 சிறு குழந்தையாய் நாம் இருந்த போது களைகள் நமக்குள் இருப்பதில்லை. ஆனால் நாம் வளர வளர களைகளும் நமக்குள்ளே வளருகின்றன. களைகள் வருவது இயல்பு. ஆனால் அந்த களைகளை விரட்டுவது தான் புத்திசாலித்தனம். ஒரு புத்திசாலி எப்படி களைகளை விரட்ட முடியும் என்பதை நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. களைகளை மூன்று வழிகளில் நாம் விரட்டலாம். 1. அமைதி சுற்றுலா அமைதியாக இருக்கும் போது தான் நாம் நம்மைப் பற்றி அறிகிறோம். நமக்குள்ளே இலவசமாக சுற்றுலா செல்கிறோம். இந்த இன்பச் சுற்றுலா நம்மை பற்றிய முழு அறிவையும் கொடுக்கிறது. நம் களைகள் அனைத்தையும் அமைதி சுற்றுலா நமக்கு முன்னே எடுத்து வைக்கிறது. 2. இயேசுவோடு சுற்றுலா அமைதி சுற்றுலாவில் களைகளை கவனமாய் கண்டறிந்த பிறகு தியானம் மேற்கொள்ள வேண்டும். அந்த தியானம் இயேசுவாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு கொடுக்கும். அதிலே நாம் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டு மனம்...

தேர்வில் வெற்றியா? மதிப்பெண் என்ன?

மத்தேயு 13:18-23 காலையில் கண்விழித்தது முதல் இரவு கண்களை மூடும் வரை இறைவார்த்தையானது நம் உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. அது பல வடிவங்களிலே விதைக்கப்படுகிறது. திருவிவியத்தைப் படிக்கும்போதும், அருட்தந்தையர்களின் மறையுரைகளைக் கேட்கும் போதும் ஒரு சில சான்றோர்கள் நம்மோடு உறவாடும் போதும் இறைவார்த்தையானது உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. விதைக்கப்பட்ட இறைவார்த்தையை எடுத்து அதை வாழ்ந்து காட்டுபவர்களை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவர்களின் மதிப்பெண்களையும் நாம் பார்க்கலாம். 1. முப்பது மதிப்பெண்கள் இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். ஆனால் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை சாத்தான் அவர்களிடமிருந்து எடுத்துவிடுவதால் எல்லாமே இடையிலே முடிந்துவிடுகிறது. இவர்களின் மதிப்பெண்கள் முப்பது. தோல்வியடைகிறார்கள். 2. அறுபது மதிப்பெண்கள் இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உண்டு. ஒருசிலவற்றை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இடையில் சாத்தான் தொந்தரவு கொடுப்பதால் அவர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை. இவர்களின் மதிப்பெண் அறுபது. ஏதோ தத்தி முத்தி வெற்றியடைந்து விடுகிறார்கள்....

மிகவும் முக்கியமான நபராக(VIP) நீங்கள் மாறலாம்…

மத்தேயு 13:10-17 நாம் அனைவரும் நன்கு அறிந்தபடி, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உவமைகள் வாயிலாக போதித்தார். அவர் போதனைகள் அனைத்தும் நம்மை செதுக்கி சீராக்கி நல்வாழ்விற்கு இட்டுச்செல்ல. நம் உடலில் அழுக்குகள், ஆபத்துக்கள் வந்து சேராமல் அணை போட வேண்டும் என்பதற்காக. மிகவும் குறிப்பாக நம் உடலிலுள்ள மூன்று உறுப்புகளில் அழுக்குகள் வந்து சேராமல் நாம் கருத்தாய் கவனமாய் இருந்தோம் என்றால் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆர்ப்ரிப்பு, ஆனந்தம் வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கும். மிகவும் முக்கியமான நபராக(VIP) நாம் மாறலாம். கண், காது மற்றும் இதயம் இந்த மூன்றையும் பயன்படுத்தி மிகவும் முக்கியமான மனிதராக நாம் மாறலாம். ஒவ்வொன்றின் படைப்பின் முக்கிய அர்த்தத்தை உணர்ந்து பயன்படுத்தினால் அதன் பலன் நமக்கு பல மடங்கு கிடைக்கும். 1. ஆற்றல் நிறைந்த கண்கள் கண்களைக் கொண்டு புத்தகங்கள் வாசித்து நல்ல அறிவாளியாக, அறிஞராக மாறலாம். நல்லதைப் பார்த்து கவிதை எழுதி கவிஞராக உருவாகலாம்....