Tagged: தேவ செய்தி

மீண்டு(ம்) எழுவோம்

இந்த உலகத்தில் கவலைகொள்ளாத மனிதர்கள் இல்லை. கவலைப்படுவதினால் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது, என அறியாதவர்களும் யாரும் இல்லை. ஆனாலும், ஒவ்வொருநாளும் கவலை என்கிற கரையான், நம்மை அரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் இயேசுவின் வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை, நமது சோகமயமான வாழ்வை சிந்தித்துப் பார்த்து, மகிழ்ச்சியான வாழ்வு வாழ அழைப்புவிடுக்கிறது. அடிப்படையில் கவலை கொள்வது என்பது, கடவுள் நம்பிக்கையற்ற தன்மையைக் குறிக்கிறது. நாம் கடவுளை நம்புகிறோம். அவர் நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார் என்று விசுவசிக்கிறோம். அந்த விசுவாசத்தைத்தான் நாம் வாழ்ந்து கொண்டு, அறிக்கையிடுகிறோம். ஆனாலும், பல வேளைகளில் கவலை, அந்த நம்பிக்கையை, காட்டாற்று வெள்ளம் போல, அடித்துச்சென்று விடுகிறது. அதனை எப்படி எதிர்கொள்வது? விடாமுயற்சி. மீண்டும், மீண்டும் நாம் விழுந்தாலும், மீண்டும், மீண்டும் நாம் எழ வேண்டும். நமது முயற்சியை எக்காரணத்தைக்கொண்டும், எந்த காலத்திலும் விட்டுவிடக்கூடாது. இயேசு எவ்வாறு தனது கல்வாரி பயணத்தின்போது, கீழே விழுந்தாலும், மீண்டும், மீண்டும் எழுந்தாரோ,...

விண்ணகத்தில் செல்வம் சேர்ப்போம்

”விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” என்ற இந்த இறைவார்த்தை யூதர்களுக்கு நன்றாக புரியக்கூடிய வார்த்தைகளாக இருந்தன. ஏனென்றால், யூதமக்கள் மத்தியில் யூத சமயத்தைத் தழுவிய ஓர் அரசரைப்பற்றிய கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதியாபெனேவைச்சார்ந்த மோனோபாஸ் என்கிற அரசர் தான் அவர். யூத சமயத்தைத் தழுவியவுடன் அவர் செய்த முதல் காரியம், தனது செல்வத்தையெல்லாம், பஞ்சகாலத்தில் ஏழைகளுக்குப்பகிர்ந்து கொடுத்தார். அதைப்பார்த்த அவருடைய சகோதரர்கள், ”நமது மூதாதையர்கள் அனைவரும் செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்த்து வைத்திருந்தார்கள். நீயோ, அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாயா?” என்று கடிந்துகொண்டார்கள். அதற்கு அரசர், நமது மூதாதையர் மண்ணகத்தில் செல்வத்தைச் சேர்த்து வைத்தனர். நானோ விண்ணகத்தில் சேர்த்து வைத்திருக்கிறேன். மண்ணகத்தில் சேர்த்து வைத்த செல்வத்தினால் நமக்கு பயன் ஒன்றும் இல்லை. விண்ணகச்செல்வம் நமக்கு நிலையான வாழ்வு தரும்” என்று பதிலளித்தாராம். இயேசு இந்த உவமையைச் சொன்னவுடன், நிச்சயம் அங்கிருந்தவர்களுக்கு, தங்கள் நடுவில் பிரபலமாயிருந்த இந்த கதை நினைவுக்கு வந்திருக்கும். இயேசுவும்...

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை

திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 7 – 8 யூதர்கள் தங்களின் வாழ்க்கையில் நடக்கிற எல்லாவற்றையும், கடவுளின் செயலோடு பொருத்திப்பார்க்கிறவர்கள். தங்கள் வாழ்வில் நடக்கிற எல்லாமே கடவுளின் ஆணைப்படி தான் நடக்கிறது. கடவுள் தான் தங்களை வழிநடத்துகிறார் என்பதில், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த பிண்ணனியில் தான், திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை என்று சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? வாழ்க்கையில் ஒரு சில விரும்பாத நிகழ்வுகள் நடக்கிறபோது, நாம் கடவுளிடத்தில் கோபப்படுகிறோம். கடவுள் தான் நம்மை இந்த நிலைக்கு விட்டுவிட்டார் என்று வருத்தமடைகிறோம். அவரிடத்தில் நாம் முறையிடுகிறோம். ஆனால், காலம் கடந்து நாம் சிந்திக்கிற வேளையில், நாம் விரும்பாத நிகழ்வுகள் தான், நமக்கு மிகச்சிறப்பான ஆசீர்வாதத்தை தந்திருப்பதை, நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்திருப்போம். அப்போதுதான், நாம் கடவுளுக்கு அந்த விரும்பாத நிகழ்வுகளைத் தந்ததற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பிண்ணனியில் பார்க்கிறபோது, கடவுளின் செயல்கள்...

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் பேறுபெற்றோர்

திருப்பாடல் 112: 1 – 2, 3 – 4, 9 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் பேறுபெற்றோர் என்று சொல்லும் திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக வாழ்வர் என்பதை, இந்த திருப்பாடலில் விளக்கிக்கூறுகிறார். ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்வது எளிதான காரியம் அல்ல. அது நெருப்பின் மீது நடப்பது போன்றது ஆகும். ஆனால், கடவுள் நம்மோடு இருப்பார். தீயின் தாக்கம் நம்மைத்தாக்காத அளவிற்கு, நம்மோடு அவர் உடன் பயணிப்பார். ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்கிறவர்கள் எப்போதும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அவ்வளவு கடினமான வாழ்க்கையை, அவர்கள் நம்பிக்கையோடு வாழ்வார்கள். அது மட்டுமல்ல, ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடியவர்களிடத்தில் காணப்படக்கூடிய முக்கியமான மூன்று பண்புகள்: அருள்மிக்கவர்கள், இரக்கம் உள்ளவர்கள், நீதியோடு வாழ்கிறவர்கள். நம்முடைய வாழ்வில் நாம் கடவுளுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்றால், இவற்றை நம்முடைய வாழ்வாக்க வேண்டும். கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறபோது,...

என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு!

திருப்பாடல் 146: 1 – 2, 5 – 6, 7, 8 – 9 மனிதன் கடவுளுக்கு எதிராக பல தவறுகளைச் செய்ததினால், அவனுடை கீழ்ப்படியாமையினால் அருள் வாழ்வை இழந்தான். தன்னுடைய நிலைக்கு தானே தான் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டான். ஆனாலும், கடவுள் அவனை நிர்கதியாக விட்டுவிடவில்லை. அவன் மீது தான் இன்னும் அன்பாயிருக்கிறேன் என்பதை, பலவிதங்களில் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கடவுளின் அன்பிற்கான வெளிப்பாடு தான், இன்றைய திருப்பாடல். இன்றைய திருப்பாடலில், கடவுள் இந்த உலகத்தை மீட்பதற்காக எடுக்கும் முயற்சியின் போது நிகழும், ஒரு சில அடையாளங்களை திருப்பாடல் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் மெசியாவை நிச்சயம் அனுப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கிற வேளையில், மெசியா வந்தால், இதுதான் மெசியாவின் காலம் என்பதை எப்படி அறிந்து கொள்வது? என்பதற்கான விளக்கம், இந்த பாடலில், கொடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நிகழவிருப்பதை, முன்கூட்டியே வெளிப்படுத்துகின்ற இறைவாக்குப்பணியை, இந்த திருப்பாடல் அறிவிக்கிறது. மெசியா வருகிறபோது,...