Tagged: தேவ செய்தி

எலிசாவின் பிடிவாதம்

2அரசர்கள் 2: 1, 6 – 14 1அரசர்கள் புத்தகத்தில் 17 ம் அதிகாரத்தில் எலியாவை காண்கிறோம். குறிப்பாக ஆகாபு அரசருக்கு எதிராக கடவுளின் வார்த்தையை துணிவோடு அறிவித்ததைப் படித்தோம். இரண்டாம் அரசர்கள் புத்தகத்தில் எலியா விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடப்படுகிறது. எலியா, தான் இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படப்போவதை அறிந்தவராக, எலிசாவை அவரைப் பின்தொடராமல் அங்கேயே தங்கியிருக்கச் சொல்கிறார். ஆனால், எலிசா அவரைப்பிரிவதற்கு மனமில்லாதவராக இருக்கிறார். எலிசாவின் பிடிவாதத்தைக் கண்டு, எலியாவும் அவரைப் பின்தொடர்வதற்கு அனுமதிக்கிறார். இங்கு எலிசா, பிடிவாதமாக இறைவாக்கினரைப் பற்றிக் கொள்வதைப் பார்க்கிறோம். இறைவாக்கினர் எலிசாவிடம் இருக்க வேண்டிய பண்பானது நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய பண்பாக இருக்கிறது. இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த பண்பு. இறைவாக்கினர் எலியா, எலிசாவைப் பின்தொடர வேண்டாம் என்று சொன்னது, தனக்கு நடக்கப்போவதை அறிந்ததனால். ஏனென்றால், அவர் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறார். தன்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிற...

இறையடியார்கள்

1அரசர்கள் 21: 17 – 29 கடவுள் முன்னிலையில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர் அரசராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதை அழுத்தம் திருத்தமாக இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆசைப்பட்ட ஆகாபு அரசன், தன் மனைவியின் சதிச்செயலுக்கு உடன்பட்டு, அவனைக் கொலை செய்துவிடுகிறான். அந்த தோட்டத்தை அபகரிப்பதற்காகச் செல்கிறான். ஆனால், ஆண்டவர் இறைவாக்கினர் எலியாவை அனுப்புகிறார். தவறு செய்வனான ஆகாபு மட்டுமல்ல, அந்த தவறுக்கு உடந்தையாக இருந்த அவனுடைய மனைவி ஈசபேலும் இறைவனின் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாகிறாள். இந்த பகுதியில், இறைவாக்கினரின் பணியை நாம் சற்று ஆழமாகப் பார்க்கலாம். வரலாற்றின் துணிவுள்ள சில மனிதர்களின் விழுமியங்களை இங்கே எலியாக படம்பிடித்துக் காட்டுகிறார். தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவருடைய தவறை அவருடைய நெஞ்சுக்கு நேரே நின்று எதிர்கொள்வது தான் அந்த விழுமியம். ஆகாபு அரசன் தீய, கொடூரமான, ஒழுக்கமில்லாதவனாக இருக்கிறான். அவனுக்கு எதிராக, அவனுடைய...

நீதி வழங்கும் இறைவன்

1அரசர்கள் 21: 1 – 16 ஆண்டவர் எப்போதும் ஏழைகள் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்கிறார் என்பதற்கு இன்றைய வாசகம் சிறந்த சாட்சியாக அமைகிறது. இறைவன் இந்த உலகத்திலிருக்கிற எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கிறார். அந்த விருப்பத்தோடு தான், இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்த இறைவன், அவனுக்கு இந்த உலகத்தின் எல்லா செல்வங்களின் மீதும் நிர்வகிக்கிற பொறுப்பை வழங்குகிறார். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான், இறைவன் இந்த உலகத்தைப் படைத்ததன் நோக்கமாகும். பேராசை கொண்ட மனிதன், இந்த உலகத்தை அடக்கி ஆள வேண்டும் என்று எண்ணுகிறான். அங்கே அடிமைத்தனம் உருவாகிறது. வளங்களைக் கொள்ளையடிக்கிறான். பொருளாதாரப் பிளவை உண்டாக்குகிறான். நாம் வாழ்கிற இந்த உலகத்தில் மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாக, அதிகாரவர்க்கமும், அவர்கள் அடக்கி ஆள்வதற்கு பாமரரர்களும் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். இறைவன் எப்போதும் எளியவர்களுக்கு பாதுகாப்பாகவும், ஏழைகள் சார்பாகவும், மக்களுக்கு சரியான...

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19, 22 எருசலேம் என்று இங்கே குறிப்பிடப்படுவது இஸ்ரயேல் மக்களை குறிக்கக்கூடிய சொல்லாகும். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்து வந்திருக்கிற எல்லா மேன்மை மிகு செயல்களையும் ஆசிரியர் சொல்கிறார். இஸ்ரயேல் மக்களை மற்ற நாட்டினரோடு ஒப்பிட்டுப்பேசுகிறார். மற்ற நாட்டினரோடு ஒப்பிட்டுப் பேசுகையில், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்திருப்பதை ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். இஸ்ரயேல் மக்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். பகைநாட்டினரிடமிருந்து அவர்களை பாதுகாப்பாக வழிநடத்தியிருக்கிறார். அவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளையெல்லாம் செய்திருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் வழியாக, கடவுள் எவ்வளவுக்கு மேன்மைமிக்கவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காகவே இதை கடவுள் செய்தார். ஆனால், கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொண்ட இஸ்ரயேல் மக்கள், அதற்கேற்ப தங்களது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் கடவுளை விட்டு விலகிச்சென்றார்கள். அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்து, பாவம் செய்தார்கள். கடவுளை தங்களது செயல்களால் பழித்துரைத்தார்கள். இப்படிப்பட்ட...

துணிவோடு வாழ…

கிறிஸ்தவர்களாகிய நமக்கு துணிவு முக்கியம். அந்த துணிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும், என்று துணிவோடு வாழ அழைப்பதுதான் இன்றைக்கு நாம் வாசிக்கிற நற்செய்தி நமக்குத்தருகிற செய்தியாக இருக்கிறது. பல வேளைகளில் நம் கண்முன்னால் அநீதி நடக்கிறபோது, நமக்கு ஏன் வம்பு? என்று ஒதுங்கிச்செல்கிறோம். விவேகமாக நடந்து கொள்வதாக நாம் எண்ணுகிறோம். ஆனால், அது தவறு. நமது பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கிறோம். நமது கடமையை நாம் செய்யத்தவறுகிறோம் என்பதுதான் இதனுடைய அர்த்தமாக இருக்க முடியும். இயேசு தனது போதனைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் எது தவறு என்பதை அவர் அறிந்தாரோ, அதனைத்துணிவோடு எதிர்த்து நின்றார். எது சரி என்று அவர் நினைத்தாரோ, அதனைத் துணிவோடு செய்தார். ஆக, தவறை, தவறு என்று சுட்டிக்காட்டுவதற்கும், சரியை, சரி என்று செய்வதற்கும், அவருக்கு துணிவு இருந்தது. அந்த துணிவு நமக்கும் இருக்க வேண்டும். இன்றைய உலகில் தவறு என்பது தெரிந்தும், நாம்...