Category: இன்றைய வசனம்

யோவான் முதல் திருமுகம் (1 அருளப்பர்) 3:16

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ~யோவான் முதல் திருமுகம் (1 அருளப்பர்) 3:16

யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:6

நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். ~யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:6

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 17:17

நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்: இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 17:17

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:4

அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது. ~கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:4

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 11:1

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி: கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. ~எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 11:1