Category: இன்றைய சிந்தனை

இறைவனின் திருவுளம்

திருத்தூதர் பணிகள் 16: 22 – 34 கடவுளுடைய வழிகள் அற்புதமானவை. நாம் நம்ப முடியாதவை. பல நேரங்களில், நம்முடைய மனித பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால், காலம் கனிகிறபோது, நாம் கடவுளின் அன்பை உணர்ந்து மிகவும் வியப்படைகிறோம். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருநாளும், நம்முடைய வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து, ஏன்? ஏன்? என்று, பல ”ஏன்”களை கடவுளிடம் கேட்டு சளிப்படைந்திருக்கிறோம். பதில் அறியாது திணறியிருக்கிறோம். ஆனால், ஒரு கட்டத்தில், அதற்கான பதில் நமக்கு வழங்கப்படுகிறபோது, இறைவனின் அன்பை எண்ணிப்பார்த்து, நாம் நடந்து கொண்ட விதத்திற்கு வருத்தப்படுகிறோம். இன்றைய வாசகத்தில், கடவுளின் வழிகள், நாம் ஆச்சரியப்படக்கூடிய இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பவுலும் அவரோடு இருந்த சீடர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையில் இருக்கிறவர்கள் வாய்ப்பு கிடைக்கிறபோது, நிச்சயம் தப்பிப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாகத்தான் இருப்பர். பவுலுக்கும், சீடர்களுக்கும் இயற்கையே அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்தும் அவர்கள் தப்ப நினைக்கவில்லை. அவர்களின்...

அல்லேலூயா

திருப்பாடல் 149: 1 – 2, 3 – 4, 5 – 6, 9 திருப்பாடல் 149 வெற்றியின் திருப்பாடல் என்று சொல்லலாம். இஸ்ரயேல் மக்கள் தங்களது எதிரிகளை வென்று, மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறபோது எழுதப்பட்ட பாடலாக இது பார்க்கப்படுகின்றது. இந்த திருப்பாடலின் சிறப்பு, அல்லேலூயா என்கிற வார்த்தையில் தொடங்கி, அல்லேலூயா என்கிற வார்த்தையிலே முடிவடைகிறது. இன்றைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடையே ”அல்லேலூயா” என்கிற வார்த்தை, ஏதோ பிரிந்து போன சகோதரர்கள் மட்டுமே பயன்படுத்துகிற வார்த்தை என்பது போன்ற, ஓர் எண்ணம் உள்ளத்தில் இருக்கிறது. அல்லேலூயா என்றால் என்ன? இது ஒரு குறிப்பிட்ட சபையினருக்கு மட்டும் தான் சொந்தமானதா? இந்த வார்த்தையை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினால் அது சரியாக இருக்குமா? என்றெல்லாம் கேள்விகள் நமக்குள்ளாக எழுந்து மறைகிறது. அல்லேலூயா என்பது ஓர் எபிரேய வார்த்தை. “யா“ என்கிற வார்த்தை ”யாவே” இறைவனைக்குறிக்கக்கூடிய சொல். “இறைவன் போற்றப்படுவாராக” என்பது தான் இதனுடைய பொருள்....

உண்மையான விசுவாசம்

Success does not mean winning the battle, but winning the war – என்று பொதுவாகச் சொல்வார்கள். போர் என்பது பல நாட்களாக நடக்கக்கூடியது. அதிலே ஒருநாள் வெற்றிபெற்றால், எதிரியை விட சிறப்பாக செயல்பட்டால், அது உண்மையான வெற்றியல்ல. இறுதியாக யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, எதிரியைத் தோற்கடிக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றியாளர்கள். ஒரு விஞ்ஞானி தன்னுடைய கண்டுபிடிப்பிற்காக பலநாட்கள் செலவழிக்கிறார். அதிலே தோல்வி மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று, இத்தனை நாட்களாக தான், எதற்காக உழைத்தோமோ அதனை அவர் சாதிக்கிறபோது, வெற்றி பெற்றுவிடுகிறார். இதுதான் வெற்றி. இதனை மையப்படுத்தி தான், இன்றைய வாசகங்கள் அமைந்திருக்கிறது. இயேசுவின் வாழ்க்கை வெற்றியா? தோல்வியா? என்று யாரிடமாவது கேட்டால், அவரது இறப்பை வைத்து அதை தோல்வி என்று தான் சொல்வார்கள். அவர் அநீதியாக தீர்ப்பிடப்பட்டார் என்று தான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. உயிர்ப்பு இயேசுவின் வெற்றியை எடுத்துச் சொல்கிறது....

இறைவனுடைய திருவுளம்

திருத்தூதர் பணி 16: 1 – 10 இறைவன் நம்மை வழிநடத்துகிறார். தன்னுடைய வழிநடத்துதலை அவர் எப்படி மானிடர்க்கு வெளிப்படுத்துகிறார்? இன்றைய வாசகம் நமக்கு அருமையான ஒரு எடுத்துக்காட்டை தருகிறது. பவுல் கனவு காண்கிறார். அவருடைய கனவில், மாசிதோனியர் ஒருவர், அவர்களுக்கு வந்து உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறார். அந்த கனவை இறைத்திருவுளமாக ஏற்று, பவுலடியார் அங்கு செல்வதற்கு ஆயத்தமாகிறார். கடவுளின் திருவுளத்திற்காக உண்மையான உள்ளத்தோடு ஏங்குகிறபோது, இறைவன் நமக்கு நிச்சயம் வெளிப்படுத்துவார் என்கிற பவுலடியாரின் நம்பிக்கை இந்த பகுதியில் உறுதிப்படுத்தப்படுகிறது. விவிலியத்தில் கடவுள் தன்னை நோக்கி மன்றாடுகிற தன்னுடைய பிளள்ளைகளுக்கு பலவிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மோசேக்கு நெருப்புப்புதரில் தன்னை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் வழியாக வெளிப்படுத்தினார். யோசேப்புக்கு கனவின் வழியில் இறைத்திருவுளத்தை வெளிப்படுத்தினார். இப்படி உதாரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரிடத்திலும் ஒற்றுமை இருப்பதையும் நாம் பார்க்கலாம். இவர்கள் அனைவருமே, கடவுளுடைய திருவுளத்தை அறிவதற்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்கள். அந்த ஏக்கம்...

உயிர்ப்பு தரும் அர்ப்பணம்

திருத்தூதர் பணி 15: 22 – 31 இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததில், தூய பவுலடியார் எந்த அளவுக்கு முன்மதியோடும், அர்ப்பண உணர்வோடும் செயல்பட்டார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிலர் மக்களை குழப்புகிற நேரத்தில், சரியானவிதத்தில் அதனைக் கவனித்து, அவர்களை தெளிவுபடுத்துவதற்காக, சரியான ஆட்களை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாது, தன்னுடைய கடிதத்தின் மூலமாகவும் சிறப்பாக அவர்களை வழிநடத்துகிறார். அவருடைய கடிதத்தை வாசித்துக் கேட்டவுடன், மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களது விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது. இறைமக்களை விசுவாசத்தில் கட்டியெழுப்ப, எவ்வளவுக்கு சாதாரண காரியங்களில் எல்லாம் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது, இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்பதில் தன்னுடைய நேரம் முழுவதையும் செலவிட்டார். எந்த அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ, அதனை விட பல மடங்கு கிறிஸ்துவுக்காக உழைத்தார். பவுலின் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கான காரணத்தைத் தேடுகிறபோது, உயிர்ப்பு தான் நம்முடைய நினைவுக்கு வருகிறது. உயிர்த்த இயேசுவின் அனுபவம் அந்த...