Category: இன்றைய சிந்தனை

சொன்ன சொல் மாறாது நடப்போம்

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! நாம் பேசுவதற்கு முன் நிறைய தடவை யோசித்து பேசவேண்டும். நம் விருப்பப்படி எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை நினைத்து நாம் மனம் கலங்குகிறோம். மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்புநாளில் கணக்கு கொடுக்கவேண்டும். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாக கருதப்படுவீர்கள், உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளியாகவும் கருதப்படுவீர்கள் என்று மத்தேயு  12:36,37ல்  வாசிக்கிறோம். நம் சொல்லில் நாம் சிக்கிக் கொள்ளாத படிக்கு சில வேளைகளில் அமைதியாக இருந்து பொறுமையை கடைப்பிடித்தால் அதனால் நாம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். நீதிமொழிகள் 6:2. நம்முடைய சொல் எப்பொழுதும் உண்மையாக இருக்கவேண்டும். பொல்லாங்கான பேச்சு அருவருப்பு. நம் சொற்கள் ஆழ்கடல் போன்றவை. அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம். ஞானம் சுரக்கும் ஊற்று.  நீதிமொழிகள் 8:7; 18:4.& 16:24. இன்சொற்கள் தேன்கூடு போன்றவை: மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கும் நலம் தரும். ஆதலால் பிரியமானவர்களே நம்மால் கூடுமட்டும் உண்மையை சொல்லி...

அருளினால் [கிருபையால்] நிலைநிற்கிறோம்

கடவுளின் அருளினால் நிலைநிற்க அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் வாழும் நாம் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் கிருபையால் வாழ்கிறோம். அவருடைய நிறைவில் இருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். யோவான் 1:16. வானதூதர் மரியாளுக்கு தோன்றி அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார், என்று வாழ்த்தினார். லூக்கா 1:28. இந்த அருளைப்பெற நாமும் அன்னை மரியாளைப் போல ஆண்டவரின் அடிமையாக ஆகவேண்டும். அப்பொழுது நமக்கும் அவருடைய கண்களில் அருள் கிடைக்கும். கடவுள் நம்முடைய தகுதி, படிப்பு, செல்வாக்கு இவற்றை பார்த்து கிருபை அளிப்பதில்லை. நம் உள்ளத்தையும்,எண்ணத்தையும் பார்த்தே நமக்கு கிருபை அளிக்கிறார். அவர் நிறைவேற்றிய மீட்பு செயலின்மூலமும்,அவருடைய அருளாலும் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்களாய் ஆக்கப்படுகிறோம். ரோமர் 3 :24. இலவசமாய் கிடைத்தது தானே என்று நாம் அலட்சியம் செய்யாமல் அவருக்கு பயந்து அவரின் வாக்குகளை காத்து நடப்போம். ஆதாம் செய்த பாவத்தினால் தண்டனை வந்தது.ஆனால் நம் எல்லோருடைய பாவத்துக்கும் கிடைத்ததோ அருள்...

மனதுருகும் நம் ஆண்டவர்

பிரியமான ஒவ்வொருவருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின்  நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு திரண்டிருந்த மக்களை பார்த்து அவர்கள்மேல்  மனதுருகி அநேகரை நோயிலிருந்து விடுதலையாக்கினார். மத்தேயு 14:14. என்று வாசிக்கிறோம். இன்றும் நீங்கள் யாராவது நோயினால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கீர்களா? கவலைப்பட வேண்டாம். இதோ உங்கள் மேல் மனதுருகும் நம் ஆண்டவர் எல்லா நோயிலிருந்தும் விடுவித்து காக்க வல்லவராய் இருக்கிறார். உங்கள்மேல் அன்பும், பரிவும் காட்ட யாரும் இல்லையே என்று தவிக்கிறீர்களா? மனம் கலங்காதீர்கள். உங்களை நேசிக்க அன்பும் பரிவும், காட்ட நம் ஆண்டவர் உங்கள் அருகில் நிற்கிறார். அவரை நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடு அழைத்தால் உங்களுக்கு உதவ ஆவலோடு காத்திருக்கிறார், அழாதீர்கள் என்று கூறுகிறார். லூக்கா 7:13 . அதுமட்டுமல்ல உங்களுக்கு கருணை காட்டவும், உங்களுக்கு  இரங்குமாறு எழுந்தருள்வார். ஏனெனில் அவர் நீதியின் கடவுள். அவருக்கு காத்திருப்போர் நற்பேறு பெறலாம். எசாயா 30:18 . மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது: என்...

நல்ல ஆயன் நம் ஆண்டவர்

அன்பானவர்களே! நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். உயிருள்ள யாவருக்கும் நல்ல ஆயனாய் நம்மை வழிநடத்தும் நம் ஆண்டவரை பற்றிக்கொண்ட யாவரும் எவ்வளவு விசேஷித்தவர்கள் தெரியுமா? அவர் நமக்காக எப்படியெல்லாம் வழக்காடுகிறார் பாருங்கள். ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறைவில்லை. திருப்பாடல்கள் 23 :1 . நாம் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் நம் ஆயர் நம்மோடு இருந்து நம் எதிரிகளின் கண்முன்னே நமக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்து நம் வாழ்நாளெல்லாம் அவருடைய இல்லத்தில் வாழ்ந்திருக்கும்படி செய்கிறார். திருப்பாடல்கள் 23 :4-6. அதுமட்டுமல்ல, அவருடைய மந்தையாகிய நம்மை அவர் ஏற்பாடு செய்திருந்த ஆயர்கள் மந்தையாகிய நம்மை ஒழுங்காக மேய்ப்பதில்லை, திடப்படுத்தவில்லை, பிணியாளிகளை குணமாக்கவில்லை, காயமுற்றோருக்கு கட்டுப்போடவில்லை, வழி தப்பியவற்றை திரும்ப கூட்டி சேர்க்கவில்லை, காணாமல் போனவற்றை தேடவில்லை என்று நமக்காக வழக்காடுகிறார். எசேக்கியல் 34:3,4 மற்றும் அந்த அதிகாரம் முழுவதையும் படித்தீர்களானால் அவரின் அன்பை யும், தன் மந்தையை காக்க அவர் செய்யும் செயல்களையும் நாம் அறிந்துக்கொள்ளலாம். அன்பானவர்களே இப்படியான கடவுளை நாம் அறிந்திருக்கிறபடியால் மற்றவர்களைப்போல...

யார் பெரியவர்?

பிரியமானவர்களே!!  இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் நம்மை அறியாமல் அநேக வேளைகளில் தவறு செய்துவிடுகிறோம். நமக்குள் இருக்கும் கோபம், பொறாமை, அவநம்பிக்கை, எரிச்சல் இவைகளை நாம் கடைப்பிடித்து பாவம்  செய்கிறோம். அதனால்தான் நம் ஆண்டவர் நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளையைப்போல் ஆகாவிட்டால் விண்ணுலகில் புகமாட்டீர்கள் என உறுதியாக  சொல்கிறார். அதோடல்லாமல் சிறு பிள்ளையைப்போல் தாழ்த்திக்கொண்டவரே விண்ணுலகில் மிகப்பெரியவர் என்று சொல்லியிருக்கிறார். மத்தேயு 18: 3 – 4 ,. நாம் தவறாமல் ஆலயத்துக்கு போகலாம். ஜெபம் செய்யலாம். ஆனால் நம் மனது வஞ்சகத்தினால் நிரம்பியிருந்தால் அதை கடவுள் அறியாரோ! நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கைக்கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். அதை அடக்கி ஆளவேண்டும். தொடக்கநூல் 4 :7 ல் காணலாம். நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் அவர் அறிந்திருக்கிறார். ஏனெனில் மனிதர் பார்ப்பதுபோல் கடவுள் நம்மை பார்ப்பதில்லை. மனிதர் முகத்தை பார்க்கின்றனர். ஆனால் ஆண்டவரோ நம் இதயத்தை [அகத்தை]பார்க்கிறார். 1 சாமுவேல் 16:7....