Category: இன்றைய சிந்தனை

செல்வம் என்னும் பொறுப்பு

லூக்கா நற்செய்தியாளரின் பல நல்ல சிந்தனைகளுள், முக்கியமானது செல்வத்தைப் பற்றிய அவரது கருத்தாக இருக்கிறது. செல்வத்தைப்பற்றியும், செல்வந்தர்களைப் பற்றியும், அதிகமாகச் சொல்கிறவர் லூக்கா நற்செய்தியாளர் என்றால், அது மிகையாகாது. லூக்கா நற்செய்தியை அனைவரையும் அனைத்துச் செல்கின்ற நற்செய்தி. ஏழைகளுக்கு ஆதரவு சொல்லும் அவர், செல்வந்தர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களின் குற்றங்களை, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதே வேளையில், அவர்களின் வாழ்வுக்கான வழியையும் காட்டுகிறார். அதன் ஒரு பகுதிதான் நாம், இன்று வாசிக்கக்கேட்ட நற்செய்திப் பகுதி. செல்வத்தைப் பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம். நமக்கும் பயன்படுத்தலாம். மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையிலும் பயன்படுத்தலாம். எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான், நமது மீட்பு அடங்கியிருக்கிறது என்பதை, நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார். செல்வம் என்பது கடவுளால் கொடுக்கப்படுகிற வெறும் ஆசீர்வாதம் மட்டுமல்ல, மாறாக, அது மிகப்பெரிய பொறுப்பு. செல்வந்தர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது, என்பது நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்....

லாத்தரன் பேராலய அர்ச்சிப்பு விழா

தொடக்க கால திருச்சபையில், ஆலயங்களின் நேர்ந்தளிப்பு நாளையும், விழாவாகவே கொண்டாடினர். ஆலயங்களின் நேர்ந்தளிக்கும் நாள் என்பது, பேராலயத்தின் பிறந்த நாள் என்றழைக்கும் வழக்கமும் இருந்தது. உரோமை திருவழிபாட்டு மரபில், அர்ப்பணிக்கப்பட்ட பேராலயத்திற்கான நான்கு விழாக்களை திருச்சபை முழுவதும் கொண்டாடுகிறோம். லாத்தரன் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம் மற்றும் புனித மரியாள் பேராலயம். இதில், லாத்தரன் ஆலயத்தின் அர்ப்பணிப்பு விழாவை இன்று கொண்டாடுகிறோம். முதல் நூற்றாண்டில், நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை வதைத்து, பலபேரை கொன்றொழித்தது வரலாறு. அப்படி அவன் கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, அவனுக்கு எதிராக சதிசெய்தவர் என்று, லாத்தரன் என்னும் உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்த பிளவுத்துஸ் லாத்தரன் என்பவர் கொல்லப்பட்டார். கொன்ற பிறகு, அந்த குடும்பத்திற்குச் சொந்தமான மாளிகை, உடைமைகள் என்று, அவனுடைய சொத்துக்களையும் அபகரித்துக்கொண்டான். பின்னர் வந்த உரோமை அரசனான கான்ஸ்டன்டைன் அரசர், கி.பி.313 ம் ஆண்டு, கிறிஸ்தவத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக மாற்றினார். அப்போது,...

சீடத்துவத்தின் சவால்கள்

இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33) கோபுரம் என்று, இயேசு சொல்வது திராட்சைத் தோட்டத்தில் பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் கோபுரமாக இருக்கலாம். பொதுவாக, பாலஸ்தீனப்பகுதிகளில் திராட்சைத் தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக, உயர்ந்த கோபுரங்களை அமைப்பர். அந்த கோபுரம் தங்குமிடமாகவும், திருடர்களிடமிருந்து தோட்டத்தைப் பாதுகாப்பதற்கு வசதியாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு கோபுரத்தைக் கட்டி முடிக்காமல், இடையில் விட்டுவிடுவது, ஒருவருக்கு அவமானத்தை தருவிக்கக்கூடியது. அதே போல, இயேசுவைப் பின்தொடர்ந்து விட்டு, இடையில் செல்வது, நமக்கு மிகப்பெரிய அவமானம். இயேசுவைப் பின்தொடர்வதற்கு முன்னால், நமது பலவீனங்கள், பலம் அவற்றைக் கருத்தில்கொண்டு, நம்மையே தயார்நிலையில் உட்படுத்தி, அவரை பின்பற்ற வேண்டும். ஆனால், இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தபிறகு, எக்காரணத்தைக் கொண்டும், அதனால் ஏற்படும் சவால்களைக் கண்டு பயந்து ஓடக்கூடாது. இயேசு ஏன் தன்னை முழுமையாகப் பின்பற்ற நம்மைக் கேட்கிறார்? முழுவதுமாக இயேசுவைப் பின்பற்றுவது எளிதான காரியமா? சவால்களை எதிர்கொள்வது கடினமானது அல்லவா, அப்படியிருக்கிறபோது, அது நம்மால் முடியக்கூடிய காரியமா?...

விண்ணரசின் விருந்தாளிகள்

கடவுள் வரலாற்றில் தனது பாதத்தைப்பதிக்கிற காலம் மெசியாவின் காலமாகக் கருதப்படும் என பாரம்பரியமாக யூதர்கள் நம்பினர். அவ்வாறு கடவுளின் நாள் வருகிறபோது, அனைவருக்கும் அவர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வார் என்றும், விருந்திலே லீவியத்தான் என்னும் மிகப்பெரிய கடல் விலங்கு உணவாகப் பரிமாறப்படும் என்றும் நம்பினர். இத்தகைய மெசியா தருகிற விருந்தைப்பற்றிதான், இயேசுவிடத்திலே அந்த மனிதர் கூறுகிறார். விருந்திலே பங்கெடுக்கிறவர்கள் யூதர்கள் தான் என்றும், பாவிகளுக்கும், புறவினத்தார்க்கும் அந்த விருந்திலே பங்கில்லை என்றும், அந்த மனிதர் தனது பாரம்பரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இந்த உவமையில் கடவுளை தலைவராகவும், விருந்தினர்களாக யூதர்களையும் இயேசு ஒப்பிடுகிறார். வரலாறு முழுவதும் யூதர்கள் ஆண்டவரின் நாளுக்காக, ஆண்டவர் வரலாற்றில் கால் பதிக்கும் நாளுக்காக காத்திருந்தனர். ஆனால், உண்மையில் இயேசு வடிவத்தில் இறைவன் கால் பதித்தபோது, அதை நம்பாமல், அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் இயேசுவைப் புறக்கணித்தனர். வீதிகளில் காணப்படுகிற ஏழைகள், கைவிடப்பட்டவர்களை பாவிகளுக்கும், புறவினத்தார்க்கும் ஒப்பிடுகிறார். இந்த விருந்திலே...

ஏழைகளுக்கு முன்னுரிமை

உறவுகளின் நெருக்கம் குறைந்து, விரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிற உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு உறவுகளுக்கு முக்கியத்துவம் இல்லை. பணக்கார உறவென்றால், தாங்கிப்பிடிக்கிறோம். அவர்களின் வீட்டில் ஒன்று என்றாலும், நாம் ஓடுகிறோம். ஆனால், ஏழைகள், எளியவர்கள் நமது உறவு என்று சொல்வதற்கே, வெட்கப்படுகிறோம். அவர்களை ஒதுக்கிவைக்கிறோம். அப்படித்தான், இந்த உலகம் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீண்டு வர நமக்கு அழைப்புவிடுப்பதுதான், இன்றைய நற்செய்தியில் வரும், இயேசுவின் வார்த்தைகள். இயேசு எளியோரை, வறியோரை, ஏழைகளை வாழ்வில் முன்னேற்றுவதற்கு அழைப்புவிடுக்கின்றார். லூக்கா நற்செய்தியாளருக்கே உள்ள தனிப்பாணியில் இந்த செய்தி மையப்படுத்தப்படுகிறது. ஏன் ஏழைகள் மையப்படுத்தப்பட வேண்டும்? ஏன் அவர்களுக்கு உதவுவதில் நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டும்? ஏனென்றால், நாம் செய்யக்கூடிய உதவி, கைம்மாறு கருதாமல் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். உதவி என்பது எதிர்பார்த்து செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. தேவையை கருத்தில்கொண்டு, எதையும் எதிர்பாராமல் செய்யக்கூடிய உதவியாக இருக்க வேண்டும். அதனை...