Category: இன்றைய சிந்தனை

திருவிருந்துக்கு தினமும் செல்கிறீர்களா?

மத்தேயு 22:1-14 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உடலுக்கு தினமும் உணவு உண்கிறோம். மூன்று வேளை உணவு உண்கிறோம். ஏதாவது நோய் என்றால் மருத்துவரை சந்திக்கிறோம். இப்படி உடலை மிகவும் கவனமாய் கவனிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் உடலைக் கவனிக்கிற நீங்கள் ஆன்மாவை கவனித்தீர்களா? ஆன்மாவிற்கான உணவு வழங்கினீர்களா? என்ற கேள்விகளோடு வருகிறது. திருமண விருந்து என்பது திருவிருந்து திருமண விருந்தாகிய திருவிருந்துக்கு நாம் எல்லோருமே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்மில் பலர் பல சாக்குப்போக்குகளைக் கூறுகிறோம். கடவுள்தான் 24 மணிநேரத்தை கொடுத்தது அவருக்கு ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் கொடுக்க நம்மால் இயலவில்லை. பெரும்பாலும் வார திருப்பலிக்கு வருவதில்லை. இது சரியா? திருத்தலாமா நம்மை. தினமும் ஆன்மாவிற்கு...

அதிஷ்ட தேவதை உங்கள் கதவைத் தட்டட்டும்…

மத்தேயு 20:1-16 இறையேசுவில் இனியவா்களே! பெருமகிழ்வோடு இந்த நாளை கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எனக்கு மட்டும் அதிஷ்டமே கிடையாது என புலம்புவோர் நம்மிலர் பலர் இருக்கின்றனர். இவர்கள் கடைசி வரை புலம்பிக்கொண்டே தான் இருப்பார்களே தவிர, அதிஷ்ட தேவதை கதவைத் தட்ட என்ன செய்ய வேண்டும். என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதை ஒருபோதும் நினைப்பதே இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல இரண்டு யோசனையை வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அது என்ன யோசனைகள்? தங்கள் வேலையைப் மட்டும் பார்க்க வேண்டும் நமக்கு பிறருடைய வேலையைப் பார்ப்பதே மிகவும் பழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்ட நாம் எனக்கு லக்கே இல்லை என சொல்வது நியாயம் தான். ஏனென்றால் என் வேலையின் வளர்ச்சிக்காக நான் நினைக்காமல், உழைக்காமல் அடுத்தவர் வேலையில்...

ஆட்சியைப் பிடிக்கனுமா? அரியணை வேண்டுமா?

மத்தேயு 19:23-30 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆட்சி, அரியணை இந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்கும்போதே நம் மனதிற்குள்ளே மகிழ்ச்சி ஊறுகிறது. எப்போது இவைகள் நமக்கு கிடைக்கும் என்ற ஏக்கம் அதிகமாகவே உள்ளது. இன்றைய நற்செய்தி வாசகம் இந்த ஏக்கத்தைப் போக்கி வைக்கிறது. பேதுரு, ஆண்டவர் இயேசுவைப் பார்த்து நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்றுக் கேட்டபோது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இரண்டு விதமான வாக்குறுதிகளை வழங்குகிறார். வாக்குறுதி 1: உங்களுக்கு விண்ணக ஆட்சி கிடைக்கும். மேலும் அந்த ஆட்சியிலே நீங்கள் அரியணையில் இருப்பீர்கள் என்கிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சி. அங்கு அரியணை உண்டு. அந்த அரியணைக்கு முடிவே...

ஒரே நாளில் நிம்மதி.. நிறைவு…

மத்தேயு 19:16-22 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இந்த உலகில் பிறந்த பெரும்பாலான மக்களுக்கு ஒரு ஆசை கண்டிப்பாக இருக்கிறது. அதுதான் அவர்களின் பிரதான இலட்சியமாக இருக்கிறது. அது என்னவெனில் நிம்மதியை பெற வேண்டும், நிறைவோடு வாழ வேண்டும் என்பது. நிறைவோடும் நிம்மதியோடும் வாழ வேண்டும் என்ற ஆசை உடையவரா நீங்கள். வாசிங்க வாசிங்க இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசிச்சிக்கிட்டே இருங்க. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் நிம்மதியோடும், நிறைவோடும் வாழ இரண்டு வழிமுறைகள் சொல்லித் தரப்படுகின்றன. 1. கண்டிப்பாக கடைப்பிடி… எதைக் கடைப்பிடிக்க வேண்டும்? இறைவன் நமக்கு அருளிச் செய்த பத்துக்கட்டளைகள் பத்து. இந்த பத்தையும் பசுமரத்தாணிபோல நெஞ்சில் பதித்து கடைப்பிடிக்க வேண்டும். 2. கண்டிப்பாக பகிர்ந்தி… எதை பகிர...

ஆன்மீக உணவு ஆளையே மாற்றும்…

யோவான் 6:51-58 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 20ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். புனித கிளாரா, இத்தாலியின் அசிசி நகரில் பிரபுக்கள் குடும்பத்தில் 1194 ஜூலை 16ம் தேதி பிறந்தார். இவருக்கு 18 வயது நடந்தபோது, அசிசியின் புனித பிரான்சிஸ் ஆற்றிய தவக்கால மறையுரையால் ஈர்க்கப்பட்டார். தனது இரு தோழிகளுடன் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறி, தமியான் ஆலயத்தில் தங்கி இருந்த புனித பிரான்சிசை சந்தித்தார். அங்கு இவர் துறவற வாழ்வுக்கான ஆடைகளைப் பெற்றுக் கொண்டார். அன்றிலிருந்து துறவற வாழ்வை சொந்தமாக்கிக் கொண்டார். 1244ம் ஆண்டு, அரசன் “இரண்டாம் ஃபிரடெரிக்கின்” இராணுவத்தினர் அசிசியை கொள்ளையிட வந்தனர். அப்போது, அர்ச்சிஷ்ட நற்கருணை ஆண்டவரை கையிலேந்தியபடி கிளாரா வெளியே வந்தார். நற்கருணை நாதரின் வல்லமையாலும், திடீரென நிகழ்ந்த...