Category: இன்றைய சிந்தனை

திருமண வாழ்க்கை எப்படி போகுது?

மாற்கு 10:2-16 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 27ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கட்டை விரலில் அடிபட்ட முதியவர் ஒருவர் தையலைப் பிரிக்க மருத்துவமனைக்கு வந்தார். நேரம் ஆக ஆக பதட்டமடைந்து கொண்டிருந்தார். “நான் எட்டரை மணிக்கு செல்ல வேண்டும்’ என்று தவியாய் தவித்தார். மருத்துவர் அவர் முறை வந்ததும் பக்குவமாகத் தையலை நீக்கினார். அவருக்கு வலிக்கக்கூடாது என்று பேசிக்கொண்டே தையலைப் பிரித்த அந்த மருத்துவர், “ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்?’ என்று கேட்டார். அந்த முதியவர், “நான் மருத்துவமனையில் இருக்கும் என் மனைவியோடு சிற்றுண்டி அருந்த சரியாக எட்டரை மணிக்கச் செல்லவேண்டும்’ என்று சொன்னார். “உங்கள் மனைவிக்கு என்ன ஆயிற்று’ என்று அக்கறையாக விசாரித்தார் மருத்துவர். “அவள் கொஞ்ச நாட்களாகவே அல்ஜீமர் என்கிற ஞாபகமறதி...

உங்கள் பெயர் இருக்கிறதா?

லூக்கா 10:17-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நமது பெயர் திருமண அட்டையில் வர வேண்டும், திருவிழா அழைப்பிதழில் வர வேண்டும் மற்றும் மேடையில் நம் பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது உண்டு. அதுவெல்லாம் உயர்வல்ல. நம் பெயர் விண்ணத்தில் இருக்கிறதா? அதுதான் மிக முக்கியம். இன்றைய நற்செய்தி வாசகம் விண்ணகத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துப் பாருங்கள். பெயர் இல்லையென்றால் எழுத முயற்சி எடுங்கள் என நம்மோடு பதமாக பேசுகிறது. மண்ணகத்தில் நாம் செய்யும் சிறப்புமிக்க செயல்கள் தான் விண்ணத்தில் நம் பெயர்கள் எழுதப்பட மிகச் சிறந்த காரணிகளாக உள்ளன. மண்ணகத்தில் நாம் இரண்டு செயல்களின் மீது கவனம் செலுத்தினால் அதுதான்...

திருந்த மறுத்தால் பின்விளைவுகள் அதிகம்

லூக்கா 10:13-16 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் உடலிலும் மனதிலும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். நம் பாவங்கள் பல நேரங்களில் அந்த ஆரோக்கியமான சூழ்நிலையை வழங்குவதில்லை. அந்த நேரங்களில் எல்லாம் நாம் வலுவற்றவர்களாக இருக்கிறோம். அப்படி வலுவற்றவர்களாய் இருக்கும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் வலு கொடுப்பதாய் வருகிறது. பாவங்களிலிருந்து திருந்த அழைக்கிறது. திருந்தவில்லை என்றால் பின்விளைவுகள் அதிகம் எனவும் சொல்கிறது. ஆண்டவர் இயேசு திருந்த மறுத்த நகரங்களுக்கான பின்விளைவுகள் என்னென்ன என்பதை விளக்குகிறார். ஏன் உங்களுக்கு நல்லது செய்தேன்? என்று கடவுள் மனவருத்தம்படும் அளவுக்கு பாவம் கொண்டு செல்கிறது. திருந்தாவிடில் பின்விளைவுகள் இரண்டு. 1. சினம் கடவுள் பல சூழ்நிலைகளை நமக்கு அமைத்து தருகிறார்....

வேலை நிறைய இருக்கு வேலைக்கு வாங்க…

லூக்கா 10:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இயேசு காண விரும்பிய இறையாட்சி இன்னும் நிறைவேறவில்லை. அதற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. அந்த வேலையைச் செய்வதற்கு வாங்க என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இறையாட்சியைக் கொண்டு வருவது என்பது இயேசுவின் இன்பக்கனவு. அந்த கனவை நிறைவேற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அநத கனவை இரண்டு விதங்களில் நாம் நிறைவேற்றலாம். 1. தினமும் தேடல் இறையாட்சிப் பணிக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்ற தனிப்பட்ட தேடல் என்பது ஒவ்வொருக்கும் இருக்க வேண்டும். அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இருக்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து இந்த வேலையைச் செய்ய வேண்டும். அப்போதுதான்...

காலம் தாழ்த்தாதே… கடவுளின் கைப்பிடி

லூக்கா 9:57-62 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுளைத் தேடுவதற்கும் கடவுளோடு பேசுவதற்கும் ஏன் கடவுளாயும் மாறுவதற்கும் நமக்கு பலவிதமான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை எல்லாம் நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. அதனால் நாம் இழந்த ஆசீர்வாதங்கள் எண்ணிலடங்கா. இந்த நாள் கடவுளோடு சேருவதற்கான நாள். ஆகவே இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்த நம்மை வருக! வருக! என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். கடவுளோடு நாம் இழந்த வாய்ப்புகளை திரும்ப பெற, அவரின் ஆசீரோடு வாழ இரண்டு விதமான முயற்சிகளை கையிலெடுக்க வேண்டும். 1. கடவுளுக்கு முக்கியத்துவம் நற்செய்தியில் பார்க்கின்ற போது கடவுளுக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்காததைப் பார்க்கிறோம். அவர்கள் தங்களுடைய சுயநல காரியங்களில்...