Category: தேவ செய்தி

அன்பை நம்மேல் பொழிந்திடும் ஆண்டவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மீது அன்புக்கூர்ந்தார். யோவான் 3: 16. இந்த உலகில் வந்த யாவரையும் மீட்கும்படி தமது அன்பு முழுவதையும் நம்மேல் பொழிந்து நமக்கு நித்திய வாழ்வை அளித்திருக்கிறார். நாம் கவலை அற்றவர்களாய் வாழும்படி நம்முடைய சுமையை அவரேசுமந்து நமக்கெல்லாம் இளைப்பாறுதலை தந்திருக்கிறார். கனிவும், மனத்தாழ்மையும் உள்ள ஆண்டவர் நமது நுகத்தை அவர்மேல் ஏற்றுக்கொண்டு நமக்கு விடுதலை அளித்துள்ளார். அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. அவருக்காகவே நாம் இருக்கின்றோம். அதற்காகவே நம்மை படைத்துள்ளார். அந்த அன்பின் தெய்வத்தின் வழியில் நடந்து இளைப்பாறுதலை பெற்றுக்கொள்வோம். அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. ஆண்டவரின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் . அவரின் அன்புக்கு அழிவே இல்லை. இந்த உலகில் எந்த ஒரு கடவுளும் செய்யாத காரியத்தை நம்முடைய ஆண்டவர் நமக்கு செய்திருக்கிறார். அன்பின் மகத்துவத்தையும்,வல்லமையையும், நமக்கு புரிய வைக்கவே மனித உருக்கொண்டு இந்த உலகிற்கு வந்தார்....

நன்மையால் தீமையை வெல்லுங்கள்!! ரோமர் 12 : 21

தீமையையை வெறுத்து நன்மையை பற்றிக்கொண்டால் அப்பொழுது அந்த காரியம் கடவுளுக்கு மிகவும் பிரியமாக இருக்கும். ஏனெனில் நம்முடைய அன்பு கள்ளமற்றதாய் இருப்பதையே ஆண்டவர் எதிர்பார்க்கிறார். மற்றவர்களிடம் நம் உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள். பிறரை உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள் என்று ரோமர் 12 : 9,10 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். இரண்டு நண்பர்கள் மிகவும் பிரியமாய் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்போடு பழகி வந்தனர். இதனால் பொறாமை கொண்ட இன்னொருவர் அவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று நினைத்து அவர்களிடம் அன்புக் காட்டுவதுபோல் நன்றாக பேசி அவர்களின் சில ரகசியங்களை அறிந்துக்கொண்டு ஒவ்வொருவரிடம் இல்லாத கதையை சொல்லி அவர்களிடே பிரிவினையை உண்டு பண்ணி அதன் மூலம் தான் சில நன்மைகளை அனுபவித்து வந்தார். ஒரு காலக்கட்டத்தில் அவரின் குணத்தை அறிந்துக்கொண்ட நண்பர்கள் இருவரும் கலந்து மனம் விட்டு பேசி தாங்கள் பிரிந்ததற்கு இன்னொருவரின் சூழ்ச்சியே காரணம் என்று தெரிந்துக்கொண்டு மறுபடியும் நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். இந்த உலகில் தீமை செய்பவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.நாம்தான்...

உலகை வெல்லுவது நம்முடைய நம்பிக்கையே!!

நம்பிக்கையானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்,காணப்படாத வைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரேயர் 11 : 1. நம் கண் முன்னே தோன்றும் காரியத்தை யார் வேண்டுமானாலும் நம்பலாம். நம் கண்ணுக்கு புலப்படாத, நாம் அறியாத ஒரு காரியத்தை நம்புவதையே மேன்மையாக ஆண்டவர் நினைக்கிறார். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும். இந்த உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.1 யோவான் 5 : 4. நம்முடைய நம்பிக்கை உறுதிப்படும் பொழுது அதைக் கனப்படுத்தவே ஆண்டவர் விரும்பி நமக்குள் செயலாற்றி அந்த நம்பிக்கையை நிறைவேற்றித்தருவார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம்.அதை நம்புகிறோம்.அப்படியிருக்க பல நேரங்களில் மனம் சோர்ந்து போய் வாழ்க்கையை வெறுமையாய் நினைக்கிறோம். நாம் இயேசுவை இறைமகன் என்று நம்பினால் நம்மைத் தவிர இந்த உலகத்தை யாரால் வெல்ல முடியும்?ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதை உடையவர்கள் அவரையே நம்பியிருக்கிறபடியால் அவர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். கடவுள் நமக்கு நம்பிக்கையில் பலப்படும் பொருட்டு ஞானத்தை உடைய ஆவியையும், ஆலோசனை உடைய ஆவியையும், பெலனை கொடுக்கும் ஆவியையும், அறிவை உணர்த்தும் ஆவியையும், அவருக்கு...

நம்முடைய பெற்றோரை மதித்து அன்புக்காட்டி நடப்போம். வி.ப.20:12

கடவுள் நமக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் ஒரு கட்டளை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும், உன் தாயையும், மதித்து நட என்பதாகும். விடுதலை பயணம் 20 : 12. சிலசமயங்களில் நாம் நம்முடைய பொறுமை-யின்மையால் அவர்கள் மேல் கோபம் கொண்டுவிடுகிறோம். நம்மை பெற்றெடுத்து நம்மை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவர அவர்கள் எவ்வளவோ தியாகங்களை செய்கிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்கவே கூடாது. ஒரு சின்ன கதையை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். ஒருநாள் ஒரு தந்தையும், மகனும் வீட்டின் ஜன்னல் அருகே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த தந்தைக்கு கொஞ்சம் வயதாகிவிட்டதால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாகிவிட்டது. அந்த ஜன்னலின் தொலைவில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. அது கருப்பாக இருந்ததால் தந்தை மகனை நோக்கி அங்கு ஏதோ கருப்பாய் உட்கார்ந்திருக்கிறதே ! அது என்ன என்று கேட்டார்? அப்பொழுது மகன், அப்பா அது ஒரு காகம் என்று சொன்னான். தந்தைக்கு வயதாகிவிட்டதாலும் தான் கேட்டதை மறந்துவிட்டதாலும் மறுபடியும் கொஞ்ச...

இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. எபிரேயர் 9 : 22

கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும் உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று கடவுள் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் நம்மை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்டுள்ளது. கூடாரத்தின் மீதும் வழிப்பாட்டுக்கலன்கள் அனைத்தின் மீதும் அவர் இரத்தத்தை தெளித்தார். உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை என்று எபிரெயர் 9:21,22 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாக நமக்காக ஒப்புக்கொடுத்தார். நம்மை மீட்கும் பொருட்டே அவ்வாறு செய்தார். ஏனெனில் ஒரே மனிதனால் இந்த உலகில் பாவம் வந்ததுப்போல் அந்த பாவத்தை எல்லாம் நிவர்த்தி செய்யும் பொருட்டு உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். ஒரேமுறை நாமும் சாவுக்கு உட்படுகின்றோம். பின்னர் இறுதி தீர்ப்பு வருகிறது. இதுவே நமக்காக நியமித்த நியதி. ஆண்டவராகிய கிறிஸ்துவும் நம் எல்லோருடைய பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மையே பலியாகக் கொடுத்தார். ஆனால் அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். பாவத்தின் பொருட்டு அல்ல....